Vadapalani murugan koil Tamil Archanai

தமிழ் புத்தாண்டு முதல் வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும் என்று வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,500 க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் இன்னும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், சிவன் கோவில் என ஒரு சில கோயில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.  

இந்தநிலையில் தற்போது தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *