Koovagam chithirai Festival

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகபுகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று வெகுவிமர்சையாக தொடங்கியது. 

இதில் கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வருகின்ற 16-ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, பின்னர் பந்தலடியில் திருநங்கைகளுக்கான தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *