Selva Ganapathy latcharchanai

புதுச்சேரியில் உள்ள ஶ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் நடைபெற்ற ஏகதின லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி,  கிருஷ்ணா நகரில் பிரசித்திபெற்ற ஶ்ரீ செல்வகணபதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 8 ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சர்கள் மற்றும் குருக்கள் விநாயக மந்திரங்கள் முழங்கினர். பின்னர் விநாயகருக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *