Ponneri thiruvizha

செங்குன்றம் அருகே அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீ மிதி திருவிழா. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தின் 54ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த நிலையில் திருவிழாவின் இறுதி நாளான இன்று கோவிலின் எதிரே தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *