Coconut Sivan

மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் நகரியில் 100 அடி உயர தேங்காய் சிவன். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சமீபத்தில் உள்ள கீழப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டுள்ள 100 அடி உயர தேங்காய் சிவன் சிலை பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

கீழப்பாடு கிராமத்தில் உள்ள  திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி 100 அடி உயர சிவன் சிலையை பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைத்துள்ளார்.

சுமார் ஒரு மாத காலம் உழைத்து கணேஷ்  ஏற்படுத்திய தேங்காய் சிவன் சிலையை பக்தர்கள் பார்த்து ரசித்து தரிசித்து செல்கின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *