hanuman vazhipadu

எளிமையாக வணங்கக்கூடிய கடவுள்களில் முதன்மையானவர் ஹனுமன்.  அதே நேரத்தில்  மனதில் எந்த அழுக்கும் இல்லாமல் வழிபட்டால் தான் அவரது ஆசியை பெற முடியும். 

ஹனுமனிற்கு பிடித்தமான படையல் என்பது வெல்லம் மற்றும் வறுத்த கடலைதான். மேலும் அவருக்கு கோதுமை மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்பட்ட உணவையும் படைத்து வழிபடலாம். இதன் மூலம் அனுமனின் ஆசியை பெற முடியும். 

தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு மற்ற கடமைகளை எல்லாம் முடித்து விட்டு அருகில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று வரலாம். அருகில் ஹனுமன் கோவில் இல்லை என்றால் வீட்டிலேயே சிறிய அனுமன் சிலைக்கோ அல்லது படத்திற்கோ செந்தூரம், பூக்கள், வெல்லம், ஆகியவற்றை வைத்து பஞ்சோப்சாரம் செய்யலாம். இதன் மூலமும் ஹனுமனின் ஆசியை பெறலாம். 

ஹனுமனின் உருவரும் 5 வகைகளாக வணங்கப்படுகிறது அதனால் நீங்கள் பஞ்சமுக ஹனுமனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயையும், வெல்லத்தையும் நெற்றியில் இட்டுக்கொண்டால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.

தினமும் நீங்கள் மற்ற கடவுள்களை வணங்கும்படியே ஹனுமனது மந்திரத்தையும் தினமும் சொல்ல வேண்டும். நீங்கள் நேரடியா ராமனை வணங்குவது மூலமும் அனுமனின் அருளை பெறலாம். தினமும் 108 முதலை ராமஜெயத்தை ருத்ராட்சங்கள் கொண்டு சொல்வது மூலம் அதிஷ்டங்கள் உங்களை தேடி வரும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *