golden-nandhi-bagavan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறுகிறது. ரிஷபேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், சங்காபிஷேகம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, கோபூஜை, பிரதோஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ம் நாள் மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறும்.

இந்த கோயிலின் நந்தி தங்கநிறத்தில் காட்சியளிப்பதைக் காண பக்தர்கள் குவிகின்றனர். இந்தக் கோயில் நந்தி சிலை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதைக் காணலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *