chandra-prabai-vaganathil-ezhumalayan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 7-வது நாளான இன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்., 21ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒவ்வொரு நாளும், மலையப்ப சாமி வெவ்வேறு அலங்காரங்களில் மாடவீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்தவகையில், பிரமோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று மாலை தங்கதேரில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து இரவு தங்க யானை வாகனத்தில் மாட வீதிகளில் மலையப்ப சாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று, காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில், மாடவீதிகளில் உலா வந்தார். அதனைத் தொடர்ந்து இன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. இரவில் குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வருகிறார். நாளை மறுதினம் சக்கரத் தாழ்வார் தீர்த்த வாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *