63

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிவன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளான இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாள் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து நேற்றய தினம் பங்குனி விழாவின் 7ம் நாளையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது விநாயகர், கபாலீஸ்வரர், அம்மன், முருகன், சன்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வந்தன திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இன்று பங்குனி விழாவின் 8 ம் நாள் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் முக்கிய நான்கு மாட வீதிகளான கீழவீதி , தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியே நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிக்கனக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். சைவ சமயத்தில் மூவர் என அழைக்கபடும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என 63 நாயன்மார்களுடனன் கபாலீஸ்வரர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *