9

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை முதல் 5 நாட்களுக்கு பகல் பத்து உற்சவம் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் நடைபெறும். இந்த 5 நாட்களும் மாலை 5 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதி கிடையாது. தாயார் புறப்பாடும் கிடையாது. மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நடைபெறும். ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் ராப்பத்து உற்சவமாகும். 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முடிய தினமும் மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைவார். இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். ஜனவரி 17-ந்தேதி ரெங்கநாச்சியார் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தை அடைவார். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதித்தல் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 1.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். 18-ந்தேதி மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை அடைவார். இரவு 11 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை சென்றடைவார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *