2017-11-15-06-57-23

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, நேர ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறினார். இதற்காக திருமலையில் 29 இடங்களில் 150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனத்திற்காண நேரம் குறித்து பதிவு செய்யப்பட்ட டொக்கன் வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *