2017-11-15-06-24-21

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நவம்பர் 16 ஆம் தேதி திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் டிசம்பர் 19 -ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இதையொட்டி, விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது முதல் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *