singa-sirpththrkul-oru-athisayam

 

மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. அதுபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாறு சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.  சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்  அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.  ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.   அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது   அதுபோல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர்.   அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும்.  வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.  அதுபோல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படை வீர்ர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *