2017-10-31-05-37-34

திருமலை திருப்பதி தேவஸ்தானமும், தாசா சாகித்ய அமைப்பும் இணைந்து நடத்திய படி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 3 மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதியில் படி உற்சவத்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி அலிபிரியில் உள்ள பாதாள மண்டபத்தில் படி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தாசா சாகித்ய அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தஸ்வாமிஜி அலிபிரியில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர் மாலை அணிவித்து தூப, தீப, கற்பூர ஆரத்தி காட்டி ஆராதனை செய்தார். தாசா பக்தர்கள் அங்கு அமர்ந்து நாம சங்கீர்த்தனை, பஜனை பாடல்கள் பாடினர். பின்னர் பக்தர்கள் அனைவரும் படியேறி திருமலை சென்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *