108

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழா, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நந்தி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலை, 5 கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், திருத்தணி பெரிய தெரு பஜனை குழுவினர் பங்கேற்று, முருகன் பக்தி பாடல்களை பாடினர். இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *