Tag: Vinayakar

  • Vinayakar Thuthi

    உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். 

    கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். 

    தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

    திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். 

    உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

    வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

    நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.

    'பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.0

  • Vinayakar Silaigal

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, குடியிருப்புப் பகுதிகள், வீதிகள், முக்கியச் சந்திப்புகளில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கி வந்து தங்கள் பகுதிகளில் வைத்து வர்ணப் பூச்சு முடித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பல அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விநாயகர் சிலைகளை விற்பனைக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாபாரிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். அந்த வகையில், வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
     

  • Vinayakar thuthi

     உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். 

    கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். 

    தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

    திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். 

    உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

    வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

    நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.

    'பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

  • Vinayakar Wednesday

    முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார்.  இதற்காக வெறும் ஒரு ரூபாயை வைத்தே அந்த விநாயகப்பெருமானை ஏமாற்றி விடாதீர்கள். அவருக்குப் பிடித்த மற்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும். விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    எந்தெந்த பொருட்களை புதன்கிழமை அன்று வினாயகரிற்கு வாங்கி கொடுத்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைத்து, முட்டிமோதி ஒரு தொழிலை ஆரம்பித்து இருப்போம். ஆனால் அதில் முன்னேற்றமே இருக்காது.

    ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றங்கள் இருக்காது. தேவையற்ற நபர்களால் பிரச்சனை வரும். சம்பள உயர்வு இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது. கொடுத்த கடன் திரும்பி வராது. இப்படி நம்முடைய வருமானத்தை தடுக்கும் தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். அடுத்ததாக ஈட்டிய செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம்.

    வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது. அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. இதேபோல் உங்களது வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினம்தோறும் இரண்டு ஏலக்காயை நைவேத்தியமாக படைத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று. 
     

  • Vinayakar viradhangal

    ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. 

    சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

    மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி'என்று வழங்குவர். 

    ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
     

  • Vinayakar flowers

    விநாயகருக்கு உகந்த 21 இலைகளும், அதன் பலன்களும்..

    1. முல்லை இலை – அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. வில்வம் இலை – இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

    5. இலந்தை இலை – கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப்பெறும்.

    7. வன்னி இலை – பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

    8. நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

    10. அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    11. எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

    12. மருதம் இலை – மகப்பேறு கிட்டும்.

    13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணிவு கைவரப்பெறும்.

    14. மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

    15. தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

    16. மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

    17. அரசம் இலை – உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

    18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

    19. தாழம் இலை – செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

    20. அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

    21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
     

  • Vinayakarai vazhipadum murai

    விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

    பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

    தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

    அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.
     

  • Vinayakar silai oorvalam

    கடந்த இரண்டாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்தை அடுத்து ஏழு நாட்கள் கழித்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகள் திருவொற்றியூர் எண்ணூர் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்பகுதியில் விநாயகர் சிலைகள்  கரைக்கப்பட்டன. 

    7 நாட்கள் வழிபட்ட விநாயகரை மேளதாளங்களுடன் ஆடல் பாடல்களுடன் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக அழைத்துவந்து கடலில் கரைத்தனர் புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை ராயபுரம் புளியந்தோப்பு பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 256 பிள்ளையார் சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராட்சத கிரேன் மூலம் கொண்டு சென்று கரைத்தனர். 

    இதேபோன்று மணலி மாதவரம் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணா கடல் பகுதியிலும் திருவற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுகளில் கொண்டுசென்று நடுக்கடலில் கரைத்தனர் கடைசி நாளான இன்று எண்ணூர் திருவொற்றியூர் காசிமேடு மூன்று இடங்களிலும் 356 சிலைகள் கரைக்கப்பட்டன. 
     

  • Vinayakar silaigal Neernilayil Karaippu

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள்  நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன.

    வினாயகர் சதூர்த்தி விழா கடந்த 2 ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்த சிலைகளை மூன்றாம் நாளான இன்று கடலில் கரைக்கும் நிகழ்சி நடந்தது.  திண்டிவனம், மைலம், ஒலக்கூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாயகர் சிலைகளை ஊர் வலமாக எடுத்துவரப்பட்டு மரக்காணம் அருகே கடலில் கரைக்கப்பட்டது.

    தாரை, தப்பட்டை முழங்க ஆடல் பாடலுடம் ஊர் வலமாக எடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை மரக்காணம் பகுதியில் உள்ள கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம் ஆகிய இடங்களுக்கு எடுத்துசென்றனர். இவற்றை அப்பகுதியில் இருந்த மீனவர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் பைபர் படகுகளில் எடுத்துசென்று ஆழ்கடலில் கரைத்தனர். 

    கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் டிரம்ஸ், வயலின், கீ போர்டு வாசிக்கும் விநாயகர் சிலைகள் மக்களை பெரிதும் கவர்ந்தன. தொடர்ந்து இப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட சிலைகள் துடியலூரை அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன. 

    மதுரை மாவட்டம் மேலூரில் கோலாகலமாகத் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. 

    புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பொதுக்குளத்தில் கரைக்கப்பட்டன. செண்டை வாத்தியம் முழங்க இளைஞர்கள் நடனமாடியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
     

  • Ketkum varam tharum Poiyamozhi vinayakar

    குள்ள குள்ளனே.. குண்டு வயித்தனே..
    வெள்ளிக்கொம்பனே.. விநாயக நமஸ்தே.

    எதுவானாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் நாம், முழு முதல் கடவுளாக வழிபடுவது அந்த பிள்ளையாரைத்தானே. 

    கொஞ்சமாய் மஞ்சளை பிடித்துவைத்தாலே அங்கு வந்துவிடும் பிள்ளையார், ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலுமாக அமர்ந்து கொண்டு கேட்டவர்க்கு கேட்ட வரம் தருகிறார். 
    அப்படிப்பட்டவர் விழுதே விடாத ஆலமரத்தின் அடியில் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் இடம் எது என்று தெரியுமா?

    பொய்யாமொழி விநாயகராக தீவனூர் என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கிறார். 
    திண்டிவனம் – செஞ்சி சாலையில் தீவனூர் என்ற சிறிய கிராமத்தில் பெரிய குளத்தருகே சுயம்புவாக இருக்கிறார். 
    கோயிலுக்கு செல்லும் பாதையில் முதலில் ஆதிவிநாயகர் கோயில் சிறியதாக காட்சியளிக்கும். பொய்யாமொழி பிள்ளையாரை பார்ப்பதற்கு முன் ஆதி விநாயகரை பார்த்து ஒரு கற்பூரம் ஏற்றிவிட்டு செல்வார்கள். 

    பின்னர் குளக்கரையை கடந்து சென்றால், தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார் கோயிலுக்குள் நுழையலாம்.
    சுயம்பு வடிவில் லிங்கமாக காட்சியளிக்கும் பிள்ளையார், கணபதி லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். அபிஷேக ஆராதனைகளின்போது அவரின் பிள்ளையார் ரூபத்தில் துதிக்கையுடன் வெளிப்படுவதை பார்க்க முடியும். 

    முன்னொரு காலத்தில் இந்த கோயில் பூசாரி, வியாபாரி ஒருவரிடம் பூஜைக்கு மிளகு கேட்க, அந்த வியாபாரி கொடுக்க மனமில்லாமல் உளுந்துதான் இருப்பதாக கூறிவிட்டார். பின்னர் வியாபாரத்திற்கு போன இடத்தில் அவரது அத்தனை மிளகு மூட்டைகளும் உளுந்து மூட்டைகளாக மாறிப் போயிருந்தன. எனவே, சொன்ன மொழியை உண்மையாக்கிய இவர் பொய்யாமொழி விநாயகராக அழைக்கப்படுகிறார். 

    இக்கோயிலில் கொடி மரத்திற்கு வலப்புறம் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கொடிமரத்தை கடந்து சென்ற உடனேயே பொய்யாமொழி பிள்ளையாரை பார்க்கலாம். அண்மைக் காலத்தில்தான் கோயில் புனரமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் வழக்கம்போல குளக்கரை பிள்ளையாராகத்தான் இருப்பார்.

    குளக்கரையை ஒட்டி காணப்படும் ஆலமரங்கள் விழுதுவிட்டு காட்சியளிக்கும் நிலையில், கோயிலுக்கு பின்புறம் 3 ஆலமரங்கள் உள்ளன. மூன்றும் சிவன், பிரம்மா, விஷ்ணுவாக கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். இந்த மூன்று ஆலமரங்களும் விழுதில்லா மரங்கள் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.

    பிள்ளையாரை வணங்குபவர்கள், இம்மரங்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். அந்த இடத்தில் பொங்கல் வைக்கவும், காதுகுத்து போன்ற எளிய குடும்ப விழாக்களுக்குமாக இடம் இருக்கிறது. எப்போது அங்கு சென்றாலும் யாராவது பொங்கல் வைப்பதும் புதுமணத் தம்பதியர் வந்து ஆசி பெற்றுச் செல்வதுமாக இருப்பார்கள். 
    திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. 

    பல ஜமீன்தார் பரம்பரையினரும், அவர்களை சார்ந்தவர்களும் குலதெய்வமாக வழிபட்ட வரலாறு கொண்டவர் பொய்யாமொழி விநாயகர். அந்த காலத்தில் பல குடும்பங்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவர். ஆண்டுக்கு ஒருமுறையாவது இக்கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவது இன்றும் பல குடும்பங்களின் வழக்கமாக உள்ளது. 

    இவரிடம் கேட்ட வரத்தை பொய்க்காமல் நிறைவேற்றித் தருபவர் என்பதாலும் பொய்யாமொழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இதனால் பொய்யாத வரம் தரும் பிள்ளையாரை ஒருமுறை தரிசித்துவிட்டு வரலாமே..

    பாலும் தெளிதேனும், பாகும் 
    பருப்பும் இவை நான்கும் கலந்த
    நான் உனக்குத்தருவேன்
    கோலம் செய்
    துங்கக் கலிமுகத்துத் தூயவனே 
    நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!

    -பாமா, எழுத்தாளர்