Tag: Murugan

  • Murugan sukrvara viradham

    முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

    நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

    நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

  • murugan arul kooda gayathri mandiram

    திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஒட்டி முருகனுக்கு "சரஹணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம்,உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சடாட்சர வழிபாட்டு மந்திரத்தில் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக வேறு வேறு மர சட்டங்களில் சடாட்சரம் என்னும் அறுங்கோண யந்திரத்தை அமைத்து வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் என கூறப்படுகிறது.

    வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்திலும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் சடாட்சரம் என்னும் இந்த அறுங்கோண யந்திரத்தை அமைத்து வழிபடுவது பலனளிக்கக் கூடியதாகும்.

    ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்…

    ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

    இம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.
     

  • poomparai murugan temple

    கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்*

    இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.

    இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை

    1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,
    2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. 

    உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர் 

    ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால்  உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

    சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும். 

    பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். 

    அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் 

    அக்கோ விலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

    பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும்

     ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், 

    அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியுள்ள சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

    அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். 

    அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,

    இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். 

    அவரின் பக்கத்திலேயலே அருணகிரி நாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

    வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.

  • Salem muthumalai murugan silai

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்து மலை அடிவாரத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது . 2016 ம் ஆண்டு துவங்கப்படு ஆறு ஆண்டுகளாக  நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வண்ணமிகு அழகு முருகன் சிலைக்கு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.  இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நாமக்கல் தர்மபுரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். 

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் என்பவர் இந்த கோவிலை கட்ட ஆரம்பித்து, அவருடைய மகன் ஸ்ரீதர் அவர்களால் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை தான் இதுவரை உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என பிரசித்தி பெற்று வந்தது இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கோயிலை வடிவமைத்த ஸ்தபதி  திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர்,  சேலம் , புத்திரக்கவுண்டம்பளையத்தில் உள்ள இந்த  முதுமலை முருகன் சிலையை வடிவமைத்து உள்ளனர்.  146 அடி கொண்ட  இந்த முருகன் சிலை   தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை  என்ற சிறப்பை  பெற்றுள்ளது. 

    ஆத்தூர் தொழிலதிபரும், முருக பக்தருமான பெரியவர் முத்து நடராஜன் , மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று வந்த நிலையில்,  அதேபோல மிக உயரமான முருகன் சிலையை சேலத்தில் நிறுவ வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, புத்திரகவுண்டம் பாளையத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில்  இந்த கோவிலை  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க நினைத்து,  கட்ட ஆரம்பித்தார்.

    அதன்படி முத்துநடராஜனை தொடர்ந்து அவரது மகன் ஸ்ரீதர் தற்போது கோவிலை கட்டி முடித்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து மலர்களை தூவப்பட்டது. 

  • Mayilam murugan Temple

    1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடையது மயிலம் முருகன் கோவில். எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.

     முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி… மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    பாலசித்தர் வழங்கும் வேலாயுதம் :

    பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

     வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

    தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    3 உற்சவர்கள் :🙏

    மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.

    பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

    இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.

    மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
    இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!

    முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

    மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். 

  • Mesham to midhunam murugan mandiram

    வாழ்வில் மனிதனாக பிறந்து விட்டால் ஒவ்வொரு விஷயங்களிலும் தன் கர்ம வினைக்கு ஏற்ப வரக்கூடிய பலன்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது சாஸ்திரம். இருப்பினும் நம் கர்மவினை குறைந்து பிறவிப்பயன் அடைய, நம் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க, சங்கடங்கள் தீர, செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய எளிய அதி சக்தி வாய்ந்த மந்திரம் என்ன..?

    முதல் மூன்று ராசியினர் அதாவது மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் முருகனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் பெறலாம்.

    முருகன் மந்திரம்: 

    பேர் ஆதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா!

    சேரா நிருதர் குல கலகா! சேவற்கொடியாய்! திருச்செந்தூர்த் தேவா! தேவர் சிறைமீட்ட செல்வா! என்று உன் திருமுகத்தைப் 

    பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா! வா, வா, என்று உன்னைப் போற்றப் பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால் 

    வாராது இருக்க வழக்கு உண்டோ! வடிவேல் முருகா! வருகவே! வளரும் களபக் குரும்பை முலை வள்ளி கணவா! வருகவே!

  • palani murugan temple dharshan

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், கோவில்களில் வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் (திங்கட்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர் நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, பழனி முருகன் கோவிலுக்கு 1 மணி நேரத்திற்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதள முகவரியான www.palanimurugan.hrce.tn.gov.in என தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதுதவிர, 04545-242683 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும்.

    அன்னதானங்கள் பொட்டலங்களாக வழங்கப்படும். பக்தர்கள் தேங்காய், பூ மற்றும் பழம் போன்றவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.  பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

  • Pazhamudhircholai Murugan Temple

    Pazhamudircholai Murugan Temple is a Hindu temple, located about 25 kilometres north of Madurai, atop a hill covered with dense forests. One of the six important abodes (Arupadaiveedu) of Lord Muruga, it is close to the Vishnu temple of Azhagar Kovil.

    Pazhamudircholai is a fertile hill, blessed with nature’s bounty in the form of innumerable fruits, vegetables and natural springs. It is a dense forest where Lord Murugan’s consort Valli is supposed to have lived. The temple itself is relatively small with Valli, Deivayanai, and Lord Muruga in a separate shrine. Lord Ganesha is also present in a separate shrine. There is a Temple Tower and monkeys play around the area. There is another small temple above Pazhamudhir Cholai where local tribes lead their lives.

    Although there are hundreds of Temples in Tamil Nadu for Lord Muruga, six particular temples called Arupadaiveedu are very famous among them. Important events in Lord Muruga’s history happened in these places. Among the Arupadaiveedu, Pazhamudircholai is the last. Lord Muruga at Pazhamudircholai is praised in several works of ancient Tamil literature such as the Silappathikaram, the Ettuthokai and the Pattupattu.

    The great Tamil poet and saint Avvaiyar was tested by Muruga here. In an episode of Divine Play with Avvaiyar, one of the most famous devotees of Muruga, the Lord enacted the following drama. One day Avvaiyar became tired while traveling under the hot sun and sought refuge under the shadow of a fruit tree, hungry and thirsty, when a boy who sitting on the tree asked her whether she wanted fruits from the tree. When Avvaiyar told him that she did, the boy asked Avvaiyar whether she wanted roasted fruits or unroasted fruits. Avvaiyar who was a famous Tamil poet and incredibly knowledgeable litterateur scoffed silently at the very thought of the existence of a “roasted fruit” and decided that the boy didn’t have knowledge even about a fruit. However, tired as she was, she decided that she didn’t want to argue with the boy and asked him to pick unroasted fruits for her, which the boy then proceeded to do. Several fruits fell out of the tree and Avvaiyar picked them up, blowing on them to remove the sand. Smiling, the boy asked Avvaiyar if she was blowing on his “roasted fruits” to cool them down.

    Avvaiyar was astonished as to how a small village cowboy could have played such an intelligent drama. Blowing on the fruit to remove the sand was indeed poetically comparable to an attempt to cool “roasted fruits”. Humbled by the immense poetic knowledge and clever wordplay of the boy, Avvaiyar begged the boy to reveal his true identity, unable to reconcile herself with the fact that a simple cowherd could have such profound thoughts. The boy then disappeared and, in his place, Lord Muruga appeared. Avvaiyar, stunned to find herself in Divine Company, bowed in obeisance and realising the infinite nature of knowledge, prayed to Muruga to bless her and continue bestowing his Infinite Grace on her to aid her virtually endless quest for knowledge.

    Naaval tree (Black Berry) is the Sthala Vriksham of this temple. Usually, black berry trees yield fruits during Tamil month of Aadi and Aavani (Julu-September). But strangely in Pazhamudhircholai, they yield on Aipasi (October-November) the month in which the most important Kandha Shashti festival for Lord Muruga occurs. Pazhamudhircholai is the only temple in Arupadai Veedu, where Lord Murugan blesses the devotees with both of his consorts Valli and Deivaanai. Hence devotees pray for wedding and for their children in this temple.

     

  • The Legend of Vadapalani Murugan

    The Vadapalani temple was built in late 19th century. The story goes that once, Annasamy Naicker, a staunch devotee of Lord Muruga had been wandering to temples far and wide in search for a solution to his health issues. A Sadhu appeared in Annasamy Naicker’s dreams and said when Murugan is right in your house why do you go in search of him all over? This moved him deeply. As a part of his prayer to the Lord, he had sacrificed his own tongue.

    One day when he was descending the steps of the Pazhani temple after his Darshan of the Dandayuthapani, a beautiful picture of lord Murugan grabbed his eyes. He was mesmerized by it. He considered it a priceless possession and brought it home to Chennai. He placed it in his home and put a thatched roof over it. He asked his family to shift elsewhere and considered it the very sacred abode, the Palani. He became known for his “Arul Vaakku” in his trance during pooja. He is also known as Pavadam since he offered his tongue to Lord Muruga and took the Pavadam.

    This picture can still be seen in the temple today. And the main idol of Lord Muruga in this temple is designed based on this picture.

    He was followed by Rathinasamy thambiran and his diciple Bagyalinga Thambiran in his service to Lord Muruga. The Samadis of all three Sitthars who worked towards building the sacred temple is situated in Nerkundram. The Siddarkal Alayamn is constructed to enable devotees to visit the Samadhis of all three Siddars at the same time. There are special Poojas conducted every Pournami. The Guru Pooja is also a specialty here.

     

    It is strongly believed that those who are unable to lead a pilgrimage to the Palani can very well visit the Vadapalni temple. Devotees, senior citizens who are unable to visit Palani can visit the Vadapalani temple here in Chennai and give their offerings that they had prayed for the Palani Murugan. 

     

  • Siruvapuri murugan

    சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லைஉங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். 

    ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

    சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

    பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

    ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

     பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.