Blog

  • Neela nira pattadayil Atthi Varadahar

    நாளான இன்று வானம் நீலம் நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அத்தி வரதர்  அருள்பாலித்து வருகிறார் 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 30ம் நாளான இன்று வானம்  நீல நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இன்று நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருக்கின்றனர் காலை 4.30 மணிக்கு கோபுர வாயில் திறக்கப்பட்ட பின் தரிசனம் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது என பக்தர்கள் தெரிவித்தனர்

    மேலும் வருகிற 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்

    இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

    1-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும்போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் 3-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை இதேசமயத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தினங்களில் மேலும் கூடுதலாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்..

  • Chidamparam Mariamman koil festival

    சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ளது அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா உற்சாகமாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாதத்திற்கான தீமிதி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் பல்வேறு பூஜைகளும், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கரகம் அலங்கரிக்கப்பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தது. அப்போது கரகத்திற்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் துணி உடுத்தி, வேப்பிலை, பூ அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோயில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் கரகம் இறங்கிச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து அம்மனின் அருளை பெற்றனர். கோயிலுக்கு உள்ளே ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட மாவிளக்கு போட்டு படையல் நடத்தினர். உடல் நலமில்லாமல் வேன் டிக் கொண்டவர்கள், மனித உருவ பொம்மைகளை வாங்கி வைத்தும், மணலால் செய்யப்பட்ட கை, கால் போன்ற உடல் உறுப்புகளை வாங்கி வைத்தும் வழிபாடு நடத்தினர்.
     

  • July 30 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – போட்டி 
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – தோல்வி
    கடனம் – அமைதி
    சிம்மம் – கவனம் 
    கன்னி –  வெற்றி
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – கவலை
    மகரம் –   நலம் 
    கும்பம் – லாபம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • July 30 Aadi Tuesday

    ஜூலை 30 – ஆடி செவ்வாய்
    விகாரி வருடம் – ஆடி 14
    30-ஜூலை-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    திரையோதசி    ம    1.12
    நட்சத்திரம்    :    திருவாதிரை    மா    4.00
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sadhuragiri Aadi Amavasai Festival

    மதுரை அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி ஆமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை விழா சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

    இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் கடந்த 27-ந் தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 1-ந் தேதி வரை கோவிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின் வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Thiruthani Theppal Urchavam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில்  50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    திருத்தணி சரவண பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் தெப்பம் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள் பாலித்தார். திருத்தணி முருகன் கோவில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஆடிக்கிருத்திகை உற்சவம் நடந்தது வந்தது. 

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் உடன் வந்து மூலவரை தரிசித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் வந்தடைந்தார் .

     இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டன. பின்னர் இரவு ஏழரை மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் உற்சவர் ஏழு முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
     

  • Atthi Varadhar 28 th Day

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

    28-வது நாளான நேற்று அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடி வருகிறது. பொது தரிசனத்தில் அத்தி வரதரை தரிசிக்க 6 மணி நேரம் ஆனது.

     27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் . 28 வது நநாளான நேற்று மட்டும் 3 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கின்றனர். 

  • Nellai Gandhimathi Ammanukku Valaikappu

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25?ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. 

    கர்ப்பிணிப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த காந்திமதி அம்மனுக்கு பெண்கள் வளையல்கள் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர்.

    இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
     

  • June 29 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சோர்வு
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – பாசம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – களிப்பு
    கன்னி –  சிரமம் 
    துலாம் –  பக்தி 
    விருச்சிகம் – கவலை
    தனுசு – சுகம் 
    மகரம் –   பணிவு
    கும்பம் – நிம்மதி
    மீனம் – சுபம்
    சந்திராஷ்டமம்    – கேட்டை,மூலம்
     

  • July 29 Pradhosham

    ஜூலை 29 – பிரதோஷம்
    விகாரி வருடம் – ஆடி 13
     பிரதோஷம் 
    29-ஜூலை-2019 திங்கள் 
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    துவாதசி    ம    2.42
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    மா    4.43
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்