Blog

  • November 5 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – அனுகூலம் 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – பாராட்டு
    கடனம் – மகிழ்ச்சி
    சிம்மம் – பொறுமை
    கன்னி –  போட்டி 
    துலாம் –  பெருமை 
    விருச்சிகம் – அன்பு 
    தனுசு –     திறமை 
    மகரம் –  தனம் 
    கும்பம் – தாமதம் 
    மீனம் –     நற்செய்தி
    சந்திராஷ்டமம்    – பூசம்

  • November 5 Indrya Naal

    நவம்பர் 5 – கிருத யுகாதி
    விகாரி வருடம் – ஐப்பசி 19
    05-நவ-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    7.54
    நட்சத்திரம்    :    திருவோணம்    கா    6.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Vasthu Dhosham Neenga

    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

     பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
     

  • Thirupathy Ezhumalayan Puspayagam

    திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 டன் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டன.

      இந்த மலர்கள் பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டு காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள், உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.
     

  • Angaraga Shanthi Homam

    வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், அருளானைப்படி வருகிற 05.11.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக மக்கள் நலன் கருதி அங்காரக சாந்தி ஹோமமும் காலசக்ர பூஜையும் நடைபெற உள்ளது.

    அங்காரக கிரக சாந்தி ஹோமம்:

    ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சி போன்ற வசதிகளையும் மேம்படுத்தி புதிய வாய்ப்புகள் பெற்று உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொண்டு தெளிவாக முடிவெடுக்க இயலும் இந்த அமைப்பை நமக்கு ஏற்ப்படுத்தி தருவது அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார்.

    செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

    அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

    வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் அங்காரக கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • November 4 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – சாந்தம் 
    ரிஷபம் – தடங்கல்
    மிதுனம் – வெற்றி
    கடனம் – நட்பு
    சிம்மம் – கோபம்   
    கன்னி –  அச்சம் 
    துலாம் –  பெருமை
    விருச்சிகம் – சிரமம்  
    தனுசு –     சோதனை
    மகரம் –  முயற்சி
    கும்பம் – அனுகூலம்  
    மீனம் –     புகழ்
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம்
     

  • November 4 Thiruvona viradham

    நவம்பர் 4 – திருவோண விரதம் 
    விகாரி வருடம் – ஐப்பசி 18
    04-நவ-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    6.31
    நட்சத்திரம்    :    திருவோணம்    முழுவதும்    0.00
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Namakkal Anjaneyar koil Booking

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு செய்ய கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும், ஆஞ்சநேயரை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

    தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு, நவம்பர் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரர்கள் மூலமாகவே நடைபெறும்.

    இது குறித்து கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ் கூறியதாவது:

    ஒவ்வோர் ஆண்டும், அடுத்த ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும்.

    சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொர்ணாபிஷேகத்திற்கு பின் ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 பேர் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்குப்பின் 5 பேர் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்படும். முழுத்தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும்.

    ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிர்த்து, பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

  • Thiruthani murugan pushpanjali

    திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

    மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர். 

    பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
     

  • World biggest murugan temple

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை மிக பிரமாண்டமான அளவில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாக கட்டும் பணி உருவாகி வருகிறது இந்த சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  பத்து மலை முருகன் கோயில் உள்ளது அதன் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்று அமைக்கப்பட்டுள்ளது அதன் உயரம் 140 அடி ஆகும்.

    இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில்  உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முருகன் சிலை  145 அடி உயரம் கொண்டு உள்ளது சிலை மட்டும் 126 அடியும் பீடத்துடன் சேர்ந்த மொத்தம் 145 அடியில் உலகில் மிக உயரமான முருகன் சிலை சிலையாக இது அமைகிறது என்று கோவில் சிலையை நிறுவி வரும் ஸ்ரீதர் என்பவர் தெரிவித்தார் 

    கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பத்துமலை முருகன் சிலையை ஆரம்பித்து அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் 

    மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர்  தியாகராஜன் சபதி தலைமையிலான குழுவினர் இந்த சிலையையும் தற்போது வடிவமைத்து முழுவீச்சில் வேலைப்பாடு செய்து வருகின்றனர் 

    சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் இந்த சிலை கோவில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது