Blog

  • Pradhosha Poojai

    பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
     

  • Magathuvam Vaindha Sani maha pradhosham

    மற்ற கிழமைகளில் பிரதோஷம் வந்தால், பிரதோஷம் என்று மட்டும் சொல்லுவார்கள். ஆனால் சனி பிரதோஷத்தை சாதாரணமாகச் சொல்லமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. 

    ஏழரைச் சனி மற்றும் அஷ்டமத்துச் சனி நடப்பவர்களும் இது வரை வாழ்க்கையில் நல்லதே நடக்கவில்லை என்று புலம்புவர்களும் இன்று சிவ சந்நிதியில் நில்லுங்கள். எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப்பெறுவீர்கள் என்பது உறுதி. இன்று சனிப் பிரதோஷம்! 

    இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். முடிந்தால் கையளவு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் வழங்குங்கள். சிவனாருக்கு வில்வத்துடன் செவ்வரளியும் வழங்கி தரிசியுங்கள்.

    இன்னும் முடியுமெனில், நந்திதேவருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். குளிரக் குளிரச் செய்கிற அபிஷேகத்தால், உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குளிரப்பண்ணுவார் சிவனார்! 

    சனிக்கிழமை வரும் பிரதோஷம். நம் ஜாதகத்தில், எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம் என்கின்றன ஆகமங்களும் சாஸ்திரங்களும்! 

    ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். பொதுவாகவே,  ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம். 

    கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 
     

  • November 9 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வரவு 
    ரிஷபம் – சிக்கல்
    மிதுனம் – நோய் 
    கடனம் – எதிர்ப்பு 
    சிம்மம் – வெற்றி 
    கன்னி –  கவலை
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – நட்பு
    தனுசு –     தடங்கல்
    மகரம் –  தாமதம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     சுபம் 
    சந்திராஷ்டமம்    – பூரம், உத்திரம்
     

  • November 9 Maha Pradhosham

    நவம்பர் 9 – மகா பிரதோஷம்
    விகாரி வருடம் – ஐப்பசி 23
    மகா பிரதோஷம்
    09-நவ-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    ம    3.40
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    மா    4.32
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sani Pradhosha Vazhipadu tharum palangal

    சனி பிரதோஷ வழிபாடு…. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது சனி பிரதோஷம்.

    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
     

  • Sabari Malai Dharshan

    சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விலக்கு பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பக்தர்கள் வசதிக்காக சபரி மலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 

    சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.

  • Sabari Malai Mandala Poojai

    நடப்பு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்து இருக்கிறது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். 

    நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
     

     நடை திறக்கப்படும் நாளான 16-ந் தேதி அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

    தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இருமேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.

    6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

    17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

    அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். 
     

  • Meenatchi Amman Koil Free Laddu

    உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக  நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை  வருகை தருகின்றனர். அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி பிரகாரத்தில் வைத்து லட்டு வழங்கப்படுகிறது. .

    தீபாவளி முதல்  லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி  அறிவித்த நிலையில் லட்டு தயாரிப்பிற்கான சோதனை ஓட்டமும் உட்கட்டமைப்பு பணிகளும் நடைபெறுவதால் தீபாவளிக்கு பின்னர் ஒரு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் துவங்கும் என பின்னர் அறிவித்தது.
      
    லட்டு தயாரிக்கும் பணி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் உள்ள மடப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.   லட்டு தயாரிப்பு பணியில் 15 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். லட்டு தயாரிப்பிற்காக ஒரு பிரத்தியோகமான லட்டு உருட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    நேர்த்தியான சுவையுடன் 30 கிராம் எடை கொண்ட லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நாள்தோறும் 20ஆயிரம் லட்டு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மீனாட்சியம்மன் கோவில்  நிதியிலிருந்து லட்டு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதலாகள லட்டு தயாரிப்பதற்காண பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Geethu Vats

    ஓமதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு….
    உங்களைப் பற்றி சவுதி சிவராமன் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருந்தார். அதை பார்த்துதான் நாங்கள் உங்களை சந்தித்தோம். என்னுடைய அண்ணன் மகளுக்கு +2 தேர்வு நேரத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டது.

    இதன் காரணமாக +2 தேர்வையே அவள் எழுத முடியாதா என்ற தயக்கம் எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. அப்போது தான் நாங்கள் உங்களை சந்தித்தோம். நீங்கள் பிரசன்னம் பார்த்து அவளை உடனே திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு அழைத்துச் சென்று ஆயுஷ் ஹோமம் செய்யச் சொன்னீர்கள். .

    நாங்களும் அவ்வாறே செய்தோம். நாங்கள் சென்று வந்த மறு வாரத்திலேயே அவள் பூரணமாக அந்த குழப்பத்திலிருந்து முற்றிலுமாக வெளி வந்து விட்டாள். +2 தேர்வும் மிக நன்றாக எழுதி 80% வாங்கி தேர்வு பெற்றாள். உங்களை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இந்த கடிதத்தின் மூலம் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

    இப்படிக்கு :
    மதுரம் – பாலவாக்கம் 

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

     

    •  
  • November 8 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – துணிவு 
    ரிஷபம் – பக்தி 
    மிதுனம் – நட்பு
    கடனம் – நலம் 
    சிம்மம் – தனம் 
    கன்னி –  இன்பம் 
    துலாம் –  போட்டி 
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு –     செலவு
    மகரம் –  உறுதி  
    கும்பம் – சுகம் 
    மீனம் –     ஆக்கம் 
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்