Blog

  • தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவம் நிகழ்ச்சி…

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்  திருப்பதி என்றழைக்கப்படும்  ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி ஆலயத்தில்  பவித்ரோற்சவ உற்சவம் இன்று  மாலை விமர்சையாக நடைபெற்றது..

    ஆவனி  மாதத்தில் நடைபெறும் இந்த பவித்ரோற்சவம் நிகழ்ச்சி துவங்கிய நிலையில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திர புஸ்பம், பிரபந்த சாற்று முறை,  ஏகாந்த சேவை என நிகழ்வுகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து  வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், ஸ்ரீ மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று விழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பவித்ர மாலையுடன் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது..

    அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள  இசைவாதியங்கள் முழங்க வேத விற்பனர்களின் மந்திரங்கள் முழங்க நான்கு மாட வீதிகளின் வழியாக  வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்..பின்னர் யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்..

  • ஆகஸ்ட் 24 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         – உயர்வு
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    ஆதரவு  
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  அனுகூலம்  
    தனுசு         –    அச்சம்
    மகரம்         –   பகை
    கும்பம்         –     பாசம்
    மீனம்         –    சுகம்  
    சந்திராஷ்டமம்    –         மகம், பூரம்

  • ஆகஸ்ட் 24 – இன்றைய நல்லநேரம்….

    ஆகஸ்ட் 24 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – ஆவணி 08
    ஆகஸ்ட் 24 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் :ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  பஞ்சமி ம 1.25
    நட்சத்திரம் :  ரேவதி அ.கா 1.35
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • அகத்தியர் வழிபட்ட கொழையூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்…

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கூழையூர் எனப்படும் கொழையூர் கிராமம் உள்ளது. உருவத்தில் குள்ளமான அகத்திய முனிவர் தனது பாவங்களை போக்கிக் கொள்ள வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் கூழையூர் என்றும் இத்தலத்து இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் பெயருடனும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தலம் மார்க்கண்டேயரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்கு  உரியதும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமும் ஆகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேக தினமான இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

  • ஆகஸ்ட் 23 – சுபமுகூர்த்த நாள்….

    ஆகஸ்ட் 23 – சுபமுகூர்த்த நாள்….
    குரோதி வருடம் – ஆவணி 07
    ஆகஸ்ட் 23 – 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் :ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  சதுர்த்தி ம 3.48
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி அ.கா 3.13
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஆகஸ்ட் 23 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – வரவு
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   பக்தி
    கன்னி         –    மேன்மை
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  அனுகூலம்  
    தனுசு         –    புகழ்
    மகரம்         –   கீர்த்தி  
    கும்பம்         –     உயர்வு
    மீனம்         –    ஜெயம்
    சந்திராஷ்டமம்    –         ஆயில்யம், மகம்

  • ஆகஸ்ட் 22 – சங்கடஹர சதுர்த்தி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்
    ரிஷபம்         – நஷ்டம்
    மிதுனம்     – ஆதரவு  
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   வரவு  
    கன்னி         –    சினம்
    துலாம்         –     வீம்பு
    விருச்சிகம்     –  அனுகூலம்
    தனுசு         –    இன்பம்  
    மகரம்         –   அன்பு
    கும்பம்         –     மேன்மை
    மீனம்         –    வெற்றி
    சந்திராஷ்டமம்    –         பூசம்

  • ஆகஸ்ட் 22 – மகா சங்கடஹர சதுர்த்தி….

    ஆகஸ்ட் 22 – மகா சங்கடஹர சதுர்த்தி….
    குரோதி வருடம் – ஆவணி 06
    ஆகஸ்ட் 22 – 2024
    வியாழன்
    சுபமுகூர்த்த நாள்
    சங்கடஹர சதுர்த்தி
    வாஸ்து நாள் (காலை 7.23 – 7.59)
    சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் :கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை மா 6.14
    நட்சத்திரம் :  பூரட்டாதி அ.கா 4.32
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி…

    அரியலூர் – காரைக்குறிச்சி  பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே  கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது.காரைக்குறிச்சி கிராமம் இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை சூரிய பகவான் ஈசனை சுற்றி வந்து வழிபட்டதாக ஐதீகம். இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை  லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

    அதன்படி  ஆகஸ்டு மாதம் இன்று காலை 6:10மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும்  பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.

    இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த அரிய காட்சியை   காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

  • திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு…

    பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.  அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.