Blog

  • Iyappan thiruvabaram

    சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

    துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

    அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.
    ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.

    அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.

    குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.

    குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன். அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.

    எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. எனினும் குருவின் ஆசி ஆசிதானே.

    அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை அதாவது மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.

  • Selvam peruga anjaneyar vazhipadu

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும்.

    கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார், லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்தி, அவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது.

    என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • Narashimmar vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

  • December 12 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அச்சம்
    ரிஷபம்         –    சுகம்
    மிதுனம்     –   ஆக்கம்  
    கடகம்         –  சலனம்   
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சிரமம்
    துலாம்         –     ஊக்கம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     நிறைவு  
    மகரம்         –    இரக்கம்
    கும்பம்         –      ஆதாயம்  
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –      பரணி, கார்த்திகை

  • December 12 2023 Amavasai

    டிசம்பர் 12 – அமாவாசை
    சோபகிருது வருடம் – கார்த்திகை 26
    அமாவாசை
    12-டிச-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் : சதுர்த்தசி கா 6.22
    நட்சத்திரம் : அனுஷம் ம 12.29
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • December 11 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை  
    ரிஷபம்         –    ஓய்வு
    மிதுனம்     –   தனம்  
    கடகம்         –  நிறைவு   
    சிம்மம்         –   பாராட்டு  
    கன்னி         –    நலம்
    துலாம்         –     இன்பம்  
    விருச்சிகம்     –  அசதி
    தனுசு         –     பக்தி
    மகரம்         –    லாபம்  
    கும்பம்         –      ஆக்கம்
    மீனம்         –      உற்சாகம்
    சந்திராஷ்டமம்    –      அசுபதி, பரணி

  • December 11 2023 Sivarathiri

    டிசம்பர் 11 – மாத சிவராத்திரி
    சோபகிருது வருடம் – கார்த்திகை 25
    11-டிச-2023 திங்கள்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்,
    பாரதி பிறந்த நாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி கா 6.32
    நட்சத்திரம் : விசாகம் ம 12.13
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 10 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பரிசு
    ரிஷபம்         –    தனம்
    மிதுனம்     –   தேர்ச்சி
    கடகம்         –  செலவு  
    சிம்மம்         –   ஆதரவு  
    கன்னி         –    சினம்  
    துலாம்         –     சிரமம்
    விருச்சிகம்     –  மறதி  
    தனுசு         –     ஆதரவு
    மகரம்         –    பக்தி   
    கும்பம்         –      சலனம்
    மீனம்         –      உயர்வு
    சந்திராஷ்டமம்    –      ரேவதி, அசுபதி

  • December 10 2023 Pradhosham

    டிசம்பர் 10 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 24
    பிரதோஷம்
    சுபமுகூர்த்த நாள்
    10-டிச-2023 ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி முழுவதும்0.00
    நட்சத்திரம் : சுவாதி கா 11.26
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Kalaigal sirakka gayathri mandiram

    கலைகளில் தேர்ச்சி பெற, கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க காயத்ரி மந்திரம்….

    கங்காதேவி

    (ஞாபக சக்தி பெற)
     
    ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
    ருத்ரபத்ன்யை ச தீமஹி
    தன்னோ கங்கா ப்ரசோதயாத்
     
    சாமுண்டி
     
    ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ காளி ப்ரசோதயாத்
     
    ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
    சக்ரதாரிணி தீமஹி
    தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
     
    சித்ரா

    (கலைகளில் தேர்ச்சி பெற)
     
    ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
    மஹாநித்யை ச தீமஹி
    தன்னோ நித்ய ப்ர சோதயாத்
     
    சின்னமஸ்தா

    (எதிரிகளை வெல்ல)
     
    ஓம் வைரேசான்யை ச வித்மஹே
    சின்னமஸ்தாயை ச தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
     
    சண்டீஸ்வரி

    (நவகிரக தோஷங்கள் விலக)
     
    ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
    மஹாதேவீ ச தீமஹி
    தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
     
    ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
    கௌரீஸித்தாய தீமஹி
    தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
     
    ஜெயதுர்கா

    (வெற்றி கிடைக்க)
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    துர்காயை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் நாராண்யை வித்மஹே
    துர்காயை ச தீமஹி
    தன்னோ கேணீ ப்ரசோதயாத்
     
    ஜானகிதேவி

    (கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
     
    ஓம் ஜனகனாயை வித்மஹே
    ராமபிரியாய தீமஹி
    தன்னோ சீதா ப்ரசோதயாத்
     
    ஓம் அயோநிஜாயை வித்மஹே
    ராமபத்ன்யை ச தீமஹி
    தன்னோ சீதா ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    ராமபத்ன்யை ச தீமஹி
    தன்னோ சீதா ப்ரசோதயாத்