Blog

  • acchankoil thiruvabaranam

    செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவிலில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

    சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிரம்மோஸ்தவ விழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவிற்காக புனலூர் கருவூலத்திலிருந்து கேரள தமிழ்நாடு இரு மாநில போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் அடங்கிய ஆபரணப்பெட்டி ஊர்வலமாக தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் முன்பு கொண்டுவரப்பட்டது.  

    அங்கு திருஆபரணப்பெட்டிக்கு மேள தாள தாரை தப்பட்டைகள் வெடிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த ஊர்வலமானது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருஆபரண பெட்டிக்குள் ஸ்ரீ ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள் மற்றும் கால்கள் கவசம் மற்றும் 18 இஞ்ச் நீளம் உடைய தங்க வாளும் உள்ளது. இதனால் அந்த ஐயப்பனே வருவது போல ஐதீகம் . இந்நிகழ்ச்சியில் தென்காசி  சுற்று வட்டார மற்றும் தமிழக கேரளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்து திருஆபரண பெட்டியை வழிபட்டனா்.

  • December 18 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    பாராட்டு
    மிதுனம்     –   சிரமம்
    கடகம்         –  தேர்ச்சி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    உதவி
    துலாம்         –     ஆக்கம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     ஆதாயம்
    மகரம்         –    கவலை  
    கும்பம்         –      இன்பம்
    மீனம்         –      பயம்  
    சந்திராஷ்டமம்    –      பூசம்

  • December 18 2023 Sasti viradham

    டிசம்பர் 18 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – மார்கழி 2
    18-டிச-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 6.36
    நட்சத்திரம் : அவிட்டம் கா 6.26
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • thiruppavai thiruvenpavai

    திருப்பாவை…

    இந்தப் பூவுலகத்தாரை, பக்தி மார்க்கத்தில் உய்ய வைக்க ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் திவ்யதேசத்தில் 'பெரியாழ்வார்' என்றழைக்கப்படும் 'ஸ்ரீவிஷ்ணுசித்தரின்' வளர்ப்பு மகளாக, நந்தவனத்திலே… துளசிச் செடிகளின் மத்தியில், அவதரித்தவர்.

    மாலவனின் மீது மாளாத அன்பும் பக்தியும் கொண்டு பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மூடி, மாலவனுடன் இரண்டறக கலந்தவர். எனவே இறைவனையே ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றவர்.

    நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் இயற்றிய பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும். 'நாச்சியார் திருமொழி' என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே 'திருப்பாவை'.

    திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஸ்ரீமாலவனை தரிசிக்கச் செல்லும் 'ஆண்டாள்', அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரை எழுப்பி அவர்களுக்கும் அந்த பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை துயில் எழுப்புவது போல் மாலவனின் பெருமைகளைக் கூறுவது போல், ஆண்டாள் உருகி உருகிப் பாடினாள். அதுவே திருப்பாவை!

    'திருப்பாவை' இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பது என்பதன் உட்கருத்து!.

    அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!

    திருவெம்பாவை
    மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை.

    திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

    திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம்.

  • Margazhi month viradhangal

    பௌர்ணமி விரதம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

    ஆருத்ரா தரிசனம்
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார்.

    வைகுண்ட ஏகாதசி
    வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    பரசுராம ஜயந்தி
    தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    மாதாந்திர சிவராத்திரி
    சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அனுமன் ஜயந்தி
    இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி அமாவாசை
    முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

    கூடார வல்லி
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 – வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

    போகிப் பண்டிகை
    மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.

  • December 17 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  உயர்வு  
    ரிஷபம்         –    உழைப்பு  
    மிதுனம்     –   அன்பு
    கடகம்         –  பொறுமை
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    வரவு
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –     ஊக்கம்
    மகரம்         –    நற்செயல்
    கும்பம்         –      சிரமம்
    மீனம்         –      பாராட்டு
    சந்திராஷ்டமம்    –      புனர்பூசம்

     

  • December 17 2023 Margazhi poojai

    டிசம்பர் 17 – மார்கழி பூஜை ஆரம்பம்
    சோபகிருது வருடம் – மார்கழி 1
    17-டிச-2023 ஞாயிறு
    மார்கழி பூஜை ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 8.55
    நட்சத்திரம்: திருவோணம்கா 7.57
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • December 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         –    சாதனை
    மிதுனம்     –   முயற்சி
    கடகம்         –  பெருமை
    சிம்மம்         –   அன்பு
    கன்னி         –    ஆர்வம்
    துலாம்         –     சோதனை
    விருச்சிகம்     –  சிரமம்
    தனுசு         –     நன்மை  
    மகரம்         –    சுபம்    
    கும்பம்         –      வருத்தம்
    மீனம்         –      துணிச்சல்
    சந்திராஷ்டமம்    –      திருவாதிரை

     

  • December 16 2023 chadurthi

    டிசம்பர் 16 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – கார்த்திகை 30
    16-டிச-2023 சனி 4
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 11.9
    நட்சத்திரம் : உத்திராடம் கா 9.25
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Chadurthi viradham thonriya kadhai

    கயிலாயத்திற்கு ஒருமுறை  வந்த பிரம்மனை பார்த்து, சந்திரன் ஏளனமாக சிரித்தார். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார்.

    விநாயகர் சாபம் கொடுத்த அந்த நொடியே சந்திரன்  வானத்தில் இருந்து காணாமல் போனார். நலவு வானத்தில் காணாமல் போனதை கண்டு தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டிக்கொண்டனர்.

    தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார்.

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது.