Blog

  • Ko poojai days

    செவ்வாயன்று கோ பூஜை செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று கோ பூஜை செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

    பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும். ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம். கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.

    பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம். நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும். பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும்.

  • December 15 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சோர்வு
    ரிஷபம்         –    இன்சொல்
    மிதுனம்     –   அச்சம்
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    உற்சாகம்
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     அசதி
    மகரம்         –    இரக்கம்   
    கும்பம்         –      கவனம்
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –      மிருகசீருஷம், திருவாதிரை

  • December 15 2023 Indrayanaal

    டிசம்பர் 15 – வள்ளியூர் முருகன் தெப்பம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 29
    15-டிச-2023 வெள்ளி
    வள்ளியூர் முருகன் தெப்பம்,
    படேல் நினைவு நாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை ந.இ 1.13
    நட்சத்திரம் : பூராடம் கா 10.39
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Kanchi varadaraja perumal

    ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்ன அங்கி சேவை உற்சவம். நவரத்ன அங்கி அணிந்து ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், பக்தர்களுக்கு காட்சி அளித்த வரதராஜ பெருமாள்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விஜயநகர பேரரசின் ராஜ குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிகால தர்மகத்தாவாக இருந்த ஸ்ரீதாத தேசிகனின் சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த நட்சத்திரத்தில் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து  ஸ்ரீதாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

    அதன்படி ஸ்ரீ தாத தேசிகன் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தை ஓட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று நவரத்தினங்களால் ஆன அங்கி அணிந்து ரோஜா பூ மலர் மாலை சூடி, ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், டமாரம்மேளம், ஒலிக்க தவில்,நாதஸ்வர, வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் உலா வந்து ஸ்ரீ தாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்.

    பின்னர் வேத பாராயணம் மந்திரங்கள் ஒலிக்க பெருந்தேவி தாயார்,வரதராஜ பெருமாள், அணிந்து வந்த ரோஜா பூ மாலைகளை வழங்கி ஸ்ரீ தாத தேசிகனுக்கு  அணிவித்து சிறப்பு செய்தார்.

    தாத தேதிகன் சாற்று முறை உற்சவத்தில் நவரத்தினங்கள் பதித்த ரத்தின அங்கியில் வரதராஜ பெருமாள் சேவை சாதிக்கும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

  • darbar kolathil mel malayanur angalamman

    மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்  அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்

    இந்நிலையில் கார்த்திகை மாத அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்  அங்காளம்மனுக்கும் பால்,பழம், சந்தனம், பழச்சாறு ஆகியவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  உற்சவர் அம்மன் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    பின்னர் நள்ளிரவு 10.30 மணி அளவில் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மனை கோவிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தாலாட்டியவாறு தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.

    நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கான, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமிதரிசனம் செய்தனர்.

  • srirangam pagal pathu

    திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது – பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் ராஜ நடை போட்டு வலம் வந்த திருவரங்கன்.

    108 வைணவ  திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் என்றழைக்கப்படும் முதல் விழாவுடன்  நேற்று தொடங்கியது.

    இந்நிலையிப் பகல் பத்து வைபவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் காலை 7.00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பாண்டியன்  கொண்டை அலங்காரத்தில் ரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம்,லட்சுமி பதக்கம், பவளமாலை, முத்து சரம்,அடுக்கு பதக்கம் உள்ளிட்ட எழில் மிகு திருக்கோலத்தில் புறப்பட்ட நம்பெருமாள் ராஜ நடைப்போடு வலம் வந்து சரியாக 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

    நம்பெருமாள் புறப்பாடின் போது ரங்கப்பிரபு … ரெங் நாதா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் – பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.

    வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள்  நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் – வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும்  நடைபெற உள்ளது.

  • December 14 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         –    வாழ்வு
    மிதுனம்     –   தனம்
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    ஆதரவு  
    துலாம்         –     வாழ்வு
    விருச்சிகம்     –  நட்பு
    தனுசு         –     பணிவு
    மகரம்         –    நன்மை  
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    –      ரோகிணி, மிருகசீருஷம்

     

  • December 14 2023 Subamuhurthanaal

    டிசம்பர் 14 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – கார்த்திகை 28
    சுபமுகூர்த்த நாள்
    14-டிச-2023 வியாழன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ந.இ 3.3
    நட்சத்திரம் : மூலம் கா 11.42
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • December 13 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உற்சாகம்
    ரிஷபம்         –    போட்டி
    மிதுனம்     –   பொறுமை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   ஆதாயம்
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     சிரமம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     வருத்தம்
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      எதிர்ப்பு   
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –      கார்த்திகை, ரோகிணி

  • December 13 2023 Indrayanaal

    டிசம்பர் 13 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 27
    13-டிச-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை அ.கா 4.35
    நட்சத்திரம் : கேட்டை ம 12.18
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்