Blog

  • Subramaniya mangala stothiram

    சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் முருகப்பெருமானின் வழிபாட்டு பாடல்களில் ஒன்றாகும். தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும்.

    மங்களம் தேவ தேவாய ராஜ ராஜாய மங்களம்
    மங்களம் நாத நாதாய கால காலாய மங்களம்
    மங்களம் கார்த்திகேயாய கங்கா புத்ராய மங்களம்
    மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்
    மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்
    மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்

    மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்
    மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்
    மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்
    மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே
    அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்
    கமலாஸன வாகீச வரதாயாஸ்து மங்களம்

    ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச
    ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்
    ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்
    ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்
    மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்
    மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே…!

     

  • December 09 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சலனம்
    ரிஷபம்         –    நன்மை
    மிதுனம்     –   நற்செயல்
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சாந்தம்
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    இன்பம்  
    கும்பம்         –       விவேகம்
    மீனம்         –      இரக்கம்
    சந்திராஷ்டமம்    –      ரேவதி

  • December 09 2023 indrayanaal

    டிசம்பர் 9 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 23
    09-டிச-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி கா 6.16
    நட்சத்திரம் : சித்திரை கா 10.10
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 08 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பக்தி
    ரிஷபம்         –    பரிசு
    மிதுனம்     –   பயம்  
    கடகம்         –  எதிர்ப்பு
    சிம்மம்         –   பரிவு
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     அன்பு
    விருச்சிகம்     –  ஓய்வு
    தனுசு         –     வரவு  
    மகரம்         –    தடங்கல்
    கும்பம்         –       வெற்றி  
    மீனம்         –      இன்சொல்
    சந்திராஷ்டமம்    –      உத்திரட்டாதி

  • December 08 2023 Sarva egadasi

    டிசம்பர் 8 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – கார்த்திகை 22
    சுபமுகூர்த்த நாள்
    08-டிச-2023 வெள்ளி
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி அ.கா 5.24
    நட்சத்திரம் : அஸ்தம் கா 8.24
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Karaikal nandeeswarar temple sangabishegam

    காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு நித்தீஸ்வரம் ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


       
    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு  அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து பால்,தயிர், மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களினால் சிவனுக்கும்,அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த நீரினால் சிவனுக்கும், அம்பாளுக்கும்  அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்வித்து மகாதீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாதம் 03வது சோமவாரம் 1008 சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Thungampadi balamurugan kumbabishegam

    திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் எழுந்தருளி பன்நெடுங்காலமாய் வேண்டுவோர்க்கு வேண்டியதை நல்கி அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன, சமர்ப்பண மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

     500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் மங்கள இசை வேத பாராயணம், திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது.

    பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி,  கும்பலங்காரம், அங்குரார்பணம்,  ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது.

    இன்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து கோயில் உச்சியில் அமைக்கப்பெற்ற கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    நேற்று மாலை நடந்த யாகசாலை பூஜையில் ரத்னகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டார். அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • December 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நிம்மதி
    ரிஷபம்         –    எதிர்ப்பு
    மிதுனம்     –   வரவு  
    கடகம்         –  ஏமாற்றம்
    சிம்மம்         –   புகழ்
    கன்னி         –    ஊக்கம்
    துலாம்         –     உதவி   
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     அசதி
    மகரம்         –    பெருமை  
    கும்பம்         –       ஆக்கம்
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –      பூரட்டாதி

  • December 7 2023 subamuhurthanaal

    டிசம்பர் 7 – சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – கார்த்திகை 21
    சுபமுகூர்த்த நாள்
    07-டிச-2023 வியாழன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி அ.கா 4.6
    நட்சத்திரம் : அஸ்தம் முழுவதும்0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Alangudi temple festival

    4இரண்டு பைரவர்களைக் கொண்ட இரண்டாவது குருஸ்தலம் என்று பக்தர்களால் வழங்கப்படும் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கால பைரவாஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு. பைரவ உற்சவ மூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலம் எனவும் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக ஆதி கால பைரவர் மற்றும் காசி கால பைரவர் என இரண்டு பைரவர்கள் அருள்பாளித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பிரச்சித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த திருக்கோவிலில், மகா கால பைரவாஷ்டமியை முன்னிட்டு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார். வில்வ சகஸரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

    பின்னர் தேர் பவணியில் பைரவ உற்சவ மூர்த்தி எழுந்தருள பக்தர்கள் பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வண்ண விளக்குகள் மிளிர பட்டாசுகள் வெடிக்க விமர்சையாக நடைபெற்ற இந்த தேர் பவனி காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் தேர் கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வளம் வந்து நிலை நின்றது. மேலும் இந்த தேர் பவணியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு  ஆராதனை நடைபெற்றது.

    மேலும் இந்த தேர் பவனி நிகழ்ச்சியில் தெரு நெடுகிலும் நின்ற ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு மாலை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பைரவருக்கு உரிய நிறமான சிவப்பு நிறக் கயிறும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.