Blog

  • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை….

    பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் தான் வழக்கம். ஆனால் சாஸ்திர சம்மதமானதாக இது கருதப்படவில்லை. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு என ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.
    அதற்கு பிறகுதான் ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை உளமாற சேவிக்க வேண்டும்..
    இந்த வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.

  • பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியலில் ரூ.1.75 கோடி ரொக்கம் உள்ளிட்ட காணிக்கைகள் இருந்தன.

    பழனி மலைக்கோயில் உண்டியல்கள் கடந்த 24 நாள்களுக்குப்பின் நிரம்பின.
    இதையடுத்து திங்கள்கிழமை கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    இதில், ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம், வெள்ளிக் காசுகள், தாலிச்சங்கிலி, வேல், உருவங்கள் என 715 கிராம் தங்கம் இருந்தது. அதேபோல 10,700 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன.

    மேலும், பல்வேறு நாடுகளின் 1,481 கரன்சிகளும், பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள், முந்திரி, ஏலக்காய் மாலைகள் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

  • சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரமோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டது.
    மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரமோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர். அப்போது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் முதல் உற்சவமாக இரவு பெரியசேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அன்ன வாகனத்தில் கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கியது….

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் புற்று மண் சேகரிக்கப்பட்டு அதில் நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷ்வ சேனாதிபதி உற்சவர், 4 மாட வீதிகளில் பவனி வந்தார். முதல் நாளான அக்டோபர் 3 ஆம் தேதி மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டு மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரம்மோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து 11ம்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொடியேற்றத்தை தொடர்ந்து முதல் உற்சவமாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வருகிறார். 2ம் நாளான அக்டோபர் 4 ஆம் தேதி காலை சிறிய சேஷ வாகன உற்சவம். இரவு அன்னவாகன உற்சவம். 3ம்நாள் காலை சிம்ம வாகன உற்சவம். இரவு முத்துபந்தல் வாகன உற்சவம். 4ம்நாள் 6ம்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருள்கிறார்.

    அன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. 5ம்நாள் காலை (7ம்தேதி) மோகினி அலங்கார உற்சவம். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் அன்றிரவு நடக்கிறது. அன்று ஏழுமலையானுக்கு மூலவருக்கும் அணிவிக்கப்படும் மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்கர நாம மாலை ஆரம் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.

    6ம்நாள் காலை (8ம்தேதி) அனுமந்த வாகன உற்சவம். இரவு தங்க யானை வாகன உற்சவம். 7ம்நாள் காலை (9ம்தேதி) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 8ம்நாள் காலை (10ம்தேதி) ரத உற்சவம் நடக்கிறது. இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் நாள் காலை (11ம்தேதி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • திருப்பதி குடைகள் ஊர்வலம் புறப்பட்டது.

    சென்னையில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருமலை- திருப்பதிக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிரமோற்சவ கருட சேவையின் போது சமர்ப்பிக்கப்படும்.

    திருப்பதி கருட சேவையை முன்னிட்டு தமிழக பக்தர்கள் சார்பில் இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
    இதை முன்னிட்டு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமுர்த்தானந்தா ஆசியுரை வழங்கி குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என பக்தி கோ‌ஷம் முழங்க, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் யானைகவுனியை தாண்டியது.
    தொடர்ந்து நடராஜா தியேட்டர, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் தாக்கர்சத்திரம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தங்குகிறது.
    ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. அக்டோபர் 3-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    4-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    5-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • திருப்பதி குடைகள் ஊர்வலம் புறப்பட்டது.

    சென்னையில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருமலை- திருப்பதிக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிரமோற்சவ கருட சேவையின் போது சமர்ப்பிக்கப்படும்.

    திருப்பதி கருட சேவையை முன்னிட்டு தமிழக பக்தர்கள் சார்பில் இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
    இதை முன்னிட்டு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமுர்த்தானந்தா ஆசியுரை வழங்கி குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என பக்தி கோ‌ஷம் முழங்க, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் யானைகவுனியை தாண்டியது.
    தொடர்ந்து நடராஜா தியேட்டர, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் தாக்கர்சத்திரம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தங்குகிறது.
    ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. அக்டோபர் 3-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    4-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    5-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • நவராத்திரி பண்டிகை கோலாகலம்

    நவராத்திரி பண்டிகை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. கோவில்களில் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி, வணங்குவதே இந்த நாளின் சிறப்பாகும். வீடுகளில் 9 நாட்களும் கொலு வைத்தும் பக்தர்கள் சிறப்பிப்பார்கள். நவராத்திரி நாளான 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த விழாவின் புராண வரலாறு.

    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை 9 அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டை தொடங்க வேண்டும்.

    அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலுவை முறையாக ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் 9 படிகளில் பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுவுக்கு வரும் பக்தர்களுக்கு மங்களப் பொருட்களான மஞ்சள் குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சில கோவில்களில் 11 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.

  • குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்

    குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
    அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், யூனியன் கவுன்சிலர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தசரா திருவிழாவின் பத்தாம் நாளான அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை வதம் செய்கிறார்.

  • குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்

    குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
    அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், யூனியன் கவுன்சிலர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தசரா திருவிழாவின் பத்தாம் நாளான அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை வதம் செய்கிறார்.

  • திருப்பதியில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்….

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.