Blog

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

  • திருப்பதி ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளில் உற்சவர் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி 5–ம் நாளான இரவு கருடசேவை நடந்தது. மகா விஷ்ணுவின் வாகனம் கருடன் ஆகும். மகா விஷ்ணுவின் திருவடியை தாங்கி நிற்பவர் கருடன். எனவே கருடனை வழிபட்டால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை பறந்து சென்று மகா விஷ்ணு காப்பார் என்பதை உணர்த்தவே உற்சவர் மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் பரவசத்தை ஏற்படுத்தியது.

  • சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு குலுக்கல்….

    சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு வரும் 17-ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
    கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 15 பேரும், மாளிகைபுரத்தமன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். வரும் 17-ம் தேதி காலை இத்தேர்வு நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கண்டரரு ராஜீவரரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு குலுக்கல்….

    சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு வரும் 17-ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
    கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 15 பேரும், மாளிகைபுரத்தமன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். வரும் 17-ம் தேதி காலை இத்தேர்வு நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கண்டரரு ராஜீவரரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீப திருவிழா முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவாக மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அன்று சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று மகாதீபத்தை தரிசிப்பார்கள்.

    இந்த ஆண்டிற்கான தீப திருவிழா வருகிற டிசம்பர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12-ந் தேதி மகா தீப திருவிழா நடைபெறும்.
    கார்த்திகை தீபதிரு விழாவிற்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
    தொடர்ந்து தீபதிருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்சரதங்கள் பழுது நீக்கி தேரோட்டத்திற்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

  • குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா அக்டோபர் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    8 ஆம் தேதி காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் திருவிலஞ்சி குமாரர் வருகை நடக்கிறது. திருவிழாவின் நான்காம் நாளான 11–ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறும் என்றும், 12–ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அக்டோபர் 14–ந் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 15–ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 17–ந் தேதி காலை 10 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் திருவிலஞ்சி குமாரர் பிரியாவிடை நடக்கிறது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை, தேவி உலா நடக்கிறது.

  • ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதி சென்றது

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம்.
    இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை, மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதி சென்றது

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம்.
    இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை, மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • சிம்ம வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி

    திருமலையில் வருடாந்திரப் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இப்பவனியின்போது வேதபண்டிதர்கள் வேத பாராயணம் செய்தபடியும், மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கோலாட்ட நடனமாடியும், பக்தி பாடல்களைப் பாடியும், கிருஷ்ணர், நரசிம்மர், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.
    இரவு 9 மணி முதல் 11 மணி வரை அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் உப நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.