Blog

  • சாயி சீரடி சேர்ந்த கதை

     

     

     

     

    குருவின் குருவானவர் கோபால்ராவ் தேஷ்முக்

     

    குரு இல்லாத ஆன்மீக தேடல் என்றுமே நிறைவு பெற்றது இல்லை . இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் குரு . மாதா, பிதா , குரு தெய்வம் என கடவுளுக்கும் முன்பே குருவுக்கு மரியாதை கொடுத்து வரும் நம் பாரத தேசத்தில் குருவுக்கு என்றுமே ஒரு மகத்தான இடம் உண்டு .  குரு அடி பற்றி தன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு என்றுமே  சோதனைகள் வந்ததில்லை . அஞ்ஞானம்  நீங்கி ஞானம்  பெற குருவின் திருவடிகளை தொழுதலை சாலச்சிறந்தது . சீரடி சாய் பாபாவும் சத்குரு  சாயி என்றே தனது சீடர்களால் அழைக்கப்பட்டார் . அத்தகைய மஹா குருவின் ஆன்மீக குருநாதராக அறியப்பட்டவர் கோபால்ராவ் தேஷ்முக் என்ற ஞானி .

     

    திருப்பதி வெங்கடாசலபதியாக காட்சியளித்த பால சாயி

     

    சிறுவயதில் சீரடிக்கு வருவதற்கு முன்பு பாபா  , முகம்மதியப் பெரியவர் ஒருவரிடம்  வளர்ந்து வந்தார். தன் கண்ணுக்குள் வைத்து பாபாவை அந்தப் பெரியவர்  காத்து வந்தார் . சிறிது நேரம் கூட பாபாவை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார் .  திடீரென்று ஒருநாள் அந்த முதியவர்  இறந்து விட்ட நிலையில் பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்று கூறி ஒப்படைத்தார் .  தீவிர  திருப்பதி வெங்கடாசலபதி பக்தரான கோபால்ராவ் தேஷ்முக்கை மக்கள், மகா ஞானியாகவே போற்றி வந்தனர். கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வை அந்த பிஞ்சு குழந்தையின் முகம்  ஏற்படுத்தியது . தனது குழந்தையைப் போலவே வளர்த்து வந்த கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார் சீரடி மகான் .

     

    பசுவின் மலடை நீக்கிய குரு

     

    குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் மக்களிடையே   பேரும் புகழுடனும் இருந்தது அங்குள்ள சிலருக்குப்

    பொறாமையை ஏற்படுத்தியது .ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான்.

     

    இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் , பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.

     

    இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கி ,“பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார்.

     

    அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இந்தப் பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை.

     

    ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.

     

    பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான்.

     

    இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர்.

     

    பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

     

    கோபால் ராவ்தேஷ்முக் தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா இப்படி தான்  சீரடி கிராமத்தை வந்தடைந்தார். சீரடி மக்களின் வாழ்வோடு ஒன்று கலந்தார் .

     

     

  • kjfjkfkdf

    fdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsf

    dsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsf

    dsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsf

    v

    v

    v

    vdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsf

    v

    vvdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsffdsafadsf

  • நெல்லை பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
    5-ம் நாளான கடந்த 15-ந் தேதி இரவு கருட சேவை நடந்தது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், வேதவல்லி தாயார் சேஷ வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும் வீதிஉலா நடந்தது.
    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அதிகாலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 7 மணி அளவில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் வெள்ளி பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது.

  • திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயலி ….

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட் வழங்க ‘திவ்யானுக்கிரகம்’ என்ற பெயரில் புதிய செயலி விரைவில் வெளியிட உள்ளது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் விஜயா வங்கியின் உதவியுடன் 86 இ-தர்ஷன் கவுன்ட்டர்களை அமைத்துள்ளது. ஆனால் அதில் 50 கவுன்ட்டர்களில் தினசரி 2 அல்லது 3 பக்தர்கள் வந்து ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
    அதில் 27 கவுன்ட்டர்கள் தேவஸ்தான வளாகத்துக்குள் உள்ளதால் தேவஸ்தானமே அதை நிர்வகித்து வருகிறது. மற்ற 23 கவுன்ட்டர்களை விஜயா வங்கி உதவியுடன் நடத்தி வருகிறது. இங்கு வாடகை அறை முன்பதிவு, ரூ. 300 விரைவு தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் பெற்று வருகின்றனர்.
    இந்நிலையில், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் வெளியிட்டு வருகிறது. இதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
    இதுகுறித்து பக்தர்கள் சேவா தேதிக்கு முன்பாக தேவஸ்தானத்துக்கு தெரிவித்தால், அந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் மற்ற பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கி வருகிறது.
    இதுகுறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில், இந்த சேவா டிக்கெட்டுகளை எளிதில் பக்தர்களுக்கு அளிக்க தேவஸ்தானம் ‘திவ்யானுக்கிரகம்’ என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

  • புண்ணியம் செய்த சீரடி மண்

    சீரடி மண்ணை எவர் ஒருவர் பக்தியுடன் மிதிக்கின்றாரோ அவரது பாவங்கள் அனைத்தும் அவரை விட்டு நீங்கி விடும். என்பது சாய் பாபாவின் சத்திய வாக்கு .

    புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம், கோதாவரி நதிக்கரையில்அமைந்துள்ள சீரடி கிராமம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது . அங்கு வாழும் மக்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் . பின்னாளில் உலகமே போற்றும் மகான் ஒருவர் மூலம் அந்த கிராமம் ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறப் போவதை அப்போது அந்தமக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
    தன்னை நாடி வந்தோர்க்கு தாயுமானவனாக நின்ற சீரடி சாயியின் தாயும் தகப்பனும் யார் என்று யாருக்கும் தெரியாது . பெற்றோர் பெயர் என்ன ?, சொந்த ஊர் எது?அவரின் இயற்பெயர் தான் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. சீரடிமக்களுக்கு பாபாவின் அறிமுகமே ஒரு விசித்திர அனுபவம் . கிராமத்தில் இருந்த ஒருமிகப்பழமையான மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரம் இருந்தது . அதன் அடியில் .ஒரு நாள் தெய்வீக தேஜசுடன் பதினாறு வயது சிறுவன் தியானம் செய்துகொண்டிருந்தான். சிறுவனின் அருள் பொருந்திய முக அழகில் ஈர்க்கப்பட்டனர் அக்கிராமத்து மக்கள் .ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.அவர் எங்கு சென்றார் , எங்கு இருந்தார் என்பதை யாரும் அறியவில்லை.

    சாய் பாபாவின் முதல் அற்புதம்

    சாந்த் பட்டேல் என்ற வணிகர் ஒருவர் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது,பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்தகத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. பேச்சின் நடுவே சாந்த் பட்டேலின் குதிரை காணமல் போனதையும் பாபா அறிந்துக் கொண்டார் . காணாமல் போன குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். அவர் சொன்ன இடத்தில் குதிரையை கண்டெடுத்த சாந்த் பட்டேல் , பாபாவின் மகிமையை புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல்,பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே தன்னுடனையே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.
    சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது,பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி மகால்சாபதி , பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்டு அவரை சாய் என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள் . சீரடி மக்கள்பாபா என்று அழைக்க இரண்டும் சேர்ந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரேநிலைத்துவிட்டது.

    வேப்ப மரமே குரு

    சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்த பாபா சீரடியில் பழமையான மசூதி அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. மாறியது வேப்ப மரத்தின் கசப்பு மட்டுமா , சீரடி மக்களின் வாழ்க்கை முறையும் தான் . பாபா தனது வழக்கமான வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவரிடமே கேட்டார்கள். அதற்கு இந்த வேப்பமரமே தனது குருஎன்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்தஇடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒருசிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர்மக்கள் மெய் சிலிர்த்து போனார்கள். தெய்வாம்சம் பொருந்திய அவரை , தங்கள் வாழ்க்கையை உய்விக்க வந்த தெய்வமாகவே கருதினார்கள் அவரின் அற்புதங்கள் பல சீரடி மண்ணில் அரங்கேற தொடங்கியது . சாய்பாபா அந்த கிராமத்து மக்களுள் ஒருவராக மாறி அவர்களை நேசிக்க துவங்கினார் . அவரின் பெருமைகள் சீரடியையும் தாண்டி மணம் பரப்ப துவங்க பல ஊரிலிருந்தும் மக்கள் அவரின் பாதம் பணிந்துதங்கள் துயர் நீங்க சீரடிக்கு வரத் துவங்கினார்கள்.

  • கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வரும் 25ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று மாலை கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கூவாகம் கிராம வாசிகள் சார்பில் கூழ் குடங்களை கோயில் முன்பு படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு பின்னர் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்படும். 26ம் தேதி பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பில் கிராம மக்கள் சார்பில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், மகாபாரத சொற்பொழிவும் துவங்குகிறது. மே 7ம் தேதி காலையில் கூத்தாண்டவருக்கு பாலாலயம் நிகழ்ச்சியும், 8ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி மே 9ம்தேதி நடைபெறுகிறது. அன்று தான் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக வந்து கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.

    தாலி கட்டியபிறகு புதுமணப் பெண்கள் போல் காட்சி அளிக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை தங்கள் கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். மே 10ம் தேதி காலை சித்திரை தேரோட்டமும், 11ம் தேதி விடையாத்தியும் நடைபெறுகிறது. 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

  • ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் பிரம்மோற்சவம், வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் ஆதிகேசவ பெருமாள் மேளதாளம் முழங்க வலம் வந்தார்.
    நிலையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட தேர், காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு வழியாக வந்து மீண்டும் மதியம் 1.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
    தேரோட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

  • சிவ ஸ்வரூபமான மஹா பெரியவா

    மஹா பெரியவா என்று தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் . காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் . இன்றும் அவரை தெய்வத்திற்கு இணையாக மக்கள் பூஜிக்க காரணம் காஞ்சி பீடத்தின் மடாதிபதி என்கிற எந்த டாம்பீகமும் காட்டாமல் ,தன்னை நாடி வரும் பக்தர்களிடம் தனது கருணை மழையை தாராளமாக பொழிந்தவர் .
    அஷ்டமா சித்திகளை முழுமையாக கைவர பெற்றவராக இருந்தாலும் , அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எளிமையின் உருவமாக , நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகான் . இன்றும் காஞ்சி மடத்தில் உள்ள அவரின் அதிஷ்டானத்தின் முன்னே நின்று தங்களது கோரிக்கையை சொல்லி பலனடைபவர்கள் அநேகர் .
    எத்தனையோ அபூர்வ அதிசயங்களை அசாதாரண நிகழ்ச்சிகளை தனது தபோ பாலா சக்தியினால் சர்வ சாதாரணமாக காதும் காதும் வைத்தாற்போல் நடத்திக் காட்டிய நடமாடும் தெய்வம். பலரின் வாழ்க்கையில் அவர் நடத்திய , நடத்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பல .

    அதில் நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு சம்பவம் இதோ .
    நாள் தோறும் பெரியவா காலையில் எழுந்தவுடன் மடத்தில் இருக்கும் தொழுவத்தில் கோ தர்சனம் (பசுவை தரிசிப்பது வழக்கம்)
    மாலை வேளைகளில் பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை சென்று அங்கு அமர்ந்து வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். அவர் கொசுவையா லட்சியம் பண்ணுவார் ? எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல நினைத்தது எதுவோ அதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை நேரடியாக பார்த்து அவர் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இனி பிறவி கிடையாது என்பது நிச்சயம்.
    ஒருநாள் அவர் இவ்வாறு காலை கோதர்சனம் சயந்திரம் அங்கு பக்தர்களோடு சம்பாஷணை செய்யும்போது அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
    வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல இருவர் அல்லர், காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

    பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்க வில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
    நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள். தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமாக நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது. இறந்ததாக பெரிய பெரிய வேடேரினரி சர்ஜன்கள் அடித்து சொன்ன கன்றுக்குட்டி எப்படி உயிர் பெற்றது???
    ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்துகொண்டனர்.பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் புன்னகையோடு மஹா பெரியவா உள்ளே போனார்.

    பெரியவா தரிசனம் கோடி புண்ணியம் . புண்ணியத் தேடலை தொடருவோம்…

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.

    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது .

    தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.
    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது . தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .