Blog

  • புரட்டாசி பவுர்ணமியில் பாவங்களை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை….

     

    புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு உண்மை தான்.

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்களிலுருந்து விடுபடலாம்.

    அதே வேளையில்  புரட்டாசியில் வரும் பவுர்ணமி  நாளில்   சிவ  பெருமானை வழிபடுவது பலவித பாவங்களை போக்கும்  என்பது ஐதிகம்.

    அது மட்டும் இன்றி  புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அம்பாளுக்கு கொலு விருந்து  வைத்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்ததால் எழுந்த கோபத்தினால்  அன்னை உக்கிரமாக இருந்தாள்.

    அம்பாளை சாந்தம் அடைய செய்வதற்காக பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக  குளிர்ச்சியான  ஒளி பொருந்திய முகத்துடன்  அன்னை காட்சி அளித்தாள்.

     நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்தாள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

     இந்த நாளில் ஈசனை அவரவர் ஆற்றலுக்கு  ஏற்ப வழிபாடு செய்வதால் துன்பங்கள் ஒரு போதும் நெருங்காது  என்பது ஐதிகம்.

    பவுர்ணமி நாளில் சிவ பெருமானை காலையில் வழிப்பட்டால்,முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்.பகல் வேளையில் ஈசனை  வழிப்பட்டால் முற்பிறவி மட்டும் இன்றி  இந்த பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும். மாலை நேரம் அதாவது பிரதோஷ நேரத்தில் வழிப்பாடு செய்தால் அனைத்து பிறவிகளிலும் செய்த  அனைத்து பாவங்கள் நீங்கும் என்பது புரட்டாசி பவுர்ணமியின் சிறப்பு அம்சமாகும்.  

     இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    #அதன்_விவரம்_வருமாறு:-

    இன்று (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

    ஓம் நமசிவாய…….

     

     

  • கோவில் கோபுரத்தில் தேச தலைவர்களின் சிலைகள்!

     

     

    கோவிலின் கோபுரங்களில் பொதுவாக சிற்பங்கள் ,தான் இருக்கும்,  ஆனால் மதுரை மேலவாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள

    நவநீதகிருஷ்ணன் ஆலய கோபுரத்தில்  மகாத்மா காந்தி,அவரது மனைவி கஸ்தூரிபாய்,ஜவஹர்லால் நேரு,நேதாஜி ஆகியோரது சிலைகள் இடம் பெற்றுள்ளன.

     இதே போல் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் ஆலயத்தின் முகப்பில் பாரதியாருக்கு சிலை இருக்கிறது.

    பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த போது இந்த ஆலயத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. இத்தல அம்மனைப் போற்றி பாரதியார் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.

    இலங்கையில் வல்வை சிவன் கோவில் உள்ள கோபுரத்தின் தெற்கு பக்கத்தில் மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவ சிலையை காணலாம்.

     ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி,நேரு ஆகியோரின் சிலைகளை காணலாம்.

  • யம பயம் நீக்கும் பைரவர் வழிபாடு

     

    சிவபெருமானின்  அனேக  திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறைக்கு பின் வரும் அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

    சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவரைக் காணலாம். பைரவரின் திருவுருவத்தின் விசேஷம் என்னவென்றால் அவரது உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளதாக  ஐதீகம். ஜாதக  ரீதியாக பார்க்கும்  போது  பைரவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

    பைரவர் பாம்பை தன்னுடைய பூணுலாகவும்,  சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் முதலியவற்றை தன்னுடைய கரங்களில் ஏந்தியும்  காட்சி தருகிறார்.  பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது மிகவும்   விசேஷமாக கூறப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

     கிழமைகளும் பைரவர் பூஜைகளும்

     ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். வழக்கில் வெற்றி கிட்டும். கண்டச் சனியின் துன்பம் நீங்க , திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சனை செய்து  வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

    புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க, சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இந்த  நாட்கள் என்று இல்லாமல் எல்லா நாட்களிலும் , சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பைரவர்,  சனி பகவானின்  குரு என்று சொல்லப்படுவதால் ,பைரவரை வழிபடுபவருக்கு சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். மேலும் பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதோடு ,யமபயம் நீங்கும்.

     

  • ராகு தோஷம், திருமண தடை நீக்கும் தலம்!

     

    ஆற்றூர் என்ற ஊரில் திருமண தடைகளை நீக்கி ,திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இந்த ஊரில் இறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்த ஒரு மங்கை, தான் நினைத்த படியே கடவுளை மணந்து கொண்டாள். இந்த பெருமையை கொண்ட திருத்தலத்தில் சென்று வழிப்பட்டால் உங்கள் திருமண தடை நீங்கும்  என ஐதிகம் உள்ளது.

     

    இக்கோவிலின் தல வரலாறு பார்ப்போமா!

                       ஆற்றூரில் வசித்து  வந்த சிவ பக்தரின் மகள் தான் கயற்கண்ணி. அவள் திருமண வயதை எட்டியவுடன் அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

    ஆனால் அப்பெண்  மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை தான் மனதார நேசிக்கிறேன். அவரை தான் மனந்து கொள்வேன் என உறுதியாக கூறிவிட்டாள். பெற்றவர்களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவாத? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    அவளின் முடிவை  மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர். ஆனால் கயற்கண்ணியோ தன் முடிவிலுருந்து  பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே முழு மனதோடு நினைத்து பூஜித்து வந்தாள்.அவரின் நினைவிலே தன் நாட்களை கடத்தினாள்.

    அப்பெண்ணின் மன உறுதியை கண்ட  சிவபெருமான் மனம் கசிந்தார்.அவரின் பார்வை கயற்கண்ணியை  நோக்கி திரும்பியது. அப்பெண்ணை மணந்து கொள்ள முடிவு செய்தார்.

     சிவ பெருமான்  ஒரு பிரமசாரியின் வேடம் புண்டு ,தேவர்கள் சூழ தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று  ஆற்றூரில் எழுந்தருளி  கயற்கண்ணியை  மணந்தார்.

    சிவ பெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.

    ஆலய அமைப்பு!

    இத்தலத்தின் பழைய பெயர் மந்தாரவனம், தற்போது  ஆற்றூர் என அழைக்கபடுகிறது.  சொர்ணபுரிஸ்வர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.ஆலயத்தின் ஏதிரில் திருக்குளம் உள்ளது.இக்குளம் கயிலாய திர்த்தம் எனவும் ,மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

    இந்த திர்த்தத்தில் நீராடி இறைவன்,இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம்,கால சர்ப்ப தோஷம்,ராகு தோஷம், அனைத்தும் விலகும் என பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகிறது.

     அடுத்தது மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள்.ஆடுத்துள்ள கருவறையில் சொர்ணபுரிஸ்வர் சிவலிங்கத் திருமேனில் கிழக்கு திசை நோக்கி  அருள்புரிகிறார்.  இத்திருச்சுற்றில்  தெற்கில் அன்னை அபயாம்பிகை தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள், நர்த்தன விநாயகர் , தட்சணா மூர்த்தியும்,மகா விஷ்ணுவும் ,அஷ்ட புஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்

     

    சிறப்பு  பவுர்ணமி பூஜை!

           இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது  மகள் ஜாதகத்தை இறைவன் பாதத்த்தில்  வைத்து பூஜை செய்து,திரும்ப வாங்கிச் செல்கின்றார். இதை செய்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும்.

    மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க, இத்தல இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார். இத்தலத்தின் அருகில் சுகவாசி நாராணய பெருமாள்  என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.

    எனவே இந்த ஆலயத்தில் சிவ விஷ்ணு பேதம் இல்லை.

    இந்த ஆலயத்தில் , சோமவாரங்கள்,சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி,பிரதோஷம்,சோமவாரம் கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும்,இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும் ஆராதானைகளும் நடைப்பெற்று வருகின்றன.

     

  • திருமணத் தடை நீக்கும் உத்திரகோசமங்கை

    சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது. இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மங்களேஸ்வரி அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். இந்த அம்மனை ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ராகுகால வேளையில், எலுமிச்சை பழ தீபமேற்றி, ஒன்பது எலுமிச்சைப் பழங்களை உதிரியாக அன்னையின் காலடியில் சமர்ப்பித்து வந்தால், செவ்வாய்தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணத் தடை அகலும்.
    மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் பரமக்குடி, சத்திரக்குடி ஊர்களைத் தாண்டினால் வலதுபுறத்தில் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலை வரும். இந்த சாலையில்தான் உத்திரகோசமங்கை திருத்தலம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

  • திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதி…

    வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் சில நிபந்தனைகளுடன்.
    1) ஆதார் அட்டை அவசியம்.
    2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
    3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
    4) .காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
    5) .தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
    6.) உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதுர் அவசியம்.
    7) .காலை உணவு பால் இலவசம்.
    8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
    9) ஒருமுறை சென்றவந்த பிறகு
    3 மாத கழித்த பின் அனுமதி அனுமதிக்கப்படுவர்.
    10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.

  • தூய்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

    இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது அளித்துள்ளது. ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது வெள்ளி சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை, சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

    தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக் கொள்ள முடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்து கொண்டாள்.

    மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ. இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது..

    சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை. மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும். இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

     

    ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும். கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும்.

  • விரதங்கள் எதற்காக, யாருக்காக ?

     

    விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை ,எந்த தெய்வத்திற்காக ,எதற்காக  அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

               

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் ,இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.

     

    பிரதோஷம்

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷ விரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

    சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல்,மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ  வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதினால்  கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

     

    சித்ரா பவுர்ணமி விரதம்

     

    சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

     

    தை அமாவாசை விரதம்

     

    சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில் ,காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும்  அபிவிருத்தி அடையும்.

    கந்தசஷ்டி விரதம்

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு ,கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

     

                                                                                      

    மங்களவார விரதம்

    தை மாதம் முதல் செவ்வாயில்  துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

    தைப்பூச விரதம்

    தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால்,திருமண யோகம் கூடி வரும்.

     

    கேதார விரதம்

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக  முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம்  இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை . 

     

                                                                                          

    கிருத்திகை விரதம்

     கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்  சுப்பிரமணியருக்காக  அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

     

    இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.

  • திருப்பதியில் நிறைவு பெற்ற பிரம்மோற்சவ விழா…

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கருட சேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் உள்ளிட்டவைகளை காண ஆயிக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். நிறைவு நாளான இன்று காலை கோயில் குளத்தில் 1 கோடி லிட்டர் தண்ணீரில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கோயிலில் இருந்து குளம் வரை கொண்டு வந்தனர். பின்னர் வராக சுவாமி கோயில் அருகே உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரின் சக்கர ஸ்நான புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, இறகு பந்து வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் அர்ச்சகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • திருப்பதி போறீங்களா… உங்களுக்கான முக்கிய தகவல்…

    திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா? தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறை எங்கு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த தொலை பேசி எண்கள் உதவும்…
    மூல் மட் மின் தொலைபேசி எண் : 0877-2277499.
    புஷ்பா மாண்டபம் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் தொலைபேசி எண்: 0877-2277317.
    உத்ததி மட் (திருப்பதி) தொலைபேசி எண் 0877-2225187.
    ஸ்ரீ திருமல காஷி மட் தொலைபேசி எண் 0877-2277316.
    ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் தொலைபேசி எண் 0877-2277302.
    ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை தொலைபேசி எண்: 0877-2277282.
    ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் தொலைபேசி எண்: 0877-2277370.
    ஸ்ரீ புஷ்பகிரி மட் தொலைபேசி எண்-0877-2277419.
    ஸ்ரீ உட்டாரடி மட் தொலைபேசி எண்-0877-2277397.
    உடுப்பி மட் தொலைபேசி எண்-0877-2277305.
    ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் தொலைபேசி எண்: 0877-2277826.
    ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் தொலைபேசி எண்: 0877-2270597,2277383.
    ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா
    ஜீயர் மட் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ சிருங்கரி சரத மடம் தொலைபேசி எண்: 0877-2277269,2279435.
    ஸ்ரீ அஹோபீதா மட் தொலைபேசி எண் 0877-2279440.
    ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
    உடிபி மட் தொலைபேசி எண்: 0877 222 77305
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் தொலைபேசி எண்: 0877 222 77301)
    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் தொலைபேசி எண் 0877 222 77370)
    ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317
    மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் தொலைபேசி எண்: 0877 222 77302
    ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி தொலைபேசி எண் : 0877 222 77436
    ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் தொலைபேசி எண் 0877 222 77826
    ஸ்ரீ வைகநாத ஆசிரமம் தொலைபேசி எண்: 0877 222 77282
    ஸ்ரீ அஹோபில மட் பட் தொலைபேசி எண்: 0877-2279440
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் தொலைபேசி எண்: 0877 222 77269
    ஸ்ரீ வைசராஜர் மடம்
    மோதிலால் பன்சிலால் தர்மசாலா தொலைபேசி எண்: 0877 222 77445
    ஹோட்டல் நரிலமா சௌல்ரி தொலைபேசி எண்: 0877 222 77784
    ஸ்ரீ சீனிவாச சொல்ரி தொலைபேசி எண்: 0877 222 77883
    ஸ்ரீ ஹதிராம்ஜி மட் தொலைபேசி எண் : 0877 222 77240
    கர்நாடகா விருந்தினர் மாளிகை தொலைபேசி எண் 0877 222 77238
    தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் தொலைபேசி எண்: 0877 222 77245
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் தொலைபேசி எண்: 0877 222 79435
    ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் தொலைபேசி எண்: 0877-2220015