Blog

  • 2018-04-01-13-53-36

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதுவும் பள்ளி விடுமுறை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அலைமோதும். ஆனால் கோடை வெயிலில் திருப்பதிக்கு செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் தத்தளிப்பர்.
    கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாட வீதிகள், அன்னதான சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தை தடுக்க தரையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதி கோவில் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்படுகிறது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.
    கல்யாண மண்டபம், தங்கவாசல், ஆனந்த நிலையம் ஆகிய இடங்களிலும் 24 மணி நேரமும் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் கற்ப கோவிலுக்குள் வெளி காற்று வராது என்பதால் கூடுதல் ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    மேலும் திருமலையில் பஸ் நிலையம், மாட வீதிகள், லட்டு விற்பனை மையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளன.

  • 2018-04-01-09-53-28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வசந்த உற்சவம் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இரண்டு நாட்களுக்கு முன் தினம் துவங்கியது.
    வசந்த உற்சவத்தையொட்டி, உற்சவர்கள், கோவிலில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
    உற்சவத்தின் நிறைவு நாளான இன்று திரேதா யுகக் கடவுளான சீதா தேவி சமேத ராமர், துவாபர யுகக் கடவுளான ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர், கலியுக தெய்வமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி ஆகிய உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
    இரவு மூன்று யுக தெய்வங்களின் திருவீதி உலா திருமலை கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • 2018-04-01-09-48-09

    இந்த ஸ்லோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
    மன நிம்மதி, குடும்ப அமைதி தரும் ராம ஸ்தோத்திரம்
    ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
    லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
    ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
    த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
    ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
    கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
    நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
    கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
    ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
    அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
    ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷமணௌ

  • 2018-03-31-12-16-20

    தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைலமோதுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.300 கட்டணத்தில் பதிவு செய்த பக்தர்களுக்கு 4 மணி நேரமும், ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டோக்கன் பெற்று வந்தவர்களின் தரிசனத்துக்கு 3 மணி நேரமும் ஆனது. கோடைவிடுமுறை தொடங்க உள்ள நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உள்ள திருமலைக்கு செல்வதற்காக திருப்பதி-திருமலை இடையே தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  • 2018-03-31-12-05-06

    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே ‘அஷ்டதள பாத பத்மாராதனம்’ சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
    1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.

  • 2018-03-31-05-54-02

    பழநி, பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.பங்குனி உத்திர விழா திரு ஆவினன்குடி கோயிலில் மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் உலா வந்தார்.வடக்கு கிரிவீதியில் திருத்தேரில் ஏற்றம் செய்தனர். மாலை 4:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்குகிரி வீதிகளில் தேர்வலம் வந்த போது நவதானியம், பழங்கள், நாணயங்களை தேரின் மீது பக்தர்கள் வீசினர்.மாலை 6:25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று (மார்ச் 31) இரவு 10:00 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி உலா வருவார். ஏப்.,2ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைபெறும்.–மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பால்குடங்கள், தீர்த்த காவடிகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் செவ்வந்தி, செண்டுமல்லி, ரோஜா, தாமரை, வாழை, இளநீர் கொண்ட தோரணங்கள், உட்பிரகாரத்தில் நிலைமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில், திருஆவினன்குடி கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர்.

  • 2018-03-31-05-49-11

    உறையூர் நாச்சியார் கோயிலில் பெருமாள் சேர்த்தி சேவை நேற்று நள்ளிரவு வரை நடந்தது. திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், நாச்சி யார் சேர்த்தி சேவை நேற்று நடந்தது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் கண்ணாடி அறை யில் இருந்து நம்பெருமாள் தங்க பல்லக்கில் அதிகாலை 3.30 மணிக்கு புறப் பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் முன்பு உள்ள மண்டபத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்துக்கு மதியம் 1.15 மணிக்கு வந்தார். பின்னர் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடை பெற்றது. பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து அதிகாலை 1.30க்கு நம்பெருமாள் புறப்பா டாகி, இன்று காலை 4 மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார்.

  • 2018-03-31-05-39-11

    கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலையில் வேள்வி, சிறப்பு பூஜை அபிஷேகம், சுவாமி திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்த்து.
    தொடர்த்து விழாவின் 6ம் நாளான நேற்றுக் காலை மணிக்கு நாடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தரிசனக்காட்சி நடைபெற்றது. மாலையில் வெள்ளிங்கரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆதிவாசிகள் நடனம்,தாரைதப்பட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழச்சிகளும்,பால்காவடி,பன்னீர் காவடி,புஷ்பகாவடி ஆட்டம் நடைப்பெற்றது. தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • 2018-03-31-05-31-22

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தாயார் சன்னதியை சென்றடையும் சேர்த்தி சேவை கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இங்கு ஆதிபிரம்மா திருநாள் என்று அழைக்கப்படும் பங்குனி தேரோட்ட விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர், தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்தார். இதற்கிடையில் தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டையை நம்மாழ்வார் தீர்த்து வைப்பார். இதையடுத்து சமாதானமடைந்த தாயார் அந்த மோதிரத்தை ஏற்றுக்கொள்வார். இந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக நடைபெறும் சேர்த்தி சேவை வைபத்தின்போது, பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாளுடன் தாயாரும் இணைந்து சேர்த்தி சேவை சாதித்தார். வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றைய தினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், வேண்டுவன கிடைக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதனால் ரெங்கநாதரையும், தாயாரையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்தனர்.

  • 2018-03-31-05-20-48

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று பங்குனி உத்திரம் நடைபெற்றது. அப்போது தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் இரவு தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.