Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Anjaneyar vazhipattal Kidaikkum Kodi Nanmaigal

    அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் கோடானுகோடி நன்மைகள் கிடைக்கும்.

    அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால்  குபேர லட்சுமி அருள் கிடைக்கும். 

    செல்வம் பெருகும்.

    நவக்கிரக தோஷங்கள் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும்.

    மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தால் அவர்களது வித்யா பலம் (கல்வி) பல மடங்கு அதிகமாகும். ஞாபக சக்தி பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள்.

    சர்வ மனோபலம் (தைரியம்) அபிவிருத்தியாகும்.

    எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.

    பேரும், புகழும் பெருகும்.

  • Pithru Dosham Pokkum Gajendra Motcha Thalam

    கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து திருமால் காப்பாற்றிய சரித்திரம் கஜேந்திர மோட்சம் என்று பலராலும் கொண்டாடப்படுகின்றது. பல தலங்களும் கஜேந்திர மோட்ச வைபவத்தைத் தல வரலாறாகக் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் விளாங்காடு.

    கபித்தாரண்ய சேக்ஷத்திரம் என்ற பெயருடன் சென்னைக்கு தெற்கே, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களுக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் கஜேந்திர மோட்சத் தலமாகவும், நாரத முனி ஸ்ரீபிருகு மஹரிஷிக்கு நவகிரஹ மண்டல ரகசியங்களை போதித்த தலமாகவும் கொண்டாடப்படுகிறது. கருடன் மற்றும் ஆதிசேஷனின் அருள் தரும் தலமாகவும் கருதப்படுகிறது.

    சர்ப்பதோஷங்கள், பித்ரு தோஷங்களிலிருந்து விலக்கி அருள்புரியும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது விளாங்காடு. இங்கு அருள்புரியும் பெருமாளின் திருநாமம் ஸ்ரீஆதிமூல நாராயணப் பெருமாள். இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள சிலா உருவங்கள் பூமியிலிருந்து ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டவை. தல தீர்த்தம் தாமரைக் குளம்.
     

  • Ammai Noi Pokkum Samayapurathal

    அருள்மிகு சமயபுர மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அன்னை வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும் மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருள்கடாட்சம் அளிக்கின்றாள்.

    அம்மை நோயினால் பாதிக்கப் பெற்றவர்கள் இத்தலத்து அன்னையை வேண்டிக் கொண்டால், உடனடியாக நோய் நீங்கப் பெறுவர். இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாள்கள் தங்கி கோவில் ஊழியம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்.

    உடல் உறுப்புக் குறைபாடுள்ளவர்கள் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் இத்தலத்தில் வணங்கி வேண்டினால் விரைவில் நலம் பெறுவர். வியாபார வளர்ச்சி, வேளாண்மைச் செழிப்பு ஆகியவற்றிற்காகவும் இத்தலத்திற்குப் பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர்.

    இத்தலத்தில் காணிக்கை, அர்ச்சனை, அபிஷேகம், காதுகுத்தல், தங்கரதம் இழுத்தம், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்துதல் அன்னதானம் ஆகினவாகும்.

    உற்வச அம்பாளுக்குத் தினமும் ஆறு கால பூஜை அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேக தீர்த்தம் வடக்குத் திருச்சுற்றில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.
     

  • Thiruppavai Padal 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
    செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

    பொருள்:

    முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

    விளக்கம்:

    கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
     

  • January 4 – Rasi Palangal

    ஜனவரி 4
    விளம்பி வருடம் – மார்கழி 20
    04-ஜன-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    அ.கா    5.58
    நட்சத்திரம்    :    கேட்டை    ம    2.33
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பிரீதி
    ரிஷபம் – மகிழ்ச்சி 
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – பாசம்  
    கன்னி – முயற்சி
    துலாம் –  சுகம் 
    விருச்சிகம் – வரவு 
    தனுசு – ஓய்வு 
    மகரம் – பரிசு 
    கும்பம் – நிம்மதி
    மீனம் – பாராட்டு

  • Sri Biravar Arulasi Pera Vazhipadu

    ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இதனை பின்பற்றி பாருங்கள்.

    தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் சன்னிதானத்திற்கு செல்லுங்கள். 

    இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

    பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், பிரசாதத்தில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள்.

    அடுத்த சில மணித்துளிகள், நாட்கள், வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.
     

  • Anjaneyar Jayanthiku 1 lakh Vadai Malai

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக ஒரு லட்சத்து எட்டு வடை கொண்ட மாலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை கை கூப்பியபடி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக் கோயிலில் வரும் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெறவுள்ளது.

    காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். விழாவுக்காக வடை  தயாரிக்கும் பணி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று  வருகிறது. 

    இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்க , 2 ஆயிரத்து 250 கிலோ வடை மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம், 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 

    இந்தப் பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்து மாவு அரைத்து வடை தயாரிக்கும் பணி இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. இவை அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு சாத்தி பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

  • Dhoshangalai Neekum Pradhosham

    இன்று குருவாரப் பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். 

    ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம் ,பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

    ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 

    பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள் ,காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல்,மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.

    சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும். தென்னாட்டுடைய சிவனே போற்றி – எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

  • Thiruppavai padal

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    “”குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

    விளக்கம்:

    பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.”நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து “நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் “நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
     

  • January 3 Rasi Palangal

    ஜனவரி 3 
    விளம்பி வருடம் – மார்கழி 19
     பிரதோஷம் 
    03-ஜன-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    அ.கா    4.58
    நட்சத்திரம்    :    அனுஷம்    ம    1.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உயர்வு 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – லாபம் 
    கடனம் –  அன்பு 
    சிம்மம் – இன்சொல் 
    கன்னி – வரவு
    துலாம் –  தடங்கல்
    விருச்சிகம் – பகை 
    தனுசு – ஆசை
    மகரம் – சுபம்  
    கும்பம் – வாழ்வு 
    மீனம் – சாதனை