பிப்ரவரி 6
விளம்பி வருடம் – தை 23
சந்திர தரிசனம்
06-பிப்-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை முழுவதும் 0.00
நட்சத்திரம் : அவிட்டம் கா 9.07
யோகம் : மரண-சித்த யோகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
Indraya Nalla Neram
-
Thirunallaru Kumbabishegam
திருநள்ளாறு கோவிலின் 14 வருடங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவகிரகத் தலங்களில் முக்கியமானது. சனி பகவானின் மிக முக்கிய பரிகாரத் தலமுமாக திருநள்ளாறு கோயில் இருக்கிறது.
இக்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் புதுவை அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்நிலையில், தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
Kundrin meel Kudi kondulla kumaran
குன்றின் மேல் குடி கொண்டுள்ள குமரன் கோயில்கள் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. பழனி மலையில் முருகன் தண்டாயுதபாணியாக காட்சி் தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகனை தரிசிக்க மலைக்குச் செல்ல இரு வழிகள் உள்ளன. யாணை பாதை மூலம் மலைக்கு எளிதாக ஏறமுடியும். நோ் பாதை எனப்படும் மற்றொரு பாதையை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்.
நாரதர் கொடுத்த ஞானப் பழத்தை பெறுவது யார் என்ற போட்டியில், தாய் தந்தையரை சுற்றினால் உலகத்தை சுற்றியதாக பொருள் எனக்கூறி பழத்தை விநாயகர் பெற்றுவிடுகிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து, பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் "பழம் நீ " என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புராணங்களில் பழனிக்கு பல பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும், பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி என்றும் கூறப்படுகிறது. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானதாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன.
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக இருக்குமாம். தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலை க்கு சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
நவபாஷாண முருகன் சிலையை போகர் வடிவமைத்ததே மிக சுவாரசியமான தகவல். தன்னை நாடி வருவோர்க்கு போகர், நவபாஷாணத்தால் ஆன வில்லைகளை அளித்துவந்தார். அதிக வீரியம் உள்ளதால், அதை உண்டவர்கள் உயிரிழந்தனர். எனவே நவபாஷணத்தால் ஒரு சிலையை வடிவமைத்த போகர், அதன் மீது சந்தனத்தை பூசி, அந்த சந்தனத்தை வி்ல்லைகளாக்கி தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.
திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற முருகன் தலங்களில் பழனி ஒன்றாகும். தைப்பூசம் என்றாலே நினைவுக்கு வரும் பழனிக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானனோர் பல்ேவறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பக்தர்கள் நேர்்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தைப்பூசம் தவிர, பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் விழாக்களும் பழனியில் பிரசித்தம்.
அறுபடை வீடுகளில் பழனி ஒன்று என்றாலும், பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோயிலே 3-வது வீடு என்று கூறுபவர்களும் உண்டு. இக்கோயிலே திரு ஆவினன்குடி ஆகும். வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவினன்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி போய்விட்டு வந்தால் எங்கே பஞ்சாமிர்தம் என்றுதான் அனைவரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு பழனி பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. மலை வாழைப்பழம், நாட்டுச் சர்்க்கரை, கற்கண்டு, பேரிச்சம் பழம் மற்றும் தேன் 9ஆகிய 5 பொருட்களும் சேர்ந்த கலவைதான் பஞ்சாமிர்தம். வாசனைக்காக இப்போது பஞ்சாமிர்தத்தில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் 5 லட்சம் ரூ பாய்க்கு விற்பனையாகும் பஞ்சாமிர்தம், விழாக்காலங்களில் 25 லட்சம் வரை விற்பனை ஆகிறது. நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தத்தை தயாரிக்க விஞ்ச் நிலையம் அருகே மையம் ஒன்று உள்ளது. கோயில் சார்பில் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய மலை மேலும், அடிவாரத்திலும் கோயில் நிர்வாகம் சார்பில் தனி ஸ்டால்களும் உண்டு.
பழனி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்வித்து வழங்கப்படும் விபூதியை பிரசாதமாக மட்டுமின்றி, வீட்டு உபயோகத்துக்கும் வாங்கிச் செல்கிறார்கள்.
-
Indraya Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – எதிர்ப்பு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – மகிழ்ச்சி
கடனம் – பரிசு
சிம்மம் – சுகம்
கன்னி – தாமதம்
துலாம் – வரவு
விருச்சிகம் – சிக்கல்
தனுசு – சுபம்
மகரம் – பயம்
கும்பம் – நன்மை
மீனம் – துணிவு
சந்திராஷ்டமம் : ஆயில்யம் -
Indraya Nalla Neram
பிப்ரவரி 5
விளம்பி வருடம் – தை 22
05-பிப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை அ.கா 5.11
நட்சத்திரம் : அவிட்டம் முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Valam Tharum Sevvai Viradham
வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்றால் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.
வாரத்தின் மூன்றாவது நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிழமைக்கு உகந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம்.
வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும்.
முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும். வாழ்வு சிறக்கும்.
-
Thai amavasai Tharpanam
தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கோயில்களில் கட்டுக்கடங்கா கூட்டம் குவிந்துள்ளது.
இராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித தீர்த்தமாடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து இராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்காணோர் வழிபாடு நடத்தி உள்ளனர். தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவி கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், நோய் தீர்த்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இந்துகளின் முக்கிய புனிததலமான கன்னியாகுமரியில் முக்கடல்கள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள் தண்ணீர்யிட்டு மற்றும் பிண்டங்களை கடலில் கரைத்தும் வழிப்பட்டனர்.
-
Indraya Rasi palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – புகழ்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – பீடை
கடனம் – நன்மை
சிம்மம் – அமைதி
கன்னி – செலவு
துலாம் – தாமதம்
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – உயர்வு
மகரம் – முயற்சி
கும்பம் – ஆக்கம்
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் : பூசம் -
February 4 Amavasai
பிப்ரவரி 4 – தை அமாவாசை
விளம்பி வருடம் – தை 21
தை அமாவாசை
04-பிப்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை இ 3.01
நட்சத்திரம் : திருவோணம் கா 6.28
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Garuda Sevai Vedio
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஐந்தாம் நாளான நாளை மறுதினம் தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி
சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏழாம் நாளான, 6ம் தேதி காலை தேர் திருவிழாவும், 8ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோவில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.