Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thirunallaru Yagasalai poojai thodangiyadhu

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது. 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜையும், தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி உள்ளது. 
     
    வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது. கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • Thirupathy Break Dharisanam

    திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி உற்சம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ரதசப்தமி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.

    மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வரும் அழகான காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவது வழக்கம். இந்தாண்டு அவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12-ம் தேதிகளில் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் அந்த நாள்களில் விஐபி-க்கள் நேரடியாக வந்தால் மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 12-ம் தேதி தர்ம தரிசனம், நடைபாதை மார்க்கத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • Sivalayangalil valam varuvadhu eppadi

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

    நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். 

    பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஜெயம் 
    ரிஷபம் – ஆதாயம் 
    மிதுனம் – அசதி 
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – வருத்தம் 
    கன்னி – அமைதி
    துலாம் –  செலவு  
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – கவலை
    மகரம் – உயர்வு 
    கும்பம் – வெற்றி 
    மீனம் – தாமதம் 
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
     

  • Trithiyai Naal Indru

    பிப்ரவரி 7
    விளம்பி வருடம் – தை 24
    07-பிப்-2019 வியாழன் 
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    7.10
    நட்சத்திரம்    :    சதயம்    கா    11.31
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Narasimmar Vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

     
    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.
     

  • Sidharukaai Udayungal

    நம் துன்பங்கள் சிதற சிதறுகாய நடையுங்கள். விநாயக பெருமானுக்கு சிதறுகாய் உடைத்தால் நம் தீவினைகளும் சிதறுகாய் போல சிதறும் என்பது ஐதீகம்.  காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

    விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.

    தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.
     

  • Vinayakar Arukampul

    அருகம்புல் மாலை அணிவித்து காக்கும் கடவுளான விநாயகரின் அருளை பெறலாம்….  

    அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாகியது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா?… இந்த கதையை படியுங்கள். 

    அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.

    விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

    எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

    விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.

    உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.

    அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.விநாயகரை குளிர்விக்க அருகம்புல் மாலை.
     

  • Srinivasa Kalyanam

    சென்னை ஆன்மீக கண்காட்சியில் சீனிவாச திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    சென்னை அடுத்த வேளச்சேரியில் ஹிந்து ஆன்மிகம்,  சேவை அறக்கட்டளை, பண்புப் பயிற்சி அறக்கட்டளை சார்பில் ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடைபெற்றது. 

    கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த ஆன்மீக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆன்மிகம், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  

    கண்காட்சியின் இறுதி நாளில் வன விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விருக்ஷ வந்தனம்,  நாக வந்தனம் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுவாமி எழுந்தருளினார்.

    இதையடுத்து, அங்குரார்ப்பணம்,  தலசுத்தி,  புண்யாவசனம்,  சங்கல்பம், மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம்,  அட்சதை போடும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பதி திருமலை பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசித்தனர்.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆதாயம் 
    ரிஷபம் – கவலை
    மிதுனம் – சிக்கல்
    கடனம் –  சுகம் 
    சிம்மம் – நன்மை 
    கன்னி – லாபம் 
    துலாம் –  முயற்சி  
    விருச்சிகம் – பக்தி 
    தனுசு – அன்பு
    மகரம் – அச்சம்
    கும்பம் – தனம் 
    மீனம் – போட்டி 
    சந்திராஷ்டமம்    :    மகம்