இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம் – பயம்
மிதுனம் – ஆசை
கடனம் – வாழ்வு
சிம்மம் – பரிசு
கன்னி – செலவு
துலாம் – நன்மை
விருச்சிகம் – ஆர்வம்
தனுசு – தெளிவு
மகரம் – உறுதி
கும்பம் – முயற்சி
மீனம் – பரிவு
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
Rasi Palangal
-
Feb 17 Pradhosha Naal
பிப்ரவரி 17
விளம்பி வருடம் – மாசி 5
பிரதோஷம்
17-பிப்-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 2.46
நட்சத்திரம் : புனர்பூசம் ம 2.18
யோகம் : சித்த யோகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Siddhargal Ennum Perarivalargal
சித்தர்கள்…என்று சொன்னாலே ஒரு சிலிர்ப்பு உச்சிமுதல் பாதம் வரை படரும். சொன்னவுடனே அவர்களின் அகண்ட பேரறிவு பற்றிய வியப்பு நம்மை உலுக்கிவிடும். நன்கு கூர்ந்து கவனித்தால் அவர்களின் அன்பு பேரண்டதைவிடப் பெரியது; அந்தப்பேரண்டம் முழுதும் நிறைந்து இருக்கும் அச்சிறு துளியில் நாம் நனைந்தால்கூடப் போதுமே என்ற எண்ணமே மேலோங்கும்.

காரணம் அவர்களே குறிப்பிடுகிறார்கள் இனிக்கும், தித்திக்கும் இறையெனும் தேனைத் தொட்டுச் சுவைக்கவில்லை. அந்தத் தேன் இருக்கும் கலனுக்குள்ளேயே விழுந்துவிட்டோம் என்கிறார்கள், எனில் அவர்கள் அனுபவிக்கும் அந்த இறையெனும் பேரறிவு, பேரானந்தம் எத்தகைய அதி தித்திப்பானது, எவ்வளவு உயர்வானது என்பதை நாம் ஓரளவுக்காவது நம் சிற்றறிவுக்கு எட்டியவரை புரிந்துகொள்ள இயலும்.
சித்தர்கள் பற்றிய செவி வழிச்செய்திகளை விட அவர்கள் பாடல்களை சித்த மார்க்கத்தில் முறையாகப்பயணிக்கும் குருவிடம், முறையாக வெளிப்படுத்தும் சித்த மார்க்க ஆய்வாளர்களிடம் கேட்டு அறிந்து புரிந்து கொள்ள முயற்சிக்கும்போதுதான் நான் மேலே குறிப்பிட்ட வரிகளின் பொருள் புரியும். இல்லையெனில் சித்தர்கள் என்பவர்கள் டிவிக்களில்,செய்தித்தாள்களில் சித்த மருத்துவம் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் சிறு மருத்துவர்கள் அல்லது குறி சொல்பவர்கள், சோதிடம் சொல்பவர்கள் என்று மட்டுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடும்.
சரி அப்படி என்றால் சித்தர்கள் யார்? அவர்கள் என்ன என்ன செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? அவர்களால் மனிதகுலம் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தர முடிந்ததா? அவர்கள் கடவுளர்களா? கடவுளின் தூதுவர்களா? யார்தான் அவர்கள் எனும் கேள்விகள் பல எழுவது இயற்கை.
"என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே"என்கிறார் திருமூலர் சித்தர் பெருமான்.

சரி…ஏன் சித்தர்கள் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், ருஷ்ய மொழியில் என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் ஆங்கிலம் செய்யுமாறே, பிரெஞ்சு செய்யுமாறே, ருஷ்ய செய்யுமாறே…என்று கூறவில்லை?
அவர்கள் ஏன் தமிழைத்தவிர பிற மொழிகளில் சித்தரிலக்கியம் எழுதப்படவில்லை?

"அவனருளாலே அவன்தாள் பணிந்து" என்பது தமிழரின் இறைபற்றிய புரிதல். அதாவது, "அவனது (இறைவனது) கால்களைப்பற்ற வேண்டுமானால் (வணங்க வேண்டுமானால்) அதற்கும் அவனருள் இருந்தால்தான் சாத்தியம்" என்பதைப்போல சித்த பெருமக்களின் அருளாசியை வேண்டி வணங்கிக் கோரி "சித்தர்கள் எனும் பேரறிவாளர்கள்" தொடரில் சக்தி ஆன்லைன் இணையத்தில் நாம் அனைவரும் பயணிப்போம். மிகைப்படுத்தல் ஏதும் இன்றி உள்ளது உள்ளபடி அறிய முயற்சிப்போம்.
ஓம் நமசிவய.
– விஸ்வநாத்
-
Kanchi Kamatchi Veedhi Ula
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
6ம் நாள் திருவிழாவை யொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏலக்காய், முந்திரி,பாதாம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலையால் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மனும், சரஸ்வதி, லட்சுமி தேவியர்கள் வெள்ளிக்கவசத்துடன் வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒலிக்க வெண்முத்து சப்பரத்தில் 4 ராஜ வீதிகளில் திருவீதியுலா வந்தார்.
காமாட்சி அம்மனை வரவேற்று வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கற்பூரம் ஆர்த்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
-
Maha Saneeswarar Abishega video
புதுச்சேரி அருகே மொரட்டாண்டி மகா சனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற்றது. இன்று மதியம் ராகு பகவான் கடக் ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் , கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப்பகுதியான மொரட்டாண்டி மகா சனீஸ்வரர் ஆலயத்தில் 14 அடி உயரமுள்ள உள்ள ராகு , கேது பகவானுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் , 108 கிலோ சுண்டல் படைத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி , விழுப்புரம் மாவட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது
-
Saibaba koil Kumbabishega vedio
ஆவடி அருகே ஆனந்த சாயிபாபா திருக்கோயிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாயிபாபா திருக்கோயில். இங்கு திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர், கடன் பிரச்சனைகளில் உள்ள அனைவருக்கும் தீர்வும் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் கொண்ட கோவிலாகும். இந்த கோவிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆலய நிறுவன தலைவர் ரமேஷ் மைனாவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் மற்றும் அஸ்வத் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – அச்சம்
ரிஷபம் – சோர்வு
மிதுனம் – பயம்
கடனம் – பக்தி
சிம்மம் – களிப்பு
கன்னி – சுகம்
துலாம் – கவலை
விருச்சிகம் – வெற்றி
தனுசு – நன்மை
மகரம் – சாதனை
கும்பம் – லாபம்
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம் -
Indraya Nalla Neram
பிப்ரவரி 16
விளம்பி வருடம் – மாசி 4
16-பிப்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 7.22
நட்சத்திரம் : திருவாதிரை ம 3.41
யோகம் : சித்த யோகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Namakatti Thayarippadhu
புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். பெருமாளுக்கு சிறப்பு நெற்றியில் பளிச்சென இடப்படும் நாமம். இந்த நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?
நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது இந்த கிராமம்..நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு என்ற கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுகின்றனர். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைத்து, ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்த உடன், மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுகின்றனர்.
அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்துவிடுகிறது. அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்பிறகு மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
-
Garuda Dharisanam
கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.
கருடனைக் கண்ட உடனே அனைவரும் தரிசிப்போம். ஆனால் முறையாக தரிசிக்க வலது கை மோதிர விரலால் இடது கன்னம் மற்றும் வலது கன்னம் இரண்டையும் மாறி மாறி மூன்று முறை அதாவது மொத்தம் ஆறு முறை ‘நாராயணா’ என்ற நாமம் சொல்லி தரிசிக்க வேண்டும்.கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.
ஞாயிறு கிழமையில் கருடனைத் தரிசித்தால் நோய் அகலும்.
திங்கள் கிழமை கருடன் தரிசினம் – குடும்ப நலம் ஏற்படும்.
செவ்வாய் கிழமை கருடன் தரிசினம் – தைரியம் உண்டாகும்.
புதன் கிழமை கருடன் தரிசினம் – எதிரிகள் நம்மை விட்டு மறைவார்கள்.
வியாழன் கிழமை கருடன் தரிசினம் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி கிழமை கருடன் தரிசினம் – திருமகளின் அருள் கிடைக்கும்.
சனி கிழமை கருடன் தரிசினம் – முக்தி கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் கருடனை முறையாக தரிசித்து கருட பகவானின் அருளை பெற்றுக்கொள்ள முடியும்.