Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஆகஸ்ட் 30 – சுபமுகூர்த்த நாள்

    ஆகஸ்ட் 30 – சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – ஆவணி 14
    ஆகஸ்ட் 30 – 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி அ.கா 4.38
    நட்சத்திரம் :  புனர்பூசம் இ 9.09
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஆகஸ்ட் 30 – இன்று எந்த ராசிக்கு வரவு, எந்த ராசிக்கு செலவு…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மகிழ்ச்சி
    ரிஷபம்         – பெருமை
    மிதுனம்     – நேர்மை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   ஈகை
    கன்னி         –    சினம்  
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  அலைச்சல்
    தனுசு         –    கவனம்
    மகரம்         –   தோல்வி
    கும்பம்         –     அன்பு
    மீனம்         –    வாழ்வு  
    சந்திராஷ்டமம்    –         விசாகம், அனுஷம்

  • விநாயக பெருமானை பற்றிய அற்புத உண்மைகளை தெரிந்து கொள்வோம்…!

    விநாயகர் பெருமான் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார் விநாயகர். யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

    விநாயகர் பெருமான் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

    தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

    சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள். எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

     

  • ஆகஸ்ட் 29 – ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  களிப்பு
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – ஆர்வம்  
    கடகம்         –  சாந்தம்  
    சிம்மம்         –   செலவு   
    கன்னி         –    பாசம்
    துலாம்         –     உறுதி
    விருச்சிகம்     –  உதவி
    தனுசு         –    கீர்த்தி
    மகரம்         –   சலனம்
    கும்பம்         –     லாபம்
    மீனம்         –    கவனம்
    சந்திராஷ்டமம்    –         சுவாதி, விசாகம்

  • ஆகஸ்ட் 29 – ஏகாதசி

    ஆகஸ்ட் 29 – ஏகாதசி
    குரோதி வருடம் – ஆவணி 13
    ஆகஸ்ட் 29 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  தசமி அ.கா 4.59
    நட்சத்திரம் :  திருவாதிரை இ 8.38
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • ஆகஸ்ட் 28 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அனுகூலம்  
    ரிஷபம்         – மறதி
    மிதுனம்     – ஆசை
    கடகம்         –  நிம்மதி
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    தோல்வி
    துலாம்         –     அமைதி  
    விருச்சிகம்     –  சுகம்
    தனுசு         –    பயணம்
    மகரம்         –   நலம்
    கும்பம்         –     முயற்சி
    மீனம்         –    லாபம்
    சந்திராஷ்டமம்    –         சித்திரை, சுவாதி

  • ஆகஸ்ட் 28 – இன்றைய நல்லநேரம்

    *
    குரோதி வருடம் – ஆவணி 12
    ஆகஸ்ட் 28 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : தசமி
    திதி நேரம் :  நவமி கா 6.10
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் இ 8.33
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆகஸ்ட் 27 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மேன்மை
    ரிஷபம்         – உதவி
    மிதுனம்     – சோர்வு
    கடகம்         –  போட்டி  
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    நட்பு  
    துலாம்         –     நன்மை  
    விருச்சிகம்     –  செலவு  
    தனுசு         –    ஆதாயம்
    மகரம்         –   கவலை
    கும்பம்         –     வெற்றி  
    மீனம்         –    சுகம்     
    சந்திராஷ்டமம்    –         அஸ்தம், சித்திரை

  • ஆகஸ்ட் 27 – பாஞ்சராத்திர ஜெயந்தி

    ஆகஸ்ட் 27 – பாஞ்சராத்திர ஜெயந்தி
    குரோதி வருடம் – ஆவணி 11
    ஆகஸ்ட் 27 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் :கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் :  அஷ்டமி கா 7.30
    நட்சத்திரம் :  ரோகிணி இ 8.54
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • காலபைரவர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

    கோகுலாஷ்டமியை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த  காலபைரவர்  ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் தீபம் மற்றும் பஞ்சதீபமிட்டு ஆயிரக்கணக்கன பக்தர்கள் வழிபட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் புகழ்வாய்ந்த காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும்.

    பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகுலாஷ்டமி என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

    இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு பால், பன்னீர், இளநீர், குங்குமம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.