Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா, 800-கிலோ எள்ளு,800-கிலோ காட்டன் துணி 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகர கும்ப தீபம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர சனீஸ்வர பகவான் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு கிரக பெயற்சியின் போது விசேஷ பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம், அதன்படி இன்று நடைபெற்ற சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு ஒன்பது வகையான பூக்கள் மற்றும் ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 5:23 மணிக்கு மகர ராசியில் இருந்து சனி பகவான் கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பஞ்ச தீபங்கள் ஏற்றி சனி பகவானை நல்லெண்ணெயால் குளிர வைத்து தோஷங்கள் நீங்க பரிகாரம் செய்து மனம் உருகி வேண்டினர்.

    மேலும் நாடு நலம் பெற நல்லது நடக்க வேண்டும் என 800 கிலோ எள்ளு 800 கிலோ காட்டன் துணி மற்றும் 8-ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் மகரகும்ப தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை வணங்கி சென்றனர்.

    இதனை தொடர்ந்து முதல் முறையாக சனிபகவானுக்கு இடைவிடாமல் 44 நாட்கள் நல்லெண்ணெய் அபிஷேகம்,மகா யாகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • டிசம்பர் 21 – இன்றைய நாள் எப்படி?

    டிசம்பர் 21 – இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் – மார்கழி 5
    21-டிச-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி கா 11.53
    நட்சத்திரம் : ரேவதி ந.இ 12.20
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • டிசம்பர் 21 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆர்வம்
    ரிஷபம்         –    சினம்
    மிதுனம்     –   பாசம்  
    கடகம்         –  உயர்வு  
    சிம்மம்         –   இன்பம்  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     லாபம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     சாதனை
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      சிந்தனை
    மீனம்         –      பாராட்டு
    சந்திராஷ்டமம்    –      மகம், பூரம்

  • அருள்மிகு கெங்கையம்மன் எல்லையம்மன் கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா…

    ஆம்பூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் எல்லையம்மன் கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா. 30 அடி உயரம் கொண்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயில் மார்கழி மாத திருத்தேர் திருவிழா வருடா வருடம் மார்கழி முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆலங்கார ஆராதனை பூஜைகளும், கூழ் ஊற்றுதல் மற்றும் பொங்கல் வைத்து பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து தாரை தப்பட்டை நாதஸ்வரம் முழங்க, வாணவேடிக்கை, கரகாட்டம், மயிலாட்டத்துடன்  அருள்மிகு கெங்கையம்மன் திருத்தேர் வீதி உலா கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு பஜார், எஸ்.கே ரோடு, கிருஷ்ணாபுரம் , பெருமாள்கோவில்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலமாக சென்றது அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேர் மீது தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி உப்பு, மிளகு ,பொறி ஆகியவற்றை போட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • டிசம்பர் 20 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         –    பொறுமை
    மிதுனம்     –   நன்மை
    கடகம்         –  சிரமம்
    சிம்மம்         –   ஆக்கம்
    கன்னி         –    சிக்கல்  
    துலாம்         –     தேர்ச்சி
    விருச்சிகம்     –  தெளிவு
    தனுசு         –     நிறைவு
    மகரம்         –    நிம்மதி
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      பணிவு  
    சந்திராஷ்டமம்    –      ஆயில்யம், மகம்

  • டிசம்பர் 20 – இன்றைய நல்லநேரம்

    டிசம்பர் 20 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 4
    20-டிச-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : அஷ்டமி ம 1.59
    நட்சத்திரம் : உத்திரட்டாதி ந.இ 1.39
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • திருநள்ளாறு சனி பெயர்ச்சி முன்னேற்பாடுகள்… குருமகா சந்நிதானம் நேரில் ஆய்வு…

    திருநள்ளாறு சனி பெயர்ச்சி முன்னேற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் நேரில் ஆய்வு செய்தார்.

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் 20ம் தேதி சனி பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திருநள்ளாறு கோவிலுக்கு  வருகை புரிந்தார். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் செய்த ஆதீனம் பின்னர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டார்.

      அதனைத் தொடர்ந்து கோவிலில் செய்யப்பட்டு வரும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் மற்றும் கோவில் உள்துறை செயல்பாடுகள் குறித்து ஆதின கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  • சனி பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு ராஜயோகம்… கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்…

    சனி பகவான் நாளை (20/12/2023) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாலை சரியாக 5:20 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    கும்பம் ராசியில் ஆட்சி செய்யப்போகும் சனிபகவான் என்ன பலன்களை கொடுக்கப்போகிறார்.

    மேஷம் – லாப சனி
    ரிஷபம் – தொழில் சனி
    மிதுனம் – பாக்ய சனி
    கடகம் – அஷ்டமத்து சனி
    சிம்மம் – கண்டச்சனி
    கன்னி – ருண ரோக சத்ரு சனி
    துலாம் – புண்ணிய சனி
    விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி
    தனுசு – தைரிய சனி
    மகரம் – பாத சனி
    கும்பம் – ஜென்ம சனி
    மீனம் – விரைய சனி

    தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.  இந்த சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

    இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்…

    மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆண்டு முதல் சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையும்.

    மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி காலம். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

    சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கண்டச்சனியாக பயணம் செய்தாலும் ஆட்சி பெற்ற சனி சச மகா யோகத்தை தரப்போகிறார். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

    கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமரும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

     

  • திருவாபரண பெட்டியில் இருக்கும் ஆபாரணங்கள்….

    பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

    திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்… மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது திருவாபரணப் பெட்டி.

    1. திருவாபரணப் பெட்டி

    2. வெள்ளிப் பெட்டி

    3. கொடிப் பெட்டி

    இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

    திருவாபரணப் பெட்டி – பெட்டி 1

    ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

    – திருமுகம் – (சாஸ்தாவின் முகக் கவசம்)

    – (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

    – ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

    – வலிய சுரிகை (பெரிய கத்தி)

    – செறிய சுரிகை (சிறிய கத்தி)

    – யானை – யானை விக்ரஹம் 2

    – கடுவாய் – புலி விக்ரஹம் 1

    – வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

    – பூர்ணா – புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

    – பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

    – நவரத்தின மோதிரம்

    – சரப்பளி மாலை

    – வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

    – மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

    – எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

    வெள்ளி பெட்டி (பெட்டி 2)

    வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,

    தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

    இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

    கொடிப்பெட்டி (பெட்டி 3)

    மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,

    யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.

    கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

    இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

    திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

    வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய … மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.

  • டிசம்பர் 19 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  போட்டி
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   செலவு
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   தடங்கல்  
    கன்னி         –    தாமதம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  எதிர்ப்பு
    தனுசு         –     வரவு
    மகரம்         –    புகழ்   
    கும்பம்         –      முயற்சி
    மீனம்         –      பாராட்டு
    சந்திராஷ்டமம்    –      ஆயில்யம்