Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு…

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் என்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாக மார்கழி தமிழ்த்திருவிழாவாகிய பகல் பத்து மற்றும் இராப்பத்து என்றநிகழ்சிகள் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது

    இந்நிலையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாணதும் ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊருமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து முடித்து இராப்பத்து ஆரம்பிக்கும் நாளான இன்று வைகுண்டஏகாதசி என்று அழைக்கப்படும் இந்நாளில் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும் வருடம் ஒருமுறை மட்டுமே இந்த பரமபதவாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது இன்று திறக்கப்பட்ட இந்த பரமபதவாசல் வழியாக முதலில் பெரியபெருமாளும் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் உள்ளிட்டவர்களும் வெளியில் வருவர்.

    அதன் பின்னர் பக்தர்கள் கூட்டம் வெளியேறுவர் இன்று திறக்கப்படும் இந்த பரமபதவாசல்வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்க்கு சென்று வருவதாக ஜதீகம் எனவே உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளதால் அங்குசென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தனர்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதால் பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

  • உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திரு விக்ரம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று வைகுண்ட வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் எழுந்தருளி பக்த்தர்களுக்கு அருள் பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வைகுண்ட வாசலின் வழியே பெருமாள்  வருவதைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என ஆரவாரம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

     

  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு பக்தர்கள் சாமி தரிசனம்

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

    கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது .. அதனைத் தொடர்ந்து  13 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது .. பகல் பத்து பத்தாவது நாளான நேற்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

    மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 23 ஆம் தேதி  இன்று அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.

    அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர். பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம்  கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.

    அதனை தொடர்ந்து  வரும் டிசம்பர் 29 ஆம் தேதி கைத்தல சேவையும்,  30ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும். அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார். குறிப்பாக வேடுபறி நிகழ்வு பரமபத வாசல் திறப்பு கிடையாது

    வரும் 2024 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். 2 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும். 21 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்து அருள் புரிவார்.

     

  • வைகுண்ட ஏகாதசியன்று சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம்

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • சகல செல்வங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்… அனுஷ்டிப்பது எப்படி?

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

    துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    அனுஷ்டிப்பது எப்படி?

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்து டன் மலர்களால் அலங்காரம்…

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பத்து டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில். மலர் அலங்கார வேலைபாடுகளை கண்டு ஒரே நேரத்தில் அகல திறக்கும் பக்தர்களின் வாய் மற்றும் கண்கள்.

     நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் நாளை அதிகாலை ஒரு மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் முழுவதையும் தேவஸ்தான நிர்வாகம் சுமார் 10 டன் எடையுள்ள இந்திய மலர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்கள் ஆகியவற்றால் கண் கவரும் வகையில் அலங்கரித்துள்ளது.

    கோவில் முன் வாசல் துவங்கி, தங்க கொடிமரம்,பலிபீடம், சொர்க்கவாசல், துணை சன்னதிகள்,கோவிலில் உள்ள பல்வேறு மண்டபங்கள் ஆகிய அனைத்து பகுதிகளும் மலர் அலங்காரம் கண்டு பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.

    சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார வேலைபாடுகளை பார்த்து மெய்மறந்து செல்கின்றனர். பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார மற்றும் மின்சார சரவிளக்கு அலங்கார வேலைப்பாடுகளை பார்த்து ரசிக்கும் பக்தர்களின் கண்களும் வாயும் ஒரே நேரத்தில் அகல திறக்கின்றன.

     

  • டிசம்பர் 23 – வைகுண்ட ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  போட்டி
    ரிஷபம்         –   பக்தி
    மிதுனம்     –   பரிவு   
    கடகம்         –  நிறைவு   
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    தனம்
    துலாம்         –     சினம்
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     எதிர்ப்பு
    மகரம்         –    மேன்மை  
    கும்பம்         –      அசதி
    மீனம்         –      ஆர்வம்
    சந்திராஷ்டமம்    –      உத்திரம், ஹஸ்தம்

  • டிசம்பர் 23 – வைகுண்ட ஏகாதசி

    டிசம்பர் 23 – வைகுண்ட ஏகாதசி
    சோபகிருது வருடம் – மார்கழி 7
    23-டிச-2023 சனி
    வைகுண்ட ஏகாதசி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி கா 6.27
    நட்சத்திரம் : பரணி இ 10.34
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • டிசம்பர் 22 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    தனம்
    மிதுனம்     –   அச்சம்  
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   புகழ்
    கன்னி         –    முயற்சி
    துலாம்         –     கவலை
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    தடங்கல்
    கும்பம்         –      எதிர்ப்பு  
    மீனம்         –      மகிழ்ச்சி  
    சந்திராஷ்டமம்    –      பூரம், உத்திரம்

  • டிசம்பர் 22 – குற்றாலம் குற்றாலநாதர் தேர்

    டிசம்பர் 22 – குற்றாலம் குற்றாலநாதர் தேர்
    சோபகிருது வருடம் – மார்கழி 6
    22-டிச-2023 வெள்ளி
    குற்றாலம் குற்றாலநாதர் தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 10.0
    நட்சத்திரம் : அசுவினி இ 10.54
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்