Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ரம்பா திருதியைப் பற்றி தெரியுமா?

     

     

    அட்சயத் திருதியை  பற்றி அனைவருக்கும் தெரியும்.அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள். அதன்  முலம் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

     அட்சயத் திருதியை பற்றி தெரியும். ரம்பா திருதியைப் பற்றி தெரியுமா?

    செல்வத்தை அள்ளி தருவது அட்சயத் திருதியை என்றால் ஐஸ்வரியத்தோடு பேரழகை அள்ளித் தரும் விரதம் ரம்பா திருதியை ஆகும். இந்த விரதம் தேவலோக நடன  மங்கையின் ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும். இந்த நாளில் தான் தேவேந்திரனின் அறிவுரையின் பேரில், பார்வதி தேவியை வழிபட்டு, ரம்பை தன்னுடைய பேரழகை மீட்டெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை அமாவாசைக்கு அடுத்த முன்றாவது நாளில் “ரம்பா திருதியை” விரதம் கடைப்பிடிக்கபடுகிறது.

     ஒருமுறை தேவசபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்கிடையே நடந்த நடனப் போட்டியின்போது, தேவலோக பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள். அப்போது அவள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழ, நிலைகுலைந்த அவள், கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்.

    தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க… ‘இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன். அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.

    மறுநாள் முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள். ‘நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் ‘முதல் அழகி’ என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்’ என்று கண்ணீர் பெருக பேசினாள் ரம்பை. ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், ‘ உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!’ என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

      

    ‘தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்” என்று மன்றாடினாள் ரம்பை. அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், ‘பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்’ என்றான். அதன்படி, பூலோகம் வந்த ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது.

    கார்த்திகை மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, மறுநாள் சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, பொன்மேனியளாகக் காட்சி தந்தார். ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர ஆசி கூறினார்.

      

    மேலும் அவள் மேற்கொண்ட இந்த விரதத்தை அவளது பெயரால் “ரம்பா திருதியை’ என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் அதிகரிக்குமென்றும் அருளினாள். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. எனவே நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் பிரதிமை அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவற்றை தானம் செய்து பூஜையை நிறைவு செய்வர். பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இந்த பூஜையினால் நல்ல துணை, நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு முதலியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம். திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

  • ஐயப்பன், மகிஷியை கொன்ற எருமைக்கொல்லி தலம்

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் எருமேலி. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.

    வாபர் கோயில்:
    எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

    பேட்டைதுள்ளல்:
    ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், ” எருமேலி’ என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

    பேரூர்தோடு:
    பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

  • சபரிமலை பெரியபாதை…

    ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.

    இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது.

    இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே. இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்.

  • தீபத்தன்று மட்டுமே நிகழும் அபூர்வ கோலம்

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளுள் ஒன்று.
    அந்த அற்புதக் காட்சியைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.
    கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் பல நூறு லிட்டர் நெய்யில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
    இது உலகத்துக்கு வளத்தையும் ஒளியையும் வழங்கும் நிகழ்வு. அந்த நாளில், இறைவன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருப்பார்.
    மகா தீபம் ஏற்றியதும் பக்தர்களுக்கு காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஐந்தே நிமிடங்களில் உடனடியாக பிரகாரத்துக்குள் குடியேறிவிடுவார்.
    இந்த அதிசயக் காட்சி அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
    இப்படி இறைவன் காட்சியளிப்பதற்கு ஒரு புராண காரணம் கூறப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் என அத்தனைபேரும் சிவபெருமானை மட்டுமே சுற்றி, வழிபட்டு வந்துகொண்டிருந்த போது, பார்வதி சிவன் மீது மிகுந்த கோபம் கொண்டாராம்.
    அதனால் சிவனும் சக்தியும் ஒன்று தான், ஆணும் பெண்ணும் சமம் தான், அவர்களுக்குள் வேறுபாடு எதுவும் கிடையாது என சக்திக்கும் தன்னுடைய பக்தர்களுக்கும் ஒருசேர உணர்த்தவே சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோலம் பூண்டு, சக்தியை மகிழ்வித்ததாக, புராணங்கள் குறிப்பிடுகின்றன.

  • விரதங்களும் அவற்றின் பலனும்!

     

    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    சோமவார விரதம்
    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
    சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
    பிரதோஷம்
    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
    சித்ரா பவுர்ணமி விரதம்
    நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
    தெய்வம் : சித்திரகுப்தர்
    விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

      

     

    திருவாதிரை விரதம்
    நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
    தெய்வம் : நடராஜர்
    விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
    பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
    சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
    பலன் : குழந்தைப்பேறு.

    சிவராத்திரி விரதம்
    நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
    தெய்வம் : சிவன்
    விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான  உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
    பலன் : நிம்மதியான இறுதிக்காலம்.

    கிருத்திகை விரதம்
    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்.

    நவராத்திரி விரதம்
    நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
    தெய்வம் : பார்வதிதேவி
    விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
    பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்.

     

  • விரதங்களும் அவற்றின் பலனும்!

     

    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    சோமவார விரதம்
    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
    சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
    பிரதோஷம்
    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
    சித்ரா பவுர்ணமி விரதம்
    நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
    தெய்வம் : சித்திரகுப்தர்
    விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

      

     

    திருவாதிரை விரதம்
    நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
    தெய்வம் : நடராஜர்
    விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
    பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
    சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
    பலன் : குழந்தைப்பேறு.

    சிவராத்திரி விரதம்
    நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
    தெய்வம் : சிவன்
    விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான  உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
    பலன் : நிம்மதியான இறுதிக்காலம்.

    கிருத்திகை விரதம்
    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்.

    நவராத்திரி விரதம்
    நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
    தெய்வம் : பார்வதிதேவி
    விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
    பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்.

     

  • கோவிலில் பல்லி ஏன் வணங்கப்படுகிறது?

     

    பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில்  கர்பகிரகத்தின் மேல் கூரையில்  தங்கம் மற்றும் வெள்ளியில்  பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

    பல்லி நம் உடல்மீது எங்கு விழுந்தால் என்ன பலன்!

    தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.
    தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்.
    நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி.
    நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்.
    வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி.
    வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
    முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
    முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.
    கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்.
    பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்.
    கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை.
    மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.
    மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி.
    மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.
    தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்.
    நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
    மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்.
    மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

  • கோவிலில் பல்லி ஏன் வணங்கப்படுகிறது?

     

    பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில்  கர்பகிரகத்தின் மேல் கூரையில்  தங்கம் மற்றும் வெள்ளியில்  பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

    பல்லி நம் உடல்மீது எங்கு விழுந்தால் என்ன பலன்!

    தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.
    தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்.
    நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி.
    நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்.
    வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி.
    வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
    முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
    முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.
    கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்.
    பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்.
    கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை.
    மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.
    மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி.
    மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.
    தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்.
    நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
    மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்.
    மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

  • ஐயப்பனின் பதினெட்டு படிகளின்  சிறப்பு!

     

     

    பதினெட்டு என்ற எண்ணுக்கு வரலாற்று சிறப்புண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது. நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்திநெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.

     

     

     

    முதல் படி – பிறப்பு நிலையற்றது: நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.

    இரண்டாம் படி – சாங்கிய யோகம்: பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

    மூன்றாம் படி – கர்ம யோகம்: உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.

     நான்காம் படி -ஞான யோகம்: பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.

     ஐந்தாம் படி- சன்னியாச யோகம்: நான், எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச் சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.

     ஆறாம் படி- தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிக இன்றியமையாதது. ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவை இழுத்த இழுப்புக்குச் செல்லாமல் தடுத்து, இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களையும் நல்லவிதமாக இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம்படி அமைந்துள்ளது.

    ஏழாம் படி – ஞானவிஞ்ஞான யோகம்: அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.

    எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்: எப்போதும் இறைச் சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.

    ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக காண வைப்பது.

     பத்தாம் படி – விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.

    பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.

     பன்னிரண்டாம் படி – பக்தி யோகம்: இன்ப – துன்ப, விருப்பு – வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி, அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.

    பதிமூன்றாம் படி – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.

    பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்: பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.

    பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்: தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக்கொள்ள வழிகாட்டுகிறது.

    பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்: இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.

    பதினேழாம் படி – ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.

    பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

     

    18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்

    ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்

    மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்

    ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்

    ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்

    எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்

    பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்

    பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்

     பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்

    பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்

     பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்

    பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்

    பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்

    பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

       

        

     

    கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்.

    18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்

    ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்

    இரண்டாம் திருப்படி : சிவன்

    மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்

    நான்காம் திருப்படி : பராசக்தி

    ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்

    ஆறாம் திருப்படி : முருகன்

    ஏழாம் திருப்படி : புத பகவான்

    எட்டாம் திருப்படி : விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்

    பத்தாம் திருப்படி : பிரம்மா

    பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்

    பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்

    பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்

    பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்

    பதினாறாம் திருப்படி : சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி : கேது பகவான்

    பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

     இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் .எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும்.

  • கார்த்திகை மாத சோமவார சிவ பூஜையில் சங்காபிஷேகம்!!

     

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

    பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். 

    சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

    அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் யாருக்கும் தெரியாமல் இப்படி மழுவியது.

    சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

    இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

     

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.

    இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

    கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.