Author: சக்தி ஆன்லைன் டீம்

  • deepavali-palagarangal

    தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

    அதிரசம்

    தேவையான பொருட்கள்….
    2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

    செய்முறை ….

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
    சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
    சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
    அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

    மொறு மொறு கை முறுக்கு

    முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முறுக்கு செய்முறை

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
    ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.
    முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
    சுவையான கை முறுக்கு ரெடி.

    பாசிப்பருப்பு நெய் உருண்டை….

    தேவையான பொருட்கள்….

    பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

    நெய் உருண்டை செய்முறை

    பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
    அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.

  • 2016-10-26-05-20-33

    முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.
    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.
    இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
    இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.
    கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

    தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.
    கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

  • kandha-sasti-viradham-irukkum-murai

    முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

    இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
    இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

    கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

    தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

    கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

  • 2016-10-25-14-13-39

    கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.

    ஓம் அருள்வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரியவேல் போற்றி
    ஓம் அணைக்கும் வேல் போற்றி
    ஓம் அன்புவேல் போற்றி
    ஓம் அற்புதவேல் போற்றி
    ஓம் அடக்கும்வேல் போற்றி
    ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
    ஓம் ஆளும்வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    ஓம் இனிய வேல் போற்றி
    ஓம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈடிலா வேல் போற்றி
    ஓம் உக்கிரவேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில்வேல் போற்றி
    ஓம் எளியவேல் போற்றி
    ஓம் எரிவேல் போற்றி
    ஓம் எதிர்வேல் போற்றி
    ஓம் ஒளிர்வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர்வேல் போற்றி
    ஓம் கனகவேல் போற்றி
    ஓம் கருணைவேல் போற்றி
    ஓம் கந்தவேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர்வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
    ஓம் கொடுவேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர்வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்திவேல் போற்றி
    ஓம் சதுர்வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வசக்திவேல் போற்றி
    ஓம் சினவேல் போற்றி
    ஓம் சீறும்வேல் போற்றி
    ஓம் சிவவேல் போற்றி
    ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ரவேல் போற்றி
    ஓம் சிங்கார வேல் போற்றி
    ஓம் சுரர்வேல் போற்றி
    ஓம் சுடர்வேல் போற்றி
    ஓம் சுழல்வேல் போற்றி
    ஓம் சூரவேல்போற்றி
    ஓம் ஞானவேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனிவேல் போற்றி
    ஓம் தாரைவேல் போற்றி
    ஓம் திருவேல் போற்றி
    ஓம் திகழ்வேல் போற்றி
    ஓம் தீரவேல் போற்றி
    ஓம் தீதழிவேல் போற்றி
    ஓம் துணைவேல் போற்றி
    ஓம் துளைக்கும்வேல் போற்றி
    ஓம் நல்வேல் போற்றி
    ஓம் நீள்வேல் போற்றி
    ஓம் நுண்வேல் போற்றி
    ஓம் நெடுவேல் போற்றி
    ஓம் பருவேல் போற்றி
    ஓம் பரன்வேல் போற்றி
    ஓம் படைவேல் போற்றி
    ஓம் பக்தர்வேல் போற்றி
    ஓம் புகழ்வேல் போற்றி
    ஓம் புகல்வேல் போற்றி
    ஓம் புஷ்பவேல் போற்றி
    ஓம் புனிதவேல் போற்றி
    ஓம் புண்யவேல் போற்றி
    ஓம் பூஜ்யவேல் போற்றி
    ஓம் பெருவேல் போற்றி
    ஓம் பிரம்மவேல் போற்றி
    ஓம் பொருவேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    ஓம் மந்திரவேல் போற்றி
    ஓம் மலநாசகவேல் போற்றி
    ஓம் முனைவேல் போற்றி
    ஓம் முரண்வேல் போற்றி
    ஓம் முருகன்வேல் போற்றி
    ஓம் முக்தி தருவேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜவேல் போற்றி
    ஓம் ருத்திரவேல் போற்றி
    ஓம் ருணவிமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ரவேல் போற்றி
    ஓம் வல்வேல் போற்றி
    ஓம் வளர்வேல் போற்றி
    ஓம் வழிவிடுவேல் போற்றி
    ஓம் வரமருள்வேல் போற்றி
    ஓம் விளையாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல்போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல்வேல் போற்றி
    ஓம் வெற்றிவேல் போற்றி
    ஓம் ஜயவேல்போற்றி
    ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி!!!

  • kandha-sasti-viradham-iruppavargal

    கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.

    ஓம் அருள்வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரியவேல் போற்றி
    ஓம் அணைக்கும் வேல் போற்றி
    ஓம் அன்புவேல் போற்றி
    ஓம் அற்புதவேல் போற்றி
    ஓம் அடக்கும்வேல் போற்றி
    ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
    ஓம் ஆளும்வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    ஓம் இனிய வேல் போற்றி
    ஓம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈடிலா வேல் போற்றி
    ஓம் உக்கிரவேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில்வேல் போற்றி
    ஓம் எளியவேல் போற்றி
    ஓம் எரிவேல் போற்றி
    ஓம் எதிர்வேல் போற்றி
    ஓம் ஒளிர்வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர்வேல் போற்றி
    ஓம் கனகவேல் போற்றி
    ஓம் கருணைவேல் போற்றி
    ஓம் கந்தவேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர்வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
    ஓம் கொடுவேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர்வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்திவேல் போற்றி
    ஓம் சதுர்வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வசக்திவேல் போற்றி
    ஓம் சினவேல் போற்றி
    ஓம் சீறும்வேல் போற்றி
    ஓம் சிவவேல் போற்றி
    ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ரவேல் போற்றி
    ஓம் சிங்கார வேல் போற்றி
    ஓம் சுரர்வேல் போற்றி
    ஓம் சுடர்வேல் போற்றி
    ஓம் சுழல்வேல் போற்றி
    ஓம் சூரவேல்போற்றி
    ஓம் ஞானவேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனிவேல் போற்றி
    ஓம் தாரைவேல் போற்றி
    ஓம் திருவேல் போற்றி
    ஓம் திகழ்வேல் போற்றி
    ஓம் தீரவேல் போற்றி
    ஓம் தீதழிவேல் போற்றி
    ஓம் துணைவேல் போற்றி
    ஓம் துளைக்கும்வேல் போற்றி
    ஓம் நல்வேல் போற்றி
    ஓம் நீள்வேல் போற்றி
    ஓம் நுண்வேல் போற்றி
    ஓம் நெடுவேல் போற்றி
    ஓம் பருவேல் போற்றி
    ஓம் பரன்வேல் போற்றி
    ஓம் படைவேல் போற்றி
    ஓம் பக்தர்வேல் போற்றி
    ஓம் புகழ்வேல் போற்றி
    ஓம் புகல்வேல் போற்றி
    ஓம் புஷ்பவேல் போற்றி
    ஓம் புனிதவேல் போற்றி
    ஓம் புண்யவேல் போற்றி
    ஓம் பூஜ்யவேல் போற்றி
    ஓம் பெருவேல் போற்றி
    ஓம் பிரம்மவேல் போற்றி
    ஓம் பொருவேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    ஓம் மந்திரவேல் போற்றி
    ஓம் மலநாசகவேல் போற்றி
    ஓம் முனைவேல் போற்றி
    ஓம் முரண்வேல் போற்றி
    ஓம் முருகன்வேல் போற்றி
    ஓம் முக்தி தருவேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜவேல் போற்றி
    ஓம் ருத்திரவேல் போற்றி
    ஓம் ருணவிமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ரவேல் போற்றி
    ஓம் வல்வேல் போற்றி
    ஓம் வளர்வேல் போற்றி
    ஓம் வழிவிடுவேல் போற்றி
    ஓம் வரமருள்வேல் போற்றி
    ஓம் விளையாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல்போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல்வேல் போற்றி
    ஓம் வெற்றிவேல் போற்றி
    ஓம் ஜயவேல்போற்றி
    ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி!!!

  • 2016-10-25-13-24-02

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியலில் காணிக்கையாக ரூ.68.63 லட்சம் கிடைத்தது.
    ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாள்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. 30 நாட்களுக்கு பிறகு, நேற்று சுவாமி, அம்மன் சன்னதி, பஞ்சமூர்த்திகள் சன்னதி, கோதண்டராமர் கோயில், நம்பு நாயகி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
    கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் ரொக்கம் 68 லட்சத்து, 63 ஆயிரத்து, 245 ரூபாய் இருந்தது.
    உண்டியலில் மேலும் தங்கம் 27 கிராம், வெள்ளி 3 கிலோ 420 கிராம் இருந்தது. உண்டியல் கணிக்கிடும் பணியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர், பேஷ்கார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • 2016-10-25-13-06-47

    நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
    இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    தொடர்ந்து வரும் அக்டோபர் 27ம் தேதி காலை 8 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசுக் காட்சி கொடுத்தல், இரவு 7.20 மணிக்கு சுவாமி – அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

  • 5

    ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் அக்டோபர் 30 ஆம் தேதி சஷ்டி விழா தொடங்கவுள்ளது.

    அக். 30 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணியளவில் சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

    அன்று முதல் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நவம்பர் 5-ம் தேதி காலை 8 மணிக்கு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், 10.30 மணிக்கு சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனை ஆராதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அன்று சூரசம்ஹாரம் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தலும், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

    நவ. 6-ம் தேதி காலை சண்முகசுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இரவு 7 மணியளவில் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நவ. 7,8 தேதிகளில் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. நவ. 9-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும், 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சண்முக சுவாமி யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • 2016-10-23-13-07-56

    ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
    அந்தவகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோயிலில் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 26 ஆம்தேதி சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோயிலுக்கு செல்லும் அவர், அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

  • 2016-10-23-12-53-23

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் 42 லட்ச ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் கருவறையில் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது.
    குடவரைக் கோயிலான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    குடவரை கோயில் என்பதால் மலை மீதுள்ள வெப்பம் அப்படியே சன்னதிக்குள் இறங்குகிறது. இதனால் கோயிலுக்குள் அதிகளவில் வெப்பம் இருக்கும். கோயில் கருவறையில் சில ஆண்டுகளுக்கு முன் கருவறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.
    சில மாதங்களிலேயே அது பழுதானது. இதையடுத்து தற்போது கோயில் நிர்வாகத்தின் முயற்சியால் உபயதாரர் மூலம் ரூ.42 லட்சம் செலவில் 30 டன் அளவிலான நவீன வகை குளிர்சாதனங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.