Author: லிங்கேஷ்

  • Chidamparam aani thirumanjanam

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடியப்படியே கோயில் கருவறைக்கு சென்றனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ர தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம் இந்த இரண்டு திருவிழாக்களிலும் கோவில் கருவறையில் உள்ள மூலவர் நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒன்பதாம் நாள்  நிகழ்வாக கருதப்படும் தேரோட்டம் நேற்று நடைபெற்ற முடிவடைந்தது. நேற்று தேர் நிலையை வந்தடைந்தவுடன் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் கீழே இறக்கப்பட்டு கோவில் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில்  சித்சபையில் வைக்கப்பட்டனர்.

    இனறு காலையில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபரண மற்றும் ரகசிய பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர் சிவகாமசுந்தரி நடனம் ஆடிய படியே கோயில் கருவறைக்கு செல்கின்றனர். இந்த காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் திருட்டுப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.

  • July 12 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உயர்வு
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – வெற்றி  
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   பகை
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     தெளிவு
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     உறுதி
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      பொறுமை
    மீனம்         –      ஓய்வு
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம், திருவோணம்

  • July 12 2024 Aani uthiram darisanam

    ஜூலை 12 – ஆனி உத்திர தரிசனம் …
    குரோதி வருடம் – ஆனி 28
    ஜூலை 12 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி ம 12.15
    நட்சத்திரம் :  உத்திரம் மா 4.20
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • July 11 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆக்கம்
    ரிஷபம்         – அச்சம்
    மிதுனம்     – ஓய்வு
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   பிரீதி
    கன்னி         –    ஊக்கம்  
    துலாம்         –     தனம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      தெளிவு
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –         பூராடம், உத்திராடம்

  • July 11 2024 Indrayanaal

    ஜூலை 11 – ஆனி உத்திர அபிஷேகம் …
    குரோதி வருடம் – ஆனி 27
    ஜூலை 11 – 2024
    வியாழன்
    சிதம்பரத்தில் தேர்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 10.19
    நட்சத்திரம் :  பூரம் ம 1.46
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • Thiruthani kamathchi amman koil kumbabishegam

    திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. பெரும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் …

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே‌.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று. 12 ஆண்டுககள் கடந்து விட்ட நிலையில் கோயில் அறங்காவல் குழு சார்பில் திருப்பணிகள் மேற்கொண்டு கோயில் கோபுரம்,மூலவர் சன்னதி உட்பட சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்கள்,வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெறும் ‌.

    விழாவில் மூன்றாம் நாளான இன்று காலை மஹா பூர்ணாஹுதி, ஹோம பூஜைகள், தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசம் மற்றும் மூலவர் சன்னதி கோபுர உச்சியில் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்போது கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது.

     

  • July 10 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – நற்சொல்  
    கடகம்         –  பாராட்டு
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    நலம்
    துலாம்         –     பயம்
    விருச்சிகம்     –  அச்சம்
    தனுசு         –     மறதி
    மகரம்         –    பணிவு
    கும்பம்         –      அசதி
    மீனம்         –      கவனம்
    சந்திராஷ்டமம்    –         மூலம், பூராடம்

  • July 10 2024 Subamuhurthanaal

    ஜூலை 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் …
    குரோதி வருடம் – ஆனி 26
    ஜூலை 10 – 2024
    புதன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 8.31
    நட்சத்திரம் :  மகம் கா 11.20
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • Thirupathy azhvar thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதும் ஆக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.

    யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானம் நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

     அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு  தெளித்தனர்.

  • July 09 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சுகம்
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – நன்மை
    கடகம்         –  சிரமம்  
    சிம்மம்         –   பிரீதி
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     தெளிவு
    விருச்சிகம்     –  பாராட்டு
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      விருத்தி
    மீனம்         –      பரிசு  
    சந்திராஷ்டமம்    –         மூலம்