Author: cmsadmin

  • காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் பணிகள் விறு விறு….

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

     

  • காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் பணிகள் விறு விறு….

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

     

  • ஔவையார் ஒரு சித்தரா?

    ஆத்திச்சூடி தெரியும்,  அதைப் பாடிய ஔவைப் பாட்டியையும் தெரியும். ஆனால் அவர் ஒரு சித்தர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

    நமது தமிழ் மூதாட்டி ஔவை ஒரு பெண் சித்தர்தான் என்கிறார்கள், சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்  அன்பர்கள். அதற்கு அவரின் பாடல்களையே ஆதாரமாக காட்டுகிறார்கள் அவர்கள். ஔவையார் பெண் சித்தர் என்பதற்கு அவரது ஔவைக் குறள், வினாயகர் அகவல் போன்றவைகளே சாட்சி என்கிறார்கள்.

    நரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்

    உரம்பெறும் நாடியொன் றுண்டு

    உந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்

    நின்றது நாடி நிலை

    உந்தியு னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்

    அந்தி யழலுருவ மாம்

    நாபி யகத்தே நலனுற நோக்கிடில்

    சாவது மில்லை யுடம்பு

    ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்

    ஓவிய மாகு முடம்பு

    மயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு

    உயிர்ப்பின்றி யுள்ளே பதி

    வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை

    ஈசன்றன் வாசலி லேற்று.

                                   – ஔவையார்

     

    இந்த பாடலில் நாடிகளைப் பற்றி நுணுக்கமாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார் ஔவைப் பாட்டி.

    உடலிலுள்ள 72000 நாடிகளில் முதன்மையான நாடிகள் பத்து. இவற்றுள் முதன்மையான நாடியானது, உந்தி வழியாக சிரசு வரை கீழும் மேலுமாகப் பதிந்திருக்கிறது. நாடிகளின் இயக்கங்களைத் தெரிந்து கொண்டு, அதன் வழியாக செறிவாகி, ஒடுங்கி, நீடுகின்ற ஒளியைக் காண்பதே அறிவின் சிறப்பாகும் என்கிறார் ஔவையார். அவ்வாறு சிவத்தை அறிந்து, உணர்ந்து, அடங்கியிருப்பவர் நாடிகளில் எல்லாம் சிவம் நிறைந்திருக்கும்.

    வாயுவின் வழக்கத்தை அறிந்து, செறிந்து, அடக்கினால் ஆயுள் பெருக்கம் உண்டாகும். வெளியே போகின்ற வாயுவை உள்ளே அடக்கப் பழகிக் கொண்டால் தேகம் சிவத்துக்கு ஒப்பாகும். இதில் விசேஷம் என்னவென்றால், வழக்கமான சித்தர் பாடல்களைப் போல மறைபொருளாகச் சொல்லப்படாமல், எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவே சொல்லிவிட்டார் ஔவையார்.

    மேலும் ஐந்து புலன்களையும் ஒடுக்கி, மெய்யறிவான சிவத்தோடு ஒன்றி இருந்தால் சரீரம் அழியாது என்றும், வாயுவை வசப்படுத்தி, சுவாசத்தை உள்ளடக்கப் பழகியவர்களுக்கு எளிதில் சிவத்தியானம் வாய்க்கும் என்றும் சிவத்தியானம், குண்டலினி யோகம், வாசியோகம் பற்றி ஔவை எளிமையாக விளக்குகிறார்.

    அட்டமகா சித்திகளை ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம் என்பது ஔவையின் கருத்து. ஆனால் சித்த சமாதி நிலைக்கு, சிவானந்த சிவயோக சித்திக்கு பல வருடங்கள் முயன்று உழைக்க வேண்டும் என்கிறார். வினாயகர் அகவலில் குண்டலினி யோகம் பற்றி இதுபோல் பல எளிமையான தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார் அருந்தமிழ் மூதாட்டி ஔவை.

  • கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான பலகாரங்கள்….

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

     

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….

    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

  • கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான பலகாரங்கள்….

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

     

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….

    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

  • மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ வழிகாட்டி….

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்து அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி இந்த இலவச தகவல் வழிகாட்டி APP ஐ உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் குறித்து முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கும் வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது. பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
    அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் ‘PINAKIN’ என்ற அப்ளிகேஷனை தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
    ‘PINAKIN’ எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம்.

  • மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ வழிகாட்டி….

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்து அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி இந்த இலவச தகவல் வழிகாட்டி APP ஐ உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் குறித்து முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கும் வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது. பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
    அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் ‘PINAKIN’ என்ற அப்ளிகேஷனை தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
    ‘PINAKIN’ எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம்.

  • சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்க கிரீடம்….

    சிதம்பரம் நடராஜருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானம் ஆகியவற்றை சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கினர்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை மற்றும் உலக அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை 28-ம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தநிகழ்ச்சியின் நிறைவு நாளில் மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ர நாம ஹோமம் மற்றும் ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது.
    இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த பக்தர் காயத்திரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமிசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியானமும் செய்து திங்கள்கிழமை  கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் வழங்கினர். இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும். நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானமும் சிறப்பு ஆராதனைக்கு பிறகு திங்கள்கிழமை பொதுதீட்சிதர்களால் பொருத்தப்பட்டது.

  • சதுர்த்தி விழாவுக்குத் தயாராக, பாகுபலி விநாயகர்!

    வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருப்பதையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் ஏராளமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    ஐம்பது ரூபாய் முதல் இருபது லட்ச ரூபாய் வரை இங்கே உருவாக்கப்பட்டும் விநாயகர் சிலைகளில் இந்த வருடப் புதுமை… ’பாகுபலி விநாயகர்’. சிவ லிங்கத்தை விநாயகர் தோளில் தூக்கிச் செல்வது போன்ற பாகுபலி படக்காட்சி, இந்தச் சிலையில் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, பஞ்சபூத விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், சூரன் விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், அர்த்தநாரீஸ்வர விநாயகர் என இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் வித்தியாசங்களுக்குப் பஞ்சமில்லை.

    சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் காகிதக் கூழ், கிழங்குமாவு உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இப்பகுதியில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வாங்கிச் செல்வதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

  • சிவபெருமானை சூரியன் வழிபட்ட அதிசயக் காட்சி!

    திருச்சி கல்லணை ரோடு சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சூரியன் தன் ஒலியால் மூலவரை வழிபட்ட காட்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

    திருவெறும்பூர் அருகே உள்ள சர்கார்பாளையத்தில் கரொகாலச் சோழனால் காவிரி தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கே ஆவணி ஏழு, எட்டு, மற்றும் ஒன்பதாம் தேதிகளில் சூரிய ஒளி முன் மண்டபம் வழியாக மெல்ல நகர்ந்து கொடிமரம் வழியாக மூலவரை வந்தடைகிறது.

    இதன் மூலம் சூரிய பகவானே சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். இந்த ஆண்டு இந்த சூரிய வழிபாடு இன்று காலை 6 முதல் 6.30 மணி வரை நடந்தது. அப்போது சூரிய ஒளி காசி விஸ்வநாதரின் நெற்றிப் பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது காண்போரை பக்திப் பரவசம் கொள்ளச் செய்தது.