Author: cmsadmin

  • ஓணம் பண்டிகைக்கு சபரிமலை நடை திறப்பு எப்போது?

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 13-ந்தேதி திறக்கப்படுகிறது
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின்போதும் முக்கிய பண்டிகைகளின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
    அதேபோல மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
    இதனிடையே ஆவணி மாத பூஜைக்காக சமீபத்தில் திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை கடந்த வாரம் அடைக்கப்பட்டது.
    இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வருகிற செப்டம்பர் 13-ந்தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
    மறுநாள் முதல் சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

  • மரியாளின் பிறப்புப் பெருவிழா….

    தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாளின் பிறப்புப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பூண்டி மாதா திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடியைப் பக்தர்கள் பேராலயத்தைச் சுற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறு தேரை பக்தர்கள் தூக்கி வந்தனர். பிறகு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி கொடியைப் புனிதம் செய்து ஏற்றினார்.

    இதில், பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஷ் ஜேசுதாஸ், ஆன்மிக தந்தைகள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் சுற்றுவட்டார பங்குத் தந்தைகள் பங்கேற்றனர். ஆயர் தலைமையில் மரியாள் – தூய ஆவியின் கோயில் என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு திருப்பலியும், சிறு தேர் பவனியும் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி செப்டம்பர் 8ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.

  • வேளாங்கண்ணி–திருப்பதி இடையே சிறப்பு ரயில்

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    வேளாங்கண்ணியில் இருந்து 6–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருப்பதி சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அதுபோல, வேளாங்கண்ணியில் இருந்து 8–ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–செகந்திராபாத் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • வேளாங்கண்ணி–திருப்பதி இடையே சிறப்பு ரயில்

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    வேளாங்கண்ணியில் இருந்து 6–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருப்பதி சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அதுபோல, வேளாங்கண்ணியில் இருந்து 8–ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–செகந்திராபாத் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் தேரோட்டம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பத்தாம் நாளான புதன் கிழமை காலை தேர்திருவிழா நடைபெற்றது.

    திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
    பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க காலை 6.05 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
    அதன்பின்னர் காலை 7.45 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8.10 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் தேரோட்டம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பத்தாம் நாளான புதன் கிழமை காலை தேர்திருவிழா நடைபெற்றது.

    திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
    பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க காலை 6.05 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
    அதன்பின்னர் காலை 7.45 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8.10 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • விநாயகர் சிலைகள் தயார்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்ய, விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.
    வருகிற 5–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

  • விநாயகர் சிலைகள் தயார்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்ய, விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.
    வருகிற 5–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

  • ரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65.66 லட்சம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கையாக ரூ. 65.66 லட்சம் கிடைத்துள்ளது.

    வைணவத் தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இங்குள்ள நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் பல்வேறு சன்னதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.

    கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் எண்ணப்பட்டன.

    இதில் ரொக்கமாக ரூ. 65 லட்சத்து 66 ஆயிரத்து 108ம், தங்கம் 125 கிராமும், வெள்ளி 1,135 கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 229-ம் இருந்தன. இது கடந்த மாதம் கிடைத்த காணிக்கையைவிட ரூ. 11 லட்சம் அதிகமாகும்.

  • ரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65.66 லட்சம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கையாக ரூ. 65.66 லட்சம் கிடைத்துள்ளது.

    வைணவத் தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இங்குள்ள நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் பல்வேறு சன்னதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.

    கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் எண்ணப்பட்டன.

    இதில் ரொக்கமாக ரூ. 65 லட்சத்து 66 ஆயிரத்து 108ம், தங்கம் 125 கிராமும், வெள்ளி 1,135 கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 229-ம் இருந்தன. இது கடந்த மாதம் கிடைத்த காணிக்கையைவிட ரூ. 11 லட்சம் அதிகமாகும்.