Author: cmsadmin

  • ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு….

    மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறதுஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு:
    புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.
    இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.
    இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார். அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

    யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான். வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.
    அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.
    பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

  • மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்…

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருக்கோவிலில் மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பாகனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது.

    அதன்பிறகு சுவாமி, அம்மன் முன்னிலையில் பாகனுக்கு அங்கம் வெட்டிய லீலையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் ஆகியோர் ஆவணி மூல வீதி களில் உலா வந்தனர். மாலையில் கோவிலில் உள்ள யானை மகால் முன்பு திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். அவர் முன்பு சைவ சமய ஸ்தாபித்த லீலை ஓதுவார்களால் பாடப்பெற்றது.

    இன்று காலை சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து ஆவணி வீதி, மேலமாசி வீதி வழியாக இம்மையிலும் நன்மை தருவார் கோவிலை அடைந்தனர். அங்கு வளையல் விற்ற லீலை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

  • ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ர உற்சவம்….

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் செப்டம்பர் 13 ஆம் தேதி பவித்ர உற்சவம் தொடங்குகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பவித்ர உற்சவம் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடக்கிறது.
    இந்த உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோவில் கொடிமரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவம் மண்டபத்துக்கு வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
    உற்சவத்தின் முதல் நாளான வருகிற 13-ந்தேதி நம் பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு யாக சாலைக்கு 9.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு சிறப்பு திருவாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அன்றிரவு 10 மணிக்கு யாக சாலையில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    2-ம் நாளான 14-ந்தேதி பிற்பகலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு அங்கோபாங்க எனப்படும் பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், உப யநாச்சியார் ஆகியோர் மீது முற்றிலும் நூலினால் அங்கோபாங்க அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தா னத்தில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு வருகிறார். நம்பெருமாள் அங்கிருந்தபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானத்துக்கு 10.15 மணிக்கு சென்றடைகிறார்.

    விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். உற்சவ காலங்களில் தினமும் மாலையில் நம்பெருமாள் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ர உற்சவம்….

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் செப்டம்பர் 13 ஆம் தேதி பவித்ர உற்சவம் தொடங்குகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பவித்ர உற்சவம் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடக்கிறது.
    இந்த உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோவில் கொடிமரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவம் மண்டபத்துக்கு வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
    உற்சவத்தின் முதல் நாளான வருகிற 13-ந்தேதி நம் பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு யாக சாலைக்கு 9.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு சிறப்பு திருவாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அன்றிரவு 10 மணிக்கு யாக சாலையில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    2-ம் நாளான 14-ந்தேதி பிற்பகலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு அங்கோபாங்க எனப்படும் பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், உப யநாச்சியார் ஆகியோர் மீது முற்றிலும் நூலினால் அங்கோபாங்க அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தா னத்தில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு வருகிறார். நம்பெருமாள் அங்கிருந்தபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானத்துக்கு 10.15 மணிக்கு சென்றடைகிறார்.

    விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். உற்சவ காலங்களில் தினமும் மாலையில் நம்பெருமாள் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • ஆந்திரவில் பின்தங்கிய வகுப்பினருக்கு திவ்ய தரிசன சுற்றுலா….

    பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை வாரம் ஒருமுறை திவ்யதரிசன சுற்றுலா அழைத்துச் செல்ல ஆந்திர அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் வாழும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை ஸ்ரீசைலம், திருமலை, விஜயவாடா, மங்களகிரி உள்ளிட்ட கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்ல அம்மாநில அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
    இந்த சுற்றுலாவுக்காக ஒரு மண்டலத்தில் 200 முதல் 250 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, தரிசனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஆந்திர அறநிலையத்துறை ஏற்க உள்ளது. இதற்கு மக்களை எவ்வாறு தேர்வு செய்வது என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    இம்மாத இறுதிக்குள் இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆந்திரவில் பின்தங்கிய வகுப்பினருக்கு திவ்ய தரிசன சுற்றுலா….

    பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை வாரம் ஒருமுறை திவ்யதரிசன சுற்றுலா அழைத்துச் செல்ல ஆந்திர அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் வாழும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை ஸ்ரீசைலம், திருமலை, விஜயவாடா, மங்களகிரி உள்ளிட்ட கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்ல அம்மாநில அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
    இந்த சுற்றுலாவுக்காக ஒரு மண்டலத்தில் 200 முதல் 250 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, தரிசனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஆந்திர அறநிலையத்துறை ஏற்க உள்ளது. இதற்கு மக்களை எவ்வாறு தேர்வு செய்வது என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    இம்மாத இறுதிக்குள் இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • திருநள்ளாறு கோயிலில் புதிய இந்திர விமானம்…

    திருநள்ளாறு கோயிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட இந்திர விமானத்தில், சனீஸ்வரருக்கான சப்பரத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள பழைமையான இந்திர விமானம் காரைக்கால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், திருநள்ளாறு கோயிலுக்கென்று தனியாக இந்திர விமானம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. நன்கொடை மூலம் ரூ.11 லட்சத்தில் புதிதாக இந்திர விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    புதிய இந்திர விமானம் தரைமட்டத்திலிருந்து 15 அடி உயரம், 6.5 அடி அகலத்தில் பர்மா தேக்கு மரத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3.5 டன் ஆகும். மேலும், கோயில் நிர்வாகத்தின் செலவில் பெல் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலாவுக்கென இரும்பால் சப்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • வீட்டில் வைத்து வணங்க கூடிய தெய்வங்கள்….

    வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்.
    பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
    அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.
    எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.
    குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.
    ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.
    அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.
    ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.
    குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.
    தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.
    ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
    லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
    சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
    ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.
    கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.
    அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.
    துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.
    சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும்.

  • வீட்டில் வைத்து வணங்க கூடிய தெய்வங்கள்….

    வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்.
    பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
    அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.
    எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.
    குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.
    ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.
    அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.
    ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.
    குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.
    தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.
    ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
    லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
    சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
    ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.
    கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.
    அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.
    துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.
    சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும்.

  • ஓணம் பண்டிகைக்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை ….

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
    உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.