Author: cmsadmin

  • சபரிமலையில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை பணிகள் துவங்கின…

    சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
    சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
    மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.

    2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • சபரிமலையில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை பணிகள் துவங்கின…

    சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
    சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
    மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.

    2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • திருப்பதியில் காணிக்கை முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம்….

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.
    வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.
    திருப்பதியில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக முடி ஒவ்வொரு மாதமும் ஏலம் விடப்படுகிறது.
    இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
    ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • ஜயேந்திரர் சிறப்பு வழிபாடு

    காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள மடத்துக்கு சிறப்பு பூஜைக்காக சென்றிருந்த ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கு பூஜைகள் முடிந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குத் திரும்பினார்.

    அங்கு அவருக்கு பக்தர்கள், மடத்தின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி பிற்பகலில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஜயேந்திரர் சென்றார். அங்கு கோயில் நிர்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சங்கராச்சாரியார் கலந்து கொண்டு வழிபட்டார்.

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா….

    பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா அக்டோபர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி காலை 10 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. அக்டோபர் 1ம்தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது.

    காலை 8 மணிக்கு நடக்கும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

  • கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு….

    கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.

    தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  • கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு….

    கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.

    தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  • திருப்பதி திருக்குடை ஊர்வலம் …..

    இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

    திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் திருக்குடை ஊர்வலம் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு பிரமோற்சவத்தன்று சென்றடையும்.
    இதன்படி இந்தாண்டு செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 21 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்குகிறது.
    திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் பெருமாள் கோயில்-வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு குடைகள் யானைக்கவுனியை கடக்கிறது. அன்று இரவு அயனாவரம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஏகாங்கிபுரம் துளசிவணமால ஸ்ரீ பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பூஜை முடிந்து திருக்குடை ஊர்வலம் புறப்படும். அன்றைய தினம் இரவு ஆவடி ஸ்ரீ கல்யாணராமர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 28ம் தேதி காலை ஆவடி சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. அன்றைய தினம் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் திருவள்ளூர் வீரராகவர் கோயில் சென்று இரவு புத்தூர் தர்மராஜா கோயிலில் தங்குகிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் அலமேலு மங்காபுரம் வழியாக திருப்பதிக்கு சென்றடைந்து பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. 30ம் தேதி திருப்பதி கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது.

  • திருப்பதி திருக்குடை ஊர்வலம் …..

    இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

    திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் திருக்குடை ஊர்வலம் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு பிரமோற்சவத்தன்று சென்றடையும்.
    இதன்படி இந்தாண்டு செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 21 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்குகிறது.
    திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் பெருமாள் கோயில்-வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு குடைகள் யானைக்கவுனியை கடக்கிறது. அன்று இரவு அயனாவரம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஏகாங்கிபுரம் துளசிவணமால ஸ்ரீ பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பூஜை முடிந்து திருக்குடை ஊர்வலம் புறப்படும். அன்றைய தினம் இரவு ஆவடி ஸ்ரீ கல்யாணராமர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 28ம் தேதி காலை ஆவடி சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. அன்றைய தினம் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் திருவள்ளூர் வீரராகவர் கோயில் சென்று இரவு புத்தூர் தர்மராஜா கோயிலில் தங்குகிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் அலமேலு மங்காபுரம் வழியாக திருப்பதிக்கு சென்றடைந்து பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. 30ம் தேதி திருப்பதி கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது.

  • ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்த இரண்டாவது உண்டியல்

    பக்தர்களின் வசதிக்காக திருமலை ஏழுமலையான் கோவிலில், இரண்டாவது உண்டியலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
    நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை உண்டியலில் காணிக்கையாக கிடைக்கிறது.
    உண்டியல் மூலம் ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்; 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைக்கின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் போது, உண்டியலில் காணிக்கை செலுத்த வெகுநேரம் காத்திருக்க நேரிடுகிறது.எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களின் வசதிக்ககாக கோவிலுக்குள் மற்றொரு உண்டியலை ஏற்படுத்த, ஆகம பண்டிதர்களிடம் தேவஸ்தானம் ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள் அனுமதி வழங்கியதால், தற்போது உள்ள உண்டியல் அருகே, இரண்டாவது புதிய உண்டியலை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.