Author: அட்மின்

  • January is a lucky month for these zodiac signs! Everything will be good!

    மேஷம்:

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன் –  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  குரு ()  –  பஞ்சம ஸ்தானத்தில் கேது –  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  லாப  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  என கிரக நிலைகள் உள்ளன.

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026  அன்று புதன்  பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப்பற்றியும்  அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவசொல் வாங்க நேரிடும்..

    தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.

    பெண்கள் எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

    கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவைமுன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

    அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

    மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.

    பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

     

  • The Makara Vilakku festival begins today! The chants of ‘Swamiye Saranam Ayyappa’ will once again resonate in Sabarimala!

    ஐயப்பனின் பொன்னம்பலம் மீண்டும் திறக்கிறது! இன்று மாலை மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்! 
    சுவாமியே சரணம் ஐயப்பா!

    சபரிமலை திருத்தலத்தில், கோடிக்கணக்கான பக்தர்களின் இதயத் துடிப்பாய் விளங்கும் மணிகண்டனின் சந்நிதானம், இன்று மாலை மகரவிளக்கு பெருவிழாவிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

    மண்டல பூஜையின் மகத்தான நிறைவு 
    நடப்பு ஆண்டின் மண்டல கால பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17-ஆம் தேதி முதல் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இருமுடி ஏந்தி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், "சாமியே சரணம்" என்ற கோஷத்துடன் ஐயப்பனைத் தரிசித்தனர். இந்த சீசனின் முதல் சிகர நிகழ்வான மண்டல பூஜை கடந்த சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    இன்று மாலை மீண்டும் திறக்கும் நடை! 
    தற்போது, மண்டல காலத்தைத் தொடர்ந்து வரும் மிக முக்கியமான மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

    சிறப்பு நிகழ்வு: சபரிமலை தந்திரியின் முன்னிலையில், மேல்சாந்தி அவர்கள் திருநடையைத் திறந்து வைப்பார்.

    வழிபாடு: நடை திறக்கப்பட்டதும் தீபாராதனை நடைபெறும். ஐயப்பனின் திவ்ய ரூபத்தைக் காணத் தற்போதே பம்பை மற்றும் சந்நிதானத்தில் பக்தர்கள் கூட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

    ஜனவரி 14: அந்த அற்புதத் தருணம்! 
    மகரவிளக்கு காலத்தின் உச்சகட்ட நிகழ்வான, உலகமே ஆவலுடன் காத்திருக்கும் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி (மகர சங்கராந்தி அன்று) நடைபெற உள்ளது. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய்க் காட்சி தரும் ஐயப்பனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போதே விரதமிருந்து மலைக்கு வரத் தயாராகி வருகின்றனர்.

    ஆன்மீக அன்பர்களே! இந்த மகரவிளக்கு காலத்தில் அந்த ஐயப்பனின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

  • Vaikuntha Ekadashi: The ‘Gateway to Heaven’ opens in Tirupati!

    ஓம் நமோ வேங்கடேசாய: திருப்பதியில் திறக்கப்பட்டது வைகுண்ட வாசல்! தங்க ரதத்தில் ஏழுமலையான் உலா! 

    திருமலை திருப்பதி திருத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி எனும் மகா புண்ணிய தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிந்தா முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டுள்ளனர்.

    முக்கிய பிரமுகர்கள் தரிசனம் 
    தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் நடை திறக்கப்பட்டதும், முதலில் முக்கியப் பிரமுகர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்து அருள்பெற்றனர். காலை 6 மணி முதல் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தங்க ரதத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி 
    இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி பொன்னிறமாக ஜொலிக்கும் தங்க ரதத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளிலும் சுவாமி உலா வந்தபோது, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆராதனை காட்டி பரவசத்துடன் வழிபட்டனர்.

    பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் கனிவான வேண்டுகோள் 
    டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும்: இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    இலவச தரிசனம்: நேரடி இலவச தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஜனவரி 2 முதல்: நேரடி இலவச தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) மீண்டும் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்கும்.

    பக்தர்களுக்கான வசதிகள் (அன்னதானம் & லட்டு)  லட்டு
    தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி அவர்கள் கூறுகையில், வரும் 8-ம் தேதி வரை தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள், டீ, காபி மற்றும் குழந்தைகளுக்குப் பால் வழங்கப்படுகிறது.

    சுவாமி பிரசாதமாக 4.50 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

    பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் எளிதாக தரிசனம் பெறலாம்.

    இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில், அந்த வேங்கடவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திப்போம்! 

  • Thiruvannamalai Margazhi Full Moon Girivalam 2026 Complete Details!

    திருவண்ணாமலை மார்கழி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

     "நினைத்தாலே முக்தி தரும்" திருத்தலமான திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

     

    கிரிவல நேரம் மற்றும் விபரங்கள்:

    பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், மலையையே சிவனாகக் கருதி பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி திதி தொடக்கம் மற்றும் முடிவு நேரங்கள் பின்வருமாறு:

    • பவுர்ணமி தொடக்கம்: வருகிற ஜனவரி 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி திதி தொடங்குகிறது.
    • பவுர்ணமி நிறைவு: மறுநாள் ஜனவரி 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு பவுர்ணமி திதி நிறைவடைகிறது.

    கோவில் நிர்வாகத்தின் அறிவிப்புப்படி, இந்த இடைப்பட்ட கால நேரமே கிரிவலம் செல்வதற்கு மிகவும் உகந்த நேரமாகும்.

     

    மாவட்ட நிர்வாகத்தின் முன்னேற்பாடுகள்:

    மார்கழி மாதக் குளிர் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன:

     

    • அடிப்படை வசதிகள்: கிரிவலப் பாதை நெடுகிலும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • போக்குவரத்து: பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • பாதுகாப்பு: கிரிவலப் பாதையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மலையே சிவனாகக் காட்சியளிக்கும் இந்த புண்ணிய பூமியில், மார்கழி மாத அதிகாலைக் குளிரில் கிரிவலம் வருவது பக்தர்களுக்கு அளவற்ற மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும் என நம்பப்படுகிறது.

     

  • To make your dream of owning a home come true… a 2000-year-old sacred site that completely eliminates Vastu defects! (An amazing place praised by Agastya)

    சொந்த வீடு கனவை நனவாக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் திருக்கோவில்

    சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால், இடம் வாங்குவதில் சிக்கல், வாஸ்து தோஷம் அல்லது பணத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பலரது கனவு தள்ளிப்போகலாம். இத்தகு தடைகளை நீக்கி, விரைவில் கிரகப்பிரவேசம் செய்ய வழிவகுக்கும் ஒரு உன்னத தலம் தான் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில்.

     

     கோவிலின் சிறப்பம்சங்கள்:

    • பழமை: சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தலம்.
    • அகத்தியர் வாக்கு: பூமியில் உள்ள 16 வகையான நிலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தலம் என்று அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.
    • தனித்துவமான நவக்கிரகங்கள்: இங்குள்ள அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியே அமைந்துள்ளன. மேலும், ராகு மற்றும் கேது பகவான்கள் சர்ப்ப வடிவில் இல்லாமல் முழு உருவத்துடன் (மனித வடிவில்) காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.
    • சுயம்பு லிங்கம்: இத்தல இறைவன் பூமிநாதர் சுயம்புவாக, சற்றுச் சாய்ந்த கோலத்தில் பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
    • ஸ்ரீ மகாமேரு: அம்பாள் தர்மசம்வர்த்தினி சன்னதிக்கு முன்பாக ஸ்ரீ மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

     

    தல வரலாறு மற்றும் வாஸ்து புருஷன் தோற்றம்:

    • சிவபெருமான் அந்தகாசுரனை வதம் செய்தபோது, ஈசனின் நெற்றி வியர்வையில் இருந்து ஒரு பூதம் உருவானது. அது உலகை அழிக்க முற்பட்டபோது, தேவர்கள் அதனை நிலத்தில் குப்புறக் கவிழ்த்து அழுத்திப் பிடித்தனர்.
    • அந்தப் பூதம் பசியால் உணவிற்காக வேண்ட, ஈசன் அதற்கு 'வாஸ்து புருஷன்' என்று பெயரிட்டார்.
    • பூமியில் மக்கள் வீடு கட்டும்போது செய்யும் பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் வாஸ்து புருஷனைச் சென்றடையும் என்றும், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அவர் விழிப்பார் என்றும் வரம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்த இடமே பூமிநாதர் கோவில்.

     

    வழிபாட்டு முறைகளும் பலன்களும்:

    • பூமாதேவி வழிபாடு: பூமாதேவி இத்தல இறைவனை வணங்கியே பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
    • வாஸ்து பூஜை: வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்களில் (வாஸ்து நாட்களில்) இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு, வீடு கட்டுவதில் உள்ள அனைத்துத் தடைகளும் நீங்கும்.
    • செவ்வாய்க்கிழமை வழிபாடு: வாஸ்து நாட்களில் வர முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் வந்து பூமிநாதரை வழிபட்டால் நிலம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.
    • பட்டை லிங்க ரகசியம்: பூமாதேவி ஒவ்வொரு யுகத்திலும் சந்தனம், மஞ்சள், வெண்ணெய் போன்ற காப்புகளைச் சாத்தி வழிபட்டதால், லிங்கத்தில் பட்டைகள் உருவானதாக வரலாறு கூறுகிறது.

     

    முக்கியத் திருவிழாக்கள்:

    இக்கோவிலில் சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

     

    முடிவுரை: வாஸ்து தோஷத்தால் வீடு பாதியில் நின்றாலோ அல்லது இடம் வாங்கியும் வீடு கட்ட முடியாமல் இருந்தாலோ, ஒருமுறை மண்ணச்சநல்லூர் சென்று பூமிநாதரையும் தர்மசம்வர்த்தினி அம்பாளையும் தரிசித்து வாருங்கள். உங்கள் இல்லக் கனவு நனவாகும்!

  • 5 sacred temples that grant the blessing of childbirth

    தொட்டில் சத்தம் கேட்கவில்லையே என்ற ஏக்கம் இனி வேண்டாம்! காலம் கடந்து போகலாம், ஆனால் இறைவனின் கருணைக்குக் காலமில்லை. மருத்துவம் திகைக்கும் போது, மந்திரங்கள் பலன் தரும். பல்லாயிரக்கணக்கான தம்பதியருக்கு "பிள்ளைச் செல்வம்" எனும் மகா வரத்தை அள்ளித்தந்த 5 புனிதத் தலங்களின் ரகசியங்கள் இதோ:

    1. அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் – திருக்கருகாவூர்

    "கருவைத் தந்து, காக்கும் கருணைத் தாய்" தஞ்சை மண்ணில் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன், வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தாயாகத் திகழ்கிறாள்.

    தெய்வீக ரகசியம்: இங்கு அம்பிகையின் பாதத்தில் வைத்து பூஜித்து வழங்கப்படும் மந்திர நெய் பிரசாதம் மகத்துவமானது. நம்பிக்கையோடு 40 நாட்கள் இதனை அருந்தி வர, கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்கி, அம்பிகையே கருவில் குழந்தையாக இருந்து காப்பார் என்பது ஐதீகம்.

    2.  குக்கே சுப்ரமணியர் திருக்கோவில் – கர்நாடகா

    "நாக தோஷம் போக்கும் ஞானத்தலம்" பித்ரு தோஷம் அல்லது நாக தோஷத்தினால் புத்திர பாக்கியம் தள்ளிப் போவோருக்கு இது ஒரு புகலிடம்.

    தெய்வீக ரகசியம்: குமாரதாரா நதியில் நீராடி, தூய மனதோடு சர்ப சம்ஸ்கார பூஜை செய்வதன் மூலம் சந்ததி தழைக்கத் தடையாக இருக்கும் கர்ம வினைகள் யாவும் கதிரவனைக் கண்ட பனி போல விலகும். முருகப்பெருமானின் பேரருள் மழலையாக மலரும்.

    3. மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் – மதுரை

    "தாயாக வந்து தாரணி காத்தவள்" குழந்தை வேண்டி யாகம் வளர்த்த பாண்டிய மன்னனுக்கு மகளாகவே வந்து அவதரித்தவள் அன்னை மீனாட்சி.

    தெய்வீக ரகசியம்: அங்கயற்கண்ணி அன்னை வீற்றிருக்கும் இந்த மண்ணில் கால் பதிப்பதே பெரும் புண்ணியம். "எனக்கு ஒரு குழந்தையைத் தா" என்று அன்னையின் சந்நிதியில் கண்ணீர் மல்க வேண்டும் பக்தர்களுக்கு, அவள் தனது கருணைக் கண்களால் பார்த்து மழலை வரத்தை அருள்கிறாள்.

    4. சந்தான வேணுகோபால சுவாமி கோவில் – கர்நாடகா

    "கண்ணனே பிள்ளையாக வந்துதிக்கும் தலம்" சோழர் காலத்துப் பழமை வாய்ந்த இக்கோவில், கிருஷ்ண பரமாத்மாவின் மழலைத் திருவுருவத்திற்குப் பெயர் பெற்றது.

    தெய்வீக ரகசியம்: இங்குள்ள லட்டு கிருஷ்ணனை மடியில் வைத்து வேண்டிக் கொள்ளும் போது, நம் உள்ளத்தில் பக்திப் பரவசம் பொங்கும். இங்கு செய்யப்படும் சந்தான கோபால யாகம், உங்கள் இல்லத்தில் அந்தப் பரந்தாமனையே ஒரு பிள்ளையாக அவதரிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.

    5.மன்னர்சாலா நாகராஜர் கோவில் – கேரளா

    "நாக தேவதைகளின் நல்லாசி" கேரள மாநிலத்தி
    ன் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் வீற்றுள்ள இந்த ஆலயம், ஒரு தவச் சாலையைப் போன்றது.

    தெய்வீக ரகசியம்: இங்குள்ள பெண் பூசாரி (அம்மா) முன்னிலையில் செய்யப்படும் 'உருளி கமழ்த்துதல்' சடங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. வேண்டிக்கொண்ட பின் வழங்கப்படும் அந்தத் தெய்வீக மஞ்சள் பிரசாதம், தீராத பிணிகளை நீக்கி இல்லத்தில் தொட்டில் சத்தம் கேட்கச் செய்யும்.

  • 6 important temples in Tamil Nadu that remove obstacles to marriage: Rituals and benefits!

    திருமணத் தடைகள் நீங்கி விரைவில் சுபயோகம் கூடி வர தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்!
    திருமணம் தள்ளிப் போவது அல்லது ஜாதக ரீதியான தடைகளால் மனவருத்தத்தில் இருப்பவர்கள், தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சக்திமிக்கக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் விரைவில் வரன் அமையும் என்பது ஐதீகம். அந்த வகையில் திருமண வரமருளும் முக்கியக் கோவில்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் இங்கே:

    1. திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் (கும்பகோணம்)
    திருமணத் தடை நீக்கும் தலங்களில் முதன்மையானது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி.

    வழிபாடு: இங்கு மாலைகள், மஞ்சள், தேங்காய், குங்குமம், சீரகம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சமர்ப்பித்து 'கல்யாண அர்ச்சனை' செய்ய வேண்டும்.

    விசேஷ நடைமுறை: அர்ச்சனை செய்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்து வந்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாறாக்கி அருந்த வேண்டும்.

    பலன்: எவ்வளவு மோசமான தடைகள் இருந்தாலும், இந்த வழிபாட்டிற்குப் பின் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

    2. நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் (திருவிடந்தை, சென்னை)
    சென்னை – மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள இத்தல பெருமாள், 360 கன்னிகைகளை மணம் புரிந்தவராகக் கருதப்படுகிறார்.

    வழிபாடு: ஒரு ஜோடி மாலைகளை வாங்கி அர்ச்சனை செய்து, அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டு கோவிலை 9 முறை சுற்றி வர வேண்டும்.

    தொடர் வழிபாடு: அர்ச்சனை செய்த மாலையை வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதியாக வந்து, பழைய மாலையை அங்குள்ள தல விருட்சத்தில் போட்டுவிட்டு மீண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    3. திருவிண்ணைநகர் ஒப்பிலியப்பன் கோவில் (கும்பகோணம்)
    108 திவ்ய தேசங்களில் 13-வது ஆலயமாகத் திகழும் இக்கோவிலில், விசேஷமான திருமணக் கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

    சிறப்பு: இங்கு பெருமாள் கோகிலாம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட திருமணக் கோலத்திலேயே அருள் பாலிக்கிறார்.

    வழிபாடு: இங்கு முறைப்படி செய்யப்படும் வேத சடங்குகள் திருமணத் தடைகளை வேரோடு நீக்கும் வல்லமை கொண்டவை.

    4. தென் திருப்பதி (சிவன் கோவில்)
    திருப்பதி பாலாஜியின் மூத்த சகோதரராகக் கருதப்படும் விஷ்ணு பகவான் இங்கு குடி கொண்டுள்ளார்.

    வழிபாடு: பாவ விமோசனம் பெற திருவோண நட்சத்திரத்தன்று சந்தனம் மற்றும் குங்குமத்தைச் சமர்ப்பிக்கலாம்.

    பலன்: மணி, ஆரத்தி கரண்டி போன்ற பூஜைப் பொருட்களைத் தானமாக வழங்குவது முன்வினைப் பாவங்களை நீக்கி, தம்பதிகளிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும்.

    5. மாங்கல்யேஸ்வரர் கோவில் (இடையத்துமங்கலம், லால்குடி)
    மாங்கல்ய மகரிஷியால் வழிபடப்பட்ட இக்கோவில், திருமண வரமளிப்பதில் மிகவும் புகழ்பெற்றது.

    சிறப்பு: வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற முனிவர்களின் திருமணங்களே இந்த இறைவனின் அருளால் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

    நட்சத்திர வழிபாடு: உத்திர நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுவது மிகவும் விசேஷம். பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் கல்யாணோத்ஸவம் மிகச் சிறப்பு வாய்ந்தது.

    6. ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் (சீனிவாச மங்காபுரம்)
    திருப்பதிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் சீனிவாசன் – பத்மாவதி தாயார் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

    வழிபாடு: இங்கு நடைபெறும் 'கல்யாண உற்சவத்தில்' கலந்து கொண்டு இறைவனை வேண்டினால் திருமணத் தோஷங்கள் நீங்கும்.

    கங்கணப் பிரசாதம்: வழிபாட்டின் முடிவில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் கங்கணத்தை வலது கையில் கட்டிக் கொண்டால், விரைவிலேயே கெட்டி மேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

    குறிப்பு: உங்கள் ஜாதக ரீதியான தோஷங்களுக்கு ஏற்ற கோவிலைத் தேர்ந்தெடுத்து, முழு நம்பிக்கையுடன் வழிபட்டால் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.

  • Lord Murugan of Siruvapuri grants you your own home: Six weeks of worship and your sorrows will be dispelled!

     

    "வீடு கட்ட ஆசைப்பட்டாலும், கல்யாண வரம் தேடினாலும் ஆன்மீக அன்பர்களின் முதல் விருப்பம் – சிறுவாபுரி!" சென்னைக்கு அருகிலேயே இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஒரு தலம் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

     

    ராமாயணத்தோடு ஒரு தொடர்பு!

    ராமாயணப் போர் முடிந்து சீதா தேவி தனது பிள்ளைகளான லவ-குசாவுடன் வனத்தில் தங்கியிருந்தபோது, முருகப் பெருமானும் தனது மனைவி வள்ளியுடன் அதே வனப்பகுதிக்கு வந்தாராம். சிறுவர்கள் (லவ-குசா) தங்கிய புரி என்பதால் இது 'சிறுவாபுரி' எனப் பெயர் பெற்றது. லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபட்டுள்ளனர்.

     

    ஏன் இங்கு செல்ல வேண்டும்?

    • சொந்த வீடு அமைய: நிலபுலன்கள் வாங்கவும், சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் சிறுவாபுரி முருகன் ஒரு கண்கண்ட தெய்வம்.
    • திருமணத் தடை நீங்க: வள்ளி-முருகன் திருமண ஜோடியாக இங்கு வந்து தங்கியதால், இங்கு வேண்டிக்கொண்டால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து கைகூடும்.
    • கல்வி & செல்வம்: இங்கு வந்து வழிபட்டால் நோய் நொடிகள் விலகும், செல்வம் சேரும். இது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

     

    பக்திக்குக் கிடைத்த பரிசு: முருகம்மையின் கதை

    இத்தலத்தின் தீவிர பக்தை முருகம்மை. அவர் எப்போதும் முருகன் நாமத்தையே சொல்லிக்கொண்டிருக்க, ஆத்திரமடைந்த அவரது கணவன் அவளது கையை வெட்டி எறிந்தான். கதறி அழுத அம்மையின் பக்திக்கு மெச்சி, முருகன் நேரில் காட்சியளிக்க… வெட்டப்பட்ட கை சுவடே தெரியாமல் மீண்டும் இணைந்ததாம்!

     

    ஆலயத்தின் தனிச்சிறப்புகள்:

    • பச்சை மரகதக் கல்: இக்கோவிலின் மூலவரைத் தவிர மற்ற அனைத்து சிலைகளும் அபூர்வமான பச்சை நிறக் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன.
    • சன்னதிகள்: அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், ஆதி விநாயகர், நாகர், பைரவர் மற்றும் அருணகிரிநாதருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. கொடிமரத்தின் முன் வீற்றிருக்கும் பிரம்மாண்ட பச்சை மயில் மிகவும் விசேஷமானது.
    • 6 வார வழிபாடு: தொடர்ந்து 6 வாரங்கள் இங்கு வந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

     

    எங்கே இருக்கிறது?

    சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கோயம்பேட்டிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

     

     

  • Srivilliputhur: The wonders of the 196-foot tall Rajagopuram and the secrets of Andal!

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்: தமிழக அரசின் சின்னமான கோபுரமும்… தீராத அதிசயங்களும்!

    தமிழகத்தின் ஆன்மீக அடையாளமாகவும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையாகவும் திகழ்வது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலய ராஜகோபுரம். பக்தி, கலை மற்றும் அதிசயங்கள் நிறைந்த இந்த ஆலயத்தின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் இதோ:

    ஆண்டாள்: அவதாரமும் திருமண வைபவமும்

    • துளசித் தோட்டம்: பெரியாழ்வாரின் தவப்பயனால், நள வருடம் ஆடி மாதம் வளர்பிறை சதுர்தசியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமையன்று துளசி வனத்தில் மகளாகக் கிடைத்தவள் ஆண்டாள்.

    • திருமண யோகம்: ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள 'வாரணமாயிரம்' எனத் தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களைத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னிப் பெண்கள் தினமும் பாடினால், விரைவில் மண வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

    • மாப்பிள்ளைத் தோழர்: ஆண்டாளின் திருமணத்திற்குப் பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடாழ்வார். அதனால் அவரும் இங்கே மாப்பிள்ளைத் தோழராகப் பெருமாளின் அருகேயே வீற்றிருக்கிறார்.

    ஆலயத்தின் பிரம்மாண்டமும் கட்டிடக்கலையும்

    • ராஜகோபுரம்: 11 நிலைகள் மற்றும் 11 கலசங்களுடன் 196 அடி உயரம் கொண்ட இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாகப் போற்றப்படுகிறது.

    • வீடே ஆலயம்: பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே, கி.பி. 14-ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக மாற்றப்பட்டது.

    • சிற்பக் கலை அதிசயம்: இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில், நாசியும் கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பிகளின் கைவண்ணத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.

    • வற்றாத நீர்: தண்ணீர் பஞ்ச காலத்திலும் ஆலய முன்புறமுள்ள கிணற்றில் நீர் வற்றுவதில்லை; அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்றும் எவராலும் அறிய முடியாத மர்மம்.

    ரங்கமன்னார் – மாப்பிள்ளை கோலம்!

    • மாடர்ன் பெருமாள்: உற்சவர் ரங்கமன்னார் (ராஜமன்னார்) விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், மாப்பிள்ளை கோலத்தில் அந்த கால நிஜார் (கால்சட்டை) மற்றும் சட்டை அணிந்து காட்சியளிப்பது உலகிலேயே எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.

    • தொடையழகு: மன்னாருக்குத் தொடையழகு என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை என்றால் மாலை) அணிந்து ரங்கமன்னார் காட்சி தருவதைக் காணக் கண்கள் கோடி வேண்டும்.

    ஆண்டாள் தரிசனமும் அதிசய நிகழ்வுகளும்

    • கண்ணாடிக் கிணறு: தான் சூடிய பூமாலையுடன் ஆண்டாள் அழகு பார்த்த கிணறு இது. இன்றும் இது 'கண்ணாடிக் கிணறு' என அழைக்கப்படுகிறது.

    • மூக்குத்தி அதிசயம்: மார்கழி எண்ணெய்க்காப்பு உற்சவத்தின்போது, தங்க மூக்குத்தியை ஆண்டாளின் மூக்கருகே கொண்டு சென்றால், அது தானாகவே அவர் மூக்கில் ஒட்டிக்கொள்ளும் அதிசயம் இன்றும் நடக்கிறது.

    • பச்சைக்கிளி: ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி தினமும் புதிய இலை மற்றும் பூக்களால் செய்யப்படுகிறது. இதனைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.

    • சுயம்பு தரிசனம்: கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி பூதேவி சமேத வடபத்ரசாயியைத் தரிசிக்கலாம். அவருடன் பிருகுமுனி, மார்க்கண்டேயர், நாரதர் உள்ளிட்ட தேவர்கள் புடைசூழக் காட்சி தருகின்றனர்.

    அழகரும் ஆண்டாளும் – ராமானுஜர் உறவு

    • கள்ளழகர் மரியாதை: மதுரை வைகையாற்றில் இறங்கும் முன், கள்ளழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே ஆற்றில் இறங்குகிறார்.

    • அண்ணன் ராமானுஜர்: கள்ளழகருக்கு அக்காரவடிசல் நிவேதிக்க நினைத்த ஆண்டாளின் ஆசையை ராமானுஜர் நிறைவேற்றியதால், அவரை 'என் அண்ணன் அல்லவோ' என ஆண்டாள் வரவேற்றதாக வரலாறு கூறுகிறது.

    • நலமும் செல்வமும் தரும் வழிபாடு

    • காராம்பசு தரிசனம்: தினமும் விடியற்காலையில் காராம்பசு ஒன்று சன்னதி முன் நிற்கும். தேவி கண்விழிக்கும்போது அவளது பார்வை பசுவின் பின்புறம் விழுவது வழக்கம்.

    • செல்வம் பெருக: நந்தவனத்தில் உள்ள துளசி மாடத்து மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டாலோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்றாலோ செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    • மூலிகை தைலம்: 61 வகை மூலிகைகளுடன் 40 நாட்கள் காய்ச்சப்படும் 'எண்ணெய்க்காப்பு தைலம்' ஒரு சர்வரோக நிவாரணியாக (அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து) கருதப்படுகிறது.

  • 20 rare Varadaraja temples of Tamil Nadu and their secrets!

    அருள் தரும் வரதராஜர்: தமிழகத்தின் 20 அபூர்வத் தலங்களும் ஆச்சரியத் தகவல்களும்!
    "வரம் தருவதில் இவருக்கு நிகர் எவருமில்லை" என்று போற்றப்படும் வரதராஜப் பெருமாள், தமிழகமெங்கும் பல்வேறு திருநாமங்களுடன் வினோதமான கோலங்களில் எழுந்தருளியுள்ளார். அந்தந்த தலங்களின் சிறப்புகளை இங்கே விரிவாகக் காண்போம்.

    அதிசயக் கோலமும் அபூர்வ வழிபாடுகளும்
    •    கல்லங்குறிச்சி (அரியலூர்): இங்கு கருவறையில் சிலைக்குப் பதிலாக 12 அடி உயரக் கம்பத்தை அனுமன் தாங்கிக்கொண்டிருக்கும் திருவுருவமே மூலவராக உள்ளது. விசேஷமாக, இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படுவதில்லை.
    •    நல்லாத்தூர் (கடலூர்): வரதராஜப் பெருமாளுக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்குத் திருமஞ்சனம் செய்து 8 முறை வலம் வந்தால் கல்வி மற்றும் செல்வம் பெருகும்.
    •    எண்ணா நகரம் (சிதம்பரம்): கண்ணங்குடியில் அருளும் வரம் தரும் ராஜர், வேண்டும் வரங்களை உடனே தருவதால் இப்பெயர் பெற்றார். இத்தல அனுமன் கையில் ஜபமாலை ஏந்தியிருப்பது சிறப்பு. இது ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம்.

    கோவை மற்றும் கொங்கு மண்டலத் தலங்கள்
    •    உக்கடம் (கோவை): இத்தலத்தில் உத்ராயணம் மற்றும் தட்சிணாயணம் என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள ஹயக்ரீவர் கல்வி வரம் அருள்பவராகப் போற்றப்படுகிறார்.
    •    கொழுமம் (கோவை): இத்தல தாயார் வேதவல்லிக்கு வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யப்படுவது தனிச்சிறப்பு.
    •    விக்னேஷ் நகர் (கோவை): உற்சவர் வடிவழகிய நம்பி என்று அழைக்கப்படுகிறார். மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கருதப்படும் வில்வ மரம் இத்தல விருட்சம். பௌர்ணமி தோறும் இங்கு சத்யநாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

    சென்னை மற்றும் வட தமிழகத் தலங்கள்
    •    பூந்தமல்லி (சென்னை): புஷ்பவல்லி தாயாருடன் அருளும் வரதராஜர், தன் தலைக்கு பின்னே சூரியனுடன் காட்சி தருவதால் இது 'சூரிய தோஷ நிவர்த்தி' தலம். திருக்கச்சி நம்பிகள் பாடிய 'தேவராஜ அஷ்டகம்' இங்கு பிரபலம்.
    •    காலடிப்பேட்டை (சென்னை): தாமரை வடிவ பீடத்தில் நவகிரகங்கள் அமைந்திருப்பது விசேஷம். உற்சவர் பவளவண்ணர் கையில் தண்டம் ஏந்தி காட்சி தருகிறார்.
    •    வந்தவாசி (நல்லூர்): இத்தல கருடாழ்வார் பெருமாளின் காலடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை பரிந்துரைப்பதால் 'பரிந்துரைக்கும் கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.
    •    கச்சிராயப்பாளையம் (விழுப்புரம்): ராஜகோபுரம் இல்லாத இந்த ஆலயத்தில் 'யானைக் குகை' எனும் சுரங்கக் குன்று உள்ளது.

    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத் தலங்கள்
    •    காஞ்சிபுரம்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர் மற்றும் தோஷம் போக்கும் தங்கம், வெள்ளி பல்லிகள் உலகப் புகழ்பெற்றவை. ராபர்ட் கிளைவ் வழங்கிய ஆபரணங்கள் இன்றும் இங்கு சாத்தப்படுகின்றன.
    •    அருங்குளம் (திருத்தணி): இத்தல கல்யாண வரதருக்கு வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
    •    சூளகிரி: அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகக் கருதப்படும் இத்தலத்தில் எல்லாமே ஏழு மயமாக (ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு வாசல்) உள்ளது. இங்கு 7 அடி உயர வரதராஜர் அருள்கிறார்.

    தென் தமிழகத்தின் திருநெல்வேலித் தலங்கள்
    •    அத்தாளநல்லூர்: கஜேந்திர மோட்சம் அளித்த பெருமாள். இவருக்கு 'சுத்தான்னம்' நிவேதிக்கப்படுகிறது.
    •    நெல்லை மாநகரம்: கிருஷ்ண பரமராஜன் என்ற பக்தனுக்காகப் பெருமாளே அரசன் வேடம் பூண்டு போரிட்ட தலம். இங்குள்ள மூர்த்தி நீல நிறக் கல்லால் ஆனவர்.
    •    சங்காணி: பெருமாளின் வலக்கரத்தில் 'தன ஆகர்ஷண ரேகை' இருப்பதால், பக்தர்கள் செல்வச் செழிப்பு வேண்டி அவர் கரத்தில் பணத்தை வைத்து வேண்டிக்கொள்கின்றனர்.
    •     நட்சத்திர தோஷங்களும் பிணி தீர்க்கும் தலங்களும்
    •    ஆறகழூர் (சேலம்): கமலவல்லி தாயார் 64 கலைகளும் சித்திரமாகத் தீட்டப்பட்ட ஊஞ்சலில் அருள்கிறார். தசாவதாரச் சிற்பங்களில் புத்தர் இடம்பெற்றுள்ளது இத்தல சிறப்பம்சம்.
    •    பசுபதிகோயில் (பாபநாசம்): ஆச்சாரியர் பெரிய நம்பிக்கு பார்வை மீட்டுத் தந்த தலம். கேட்டை நட்சத்திரத்தினர் இங்கு மருதாணி, கரிசலாங்கண்ணி கலந்த எண்ணெயில் தீபமேற்றினால் கண் கோளாறுகள் நீங்கும்.
    •    பெரியகுளம் (தேனி): திருப்பதி பெருமாள் போன்றே காட்சி தருகிறார். குழந்தை நலம் பெற தீபஸ்தம்பத்தின் அடியில் குழந்தைகளை வைத்துப் பழங்களை நிவேதிக்கும் வழக்கம் உள்ளது.
    •    திருத்துறைப்பூண்டி: அபீஷ்ட வரதராஜர் கோயில். இங்குள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மட்டைத் தேங்காய் கட்டி வேண்டிக்கொண்டால் ஓராண்டுக்குள் கோரிக்கை நிறைவேறும்.