Author: அட்மின்

  • Sabarimala Mandala Viradham: Rules to be followed by Lord Ayyappan devotees!

     

    கார்த்திகை மாதத்துடன் ஆரம்பமான சபரிமலை மண்டல காலத்தில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை அணிவது முதல் இருமுட்டி கட்டி பாதயாத்திரை செல்லும் வரை, ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக முறைகள் மற்றும் நெறிகள் பற்றிய முழு தகவல் இங்கே… ச்வாமியே சரணம் ஐயப்பா!

     

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் “சாமியே சரணம் ஐயப்பா” எனும் கோஷங்கள் வீதியெங்கிலும் ஒலிக்கத் தொடங்கும்.

    இந்த மாதத்தின் முதல் நாளிலேயே அதிகாலை புனித நீராடி, கோவிலில் அல்லது வீட்டில் வழிபாடு செய்து ஐயப்பனுக்கான மாலை அணிந்து விரதத்தை ஆரம்பிப்பார்கள். பல பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுவாக 41 நாட்கள் (மண்டலம்) விரதம் இருப்பார்கள். சிலர் 45 அல்லது 48 நாட்கள் கடைப்பிடிப்பதும் வழக்கம். துளசி அல்லது ருத்ராட்ச மாலை 108 அல்லது 54 மணிகளுடன் அணிய வேண்டும். விரத காலத்தில் நீலம், கருப்பு, காவி, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

    தினமும் காலை, மாலை குளித்து பூஜை செய்ய வேண்டும். கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். படுக்கும் போது பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து தரையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பொருள், உல்லாச சுற்றுலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    முதல் முறையாக மாலை அணியும் கன்னிச் சாமிகள் வீட்டில் பூஜை செய்து, ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். இருமுட்டிக்கட்டு தேங்காயை சன்னிதானத்தில் நெய் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவது சிறந்தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களை எந்த விரதச் செயலிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

    கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தினமும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முடிந்தவரை இருவேளைகளில் விரதம் இருந்து, இரவில் வாழைஇலை சாப்பாடு அருந்தலாம். முடியாதவர்கள் அன்னதானம் செய்வது சிறப்பாகும்.

    இந்த முறைகளை பின்பற்றிக், 41 அல்லது 48 நாள் விரதத்தில் ஈடுபட்டால், ஐயப்பனின் அருள் பெற்று வாழ்வு வளம் பெருகும் என நம்பப்படுகிறது. ச்வாமியே சரணம் ஐயப்பா!

  • The mantra ‘Om Namachivaya’, which appears in the Vedas as a Panchacharam, plays an important role in the worship of Shiva.

    ‘ஓம் நமச்சிவாய’ மந்திரம், பஞ்சாட்சரமாக வேதத்தில் இடம்பெற்று, சிவ உபாசனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்தி மற்றும் யோக மார்க்கத்தில் செல்பவர்கள் இதனை ஜபித்து தியானிக்கின்றனர். யோக மார்க்கத்தில், இம்மந்திரம் ஸ்தூல பஞ்சாட்சரம் (ஓம் நமச்சிவாய) மற்றும் சூக்கும பஞ்சாட்சரம் (நமசிவாய, சிவாயநம, சிவா, வசி) என பிரிக்கப்படுகிறது. மாத்திரைகளை சுருக்கி உச்சரிக்கும்போது அது சூக்குமமாகிறது என புரோகிதர்கள் விளக்குகின்றனர்.

    பிராணாயாமத்தில் பூரகம், கும்பகம், ரேசகம் ஆகியவற்றுக்கு மந்திர உச்சரிப்பு கால அளவை தீர்மானிக்க உதவுகிறது. இது பயிற்சியில் மிகுந்த பலன் தருவதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். குரு உபதேசம் இன்றி பஞ்சாட்சரத்தை ஜபித்து பலர் முக்தி பெற்றுள்ளனர். நள்ளிரவில் தூக்கமின்மையின்போது இம்மந்திரத்தை உச்சரிப்பது மன அமைதியை அளிக்கும்.

    ‘ஓம்’ என்பது அ, உ, ம, ம் மற்றும் அதன் நாதம் என ஐந்து ஒலிகளைக் கொண்டது, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், சக்தி, சிவனைக் குறிக்கிறது. இவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை மேற்கொள்கின்றன. ‘ஓம்’ உலக இயக்கத்தையும், கலைஞானம், மெய்ஞானத்திற்கு வாசலாகவும் அமைகிறது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    எனவே, எல்லா மந்திரங்களும் ‘ஓம்’ என தொடங்குகின்றன. ‘பிரணவம்’ என்றால் ‘என்றும் புதியது’ எனப் பொருள். இஷ்ட தெய்வங்களை ‘ஓம்’ எனக் கூறி வணங்குவது ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கும்.

  • Advertisement

    Advertisement for Shakthi online page

  • Light a Betel Leaf Lamp to Lord Murugan for Your Dream Home!

    சொந்த வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இல்லை. அதற்கான வைராக்கியத்துடன் இருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இப்படி வெற்றிலையில் தீபம் ஏற்றி வாருங்கள்! நிச்சயம் அதற்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். வீடு கட்ட நினைத்தால் மட்டும் போதாது, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வர வேண்டும்.

    அப்படி செய்து வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு கொள்ளுங்கள். அதில் முருகப் பெருமான் அல்லது சிலை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

    சஷ்டி திதியில் முதன் முதலாக உங்கள் செலவில் ஒரு செங்கல்லை மட்டும் வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இந்த பூஜையின் பொழுது மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு அருகில் அந்த செங்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆறு விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை நுனி மற்றும் காம்பு உடைந்து இருக்கக் கூடாது.

    கந்த சஷ்டி கவசம், முருகன் ஸ்தோத்திரங்கள், சண்முக கவசம் போன்ற முருகனுடைய அருளைப் பெறுவதற்கு உரிய ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும். பின்னர் தீபத்தை ஏற்றி, தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். நிவேதனத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் அல்லது தனக்கு விருப்பமுள்ள எந்த பிரசாதத்தையும் செய்து வைக்கலாம்.

    உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொழுது நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் இந்த செங்கல்லை கொண்டு முதன் முதலில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் இப்படி முருக வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கும் சொந்த வீடு அமையும்.
     

  • What Does Astrology Say About Foreheads and Success?

    னித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஒருவரது நெற்றியின் அமைப்பே சொல்லி விடும் என்கிறது ஜோதிடம். நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் கொழிப்பதாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்கள். விசாலமான நெற்றி இருப்பது ஞானத்தின் சின்னமாகும். இப்படியான நெற்றி கொண்டவர்கள், கல்வி, கலைகளில் சிறந்தவர்கள். சிக்கன மனப்பான்மை அளவுக்கு மீறி இருக்கும். முப்பது வயது வரை போராட்டமான வாழ்க்கை அமையும். பிறகு திருப்பம் ஏற்படும்.

    சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல்பாக இருக்கும். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். சொந்தக் காலில் நிற்பார்கள். இவர்களுக்கு அமையும் மனைவி நேர் எதிரான குணமுடையவராக இருப்பார். குடும்ப வாழ்வில் நிம்மதியும், குழந்தைகள் மூலம் வாழ்வில் உயர்வும் உண்டு.

    அடிக்கடி வியர்வை வழியும் நெற்றியை உடையவர்கள் நாவன்மை மிகுந்தவராக இருப்பர். வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலைகளில் ஒன்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கைத் துணை

    ஜாதகத்தில்  7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அழகிய வாழ்க்கைத் துணை அமைவர் என்கின்றன ஜோதிட நூல்கள். 7-ம் இடத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷமான அமைப்பாகும். அந்த ஜாதகரின் வாழ்க்கை யோகமானதாக அமையும். செல்வம், செல்வாக்கு, புகழ், உயர்ந்த உத்தியோகம், உயர்ந்த பதவி போன்றவை ஏற்படும். அழகும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். அதேநேரம் திருமணம் சற்று தாமதமாகவே நடைபெறும்.

    காகம் பூக்கள் போட்டால்…

    பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் போட்டால் அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.

    சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.