Do you also want to see the wonderful event of 63 Nayanmars throwing palm oil to Kailaya Nathan on the day of Maha Shivratri?

சிவபெருமான் தனது திருவிளையாடல் மூலம், தனது அடியார்களுக்கு பல்வேறு சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் படும் அவதியை கண்டு மகிழ் பவர் மட்டுமல்ல, அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மோட்ச நிலை வழங்குவதற்காக தானே" வெவ்வேறு வடிவங்கள் எடுத்து நேரடியாக சென்று ஆட்கொண்ட கதைகள் சிவபுராணத்தில் ஏராளம், அப்படி சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட 63 நாயன்மார்கள் குறித்து நாம் அறிந்திருப்போம், அவர்களின் வரலாற்றை தான் நாம் சிவபுராணமாக போற்றி வருகிறோம்"அந்த 63 நாயன்மார்களும் ஒரே" நேரத்தில் கூடி சிவபெருமானுக்கு பாமாலை சூட்டுவது எப்போது தெரியுமா ?

உலகத்தில் பிறளையும் ஏற்பட்டபோது. உலக உயிர்கள் அனைத்தும் அபயம் தேடி கைலாயம் சென்று சிவபெருமானின் திருவடியை பற்றின. அப்போது பார்வதி தேவி உயிரினங்களைக் காக்க சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தால், பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான். தனது கருணையால் உலகை சமப்படுத்தி மீண்டும் உயிரினங்களை படைத்தார், அப்போது பார்வதி தேவி தான் மேற்கொண்ட தவத்தின் பலன் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் சென்றடைய அருள் புரியுமாறு" இறைவனை வேண்டினாள். அதன்படி சிவபெருமான் அருளிய தினமே" மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி ஆனது" பூலோகத்தில் உள்ள ஆலயங்களில் மட்டுமல்ல ஏழு லோகங்களிலும் கொண்டாடப்படுவதாகவும், அப்போது தேவர்கள், மாமுனிகள், ரிஷிகள், கந்தவர்களும் விரதத்தை கடைப்பிடித்து கண் விழித்து சிவபெருமானை போற்றி வணங்குவார்கள்.

இதேபோன்று மானுடர்களாக அவதரித்து சிவன் ஆட்கொண்டதால் பிறப்பில்லா நிலை அடைந்து இறைவனடி சேர்ந்த 63 நாயன்மார்களும் மகா சிவராத்திரி அன்று கைலாயத்தில் ஒன்றாக கூடி சிவனைப் போற்றி பாமாலை சூட்டி வழிபடுவதாகவும், இந்த அற்புத நிகழ்வை சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் நீங்களும் காண வேண்டுமா ? அதற்கு சிவனை நோக்கி ஆழ்ந்த தியானத்தில் மனதை ஒருங்கிணை படுத்துங்கள் பின் கைலாயத்தில் இருப்பது போன்று வாவித்துக் கொண்டு ஓம் நமச்சிவாய"ஓம் நமச்சிவாய"என்ற திருமந்திரத்தை ஆத்ம ரீதியாக உச்சரித்து உங்கள் அவ கண்ணை திறந்து பாருங்கள் கைலாயநாதன் உங்கள் கண்முன்னே" முழுவதும் நாயன்மார்கள் பாமாலை சுற்றி அவரை போற்றுவதையும் நாம் உணரலாம். 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *