Karaikal nandeeswarar temple sangabishegam

காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு நித்தீஸ்வரம் ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


   
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கார்த்திகை 03வது சோமவாரம் முன்னிட்டு  அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து பால்,தயிர், மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களினால் சிவனுக்கும்,அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த நீரினால் சிவனுக்கும், அம்பாளுக்கும்  அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்வித்து மகாதீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாதம் 03வது சோமவாரம் 1008 சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *