muthumaari amman maha kumbabishegam

நெற்குன்றத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது, 1000 க்கும் மேற்ப்பட்ட  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை நெற்குன்றம் அருகே சிடிஎன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியானது இன்று வெகு விமர்சியாக  நடைபெற்றது. இதில் முத்துமாரியம்மன் க்கு அனைத்து பரிவார தேவதைகளும் ஜாரனோதாரன  அஷ்டபந்தன கும்பாபிஷேகமானது நடைபெற்றது ,முன்னதாக யாக  குண்டங்கள் வளர்த்து சிறப்பு மந்திரங்கள் ஓதி பூஜை அபிஷேககங்கள் நடைபெற்றது.இதில் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் மந்திரங்கள் ஓதி புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு  அந்த நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது . அதனை தங்கள் குடும்ப  நன்மைக்காக வீட்டிற்கு பாட்டில்களில் பிடித்து சென்று வீட்டில் வைப்பது ஐதீகம் அதன்படி பக்தர்கள் எடுத்து சென்றனர்.கோவிலுக்கு வந்த  பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக கோயம்பேடு போலீசார் திரளாக பணியில்  ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *