velli ambal eshwarar alaya kumbabishegam

கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், கிழக்கு அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் ,ஸ்ரீ தங்கம்மாள் சுவாமிகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை கட்டினர். அதைத் தொடர்ந்து மேல தாளங்கள் தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் நான்கு காலையாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் தலைவர் இன்ஜினியர் ஜெயபால் பச்சைக்கொடி காட்ட, கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா என்ற  கோஷங்கள் எழுப்பிய நிலையில் கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து கோபுர காலத்திற்கு சந்தன பொட்டிட்டு , வண்ண மாலைகள் அணிவித்து , தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் மூலவரான அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் சுவாமிக்கு நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதன் தொடர்ச்சியாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *